Skip to main content

எங்க ஊரு வாசம்: கள்ள வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!!

-பாரத தேவி 



அந்தக் காலத்துச் சிறுவர், சிறுமிகளுக்கு நாலு வயசு, மூணு வயசு ஆகும்வரை உடம்பில் துணி என்பது இருக்காது. பள்ளிக்கூடம், படிப்பு என்பதும் கிடையாது. அவர்கள் பாட்டுக்கு தெருவிலும் மந்தையிலும் புழுதியேறிய உடம்போடு எப்போதும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். பொங்கல், தீபாவளி வந்தால் மட்டுமே அவர்களின் தாய், தங்கள் கிழிந்த சேலைகளை இன்னும் அதிகமாய்க் கிழித்துப் பெண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டி அம்மணத்தை மறைப்பார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அதே கிழிந்த சேலை கோவணமாகப் பயன்படும்.

வீட்டுப் பெரியவர்கள் தாங்களே திரித்த புளிச்ச நாற்றின் கயிற்றினால் கூரையை வேய்வார்கள். இவ்வளவு நாளும் வேலை செய்து லாடம் தேய்ந்த காளைகளை கயிறு கட்டிச் சாய்த்து அதன் காலில் புது லாடம் அடிப்பார்கள். அப்போதுதானே மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஓட முடியும்! அதோடு தொலைதூர ஊர்களில் வயதாகி நடக்க முடியாமலும், கண் பார்வை மங்கிப் பார்க்க முடியாமலும் இருக்கும் தங்களின் ‘அம்மி, சீயான்' அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக வண்டிகட்டிக்கொண்டு போனார்கள்.

பாவம் அவர்கள் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடியாமல் நாக்கு செத்துக்கிடப்பார்கள். பொங்கல் திருநாளில் மூன்று நாளும், அதுவும் மூன்று வேளைக்குப் பருப்பு வெஞ்சனத்தோடு நெல்லுச் சோறு சாப்பிட்டு அதுவும் செழிக்கக் கொள்ளலாம். சொந்த பந்தங்களோடு மனம் விட்டுப் பேசி பழகலாம். பலகாரம், பண்டம், கறியோடு சோறு சாப்பிடலாம். இப்படி இன்னும் எத்தனையோ ஆசைகள் அவர்களுக்கு நிறைவேறலாம். அதனால்தான் அவர்களை வருசத்துக்கு ஒரு முறை கூட்டிக்கொண்டு வருவார்கள்.

அதோடு ஊரின் ஒதுக்குப்புறமாக ‘செக்கு' நிறுத்தியிருக்கும் சொக்கலிங்கத்துக்கு பொங்கல் நாள் நெருங்க, நெருங்க செக்கு ஆட்டி முடியாது. மூடை, மூடையாக எள்ளு, நிலக்கடலைப் பருப்பு, கருப்பட்டி வட்டுகளோடு வந்து கிடக்கும். கருப்பட்டியை இந்தக் கடலை, எள்ளோடு சேர்த்து ஆட்ட வேண்டும். அப்போதுதான் எண்ணெயும் கமறாது, ருசியாகவும் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எண்ணெய் ஆட்டிக்கொடுக்க அவரால் முடியாது.

அதனால் இத்தனை படி கடலைக்கு இத்தனை படி எண்ணெய் என்று கணக்கு வைத்து எல்லோருடைய கடலையையும் ஒன்றாகப் போட்டு ஆட்டி எண்ணெயை மட்டும் ஆளாளுக்கு அளந்து கொடுத்துவிடுவார். இதில் ஊர்ப் பெண்களுக்கு சம்மதம்தான். அது மட்டுமில்லாமல் எண்ணெய் ஆட்டி பிழிந்த எள்ளுப் புண்ணாக்கு தின்பதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். அந்தப் புண்ணாக்கை பகிர்வதோடு ஆளாளுக்கு அடுக்குப் பானையில் போட்டு பத்திரப்படுத்திவிடுவார்கள். வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தாளிகளுக்குக்கூட இது ஒரு அருமையான பண்டம்தான்.

இதில் விளக்கெண்ணையின் பங்கும் வீட்டுக்கு முக்கியமானது. தலைக்குத் தேய்ப்பதற்கு எல்லோரும் விளக்கெண்ணெய்தான் பயன்படுத்துவார்கள். அதோடு கண்ணில் தூசி விழுந்துவிட்டால் ‘அமிர்த்த பாலு'டன் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் சேர்த்துக் கண்ணில் விட்டால் தூசி ஒதுங்கிவிடும். வெயில் காலத்தில் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்குக் கையில் இந்த எண்ணெயைக் கொஞ்சம் விட்டு கொப்பூளிலும் காலின் உள் பாதத்திலும் வைத்துத் தேய்த்து விட்டால் சூடு எங்கே எங்கே என்று பறந்து ஓடும்.

வயிற்றுப் பிள்ளைக்காரிகள் ஏழு மாதத்திலிருந்து அடிவயிற்றில் இந்த எண்ணெயைச் சிறிது தடவி இளம் வெந்நீரில் குளித்தால் பிள்ளை பெறத் தோதாக உடம்பு இளக்கம் கொடுக்கும். சிலருக்கு நிறைமாதம் வருமுன்பே பிரசவ வலிபோல் வலி வந்துவிடும். அதனால் உள்ளங்கையில் கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊற்றி நக்கிச் சாப்பிட்டால் கள்ள வலியென்றால் அப்படியே நின்றுவிடும். இப்படி விளக்கெண்ணெய் உபயோகம் ரொம்ப இருந்தது.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்