Skip to main content

எங்க ஊரு வாசம்: பாரத தேவி 


புது நெல்லு புதுச் சோறு!



பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழி இந்த மாதத்துக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. போன வருசத்திலிருந்து இதுவரை ஆக்கிக்கொண்டிருந்த பழைய பானைகளையெல்லாம் கழித்துவிடுவார்கள். அப்படிக் கழிக்கும்போது கோழிகளின் அடை ஓட்டுக்காக, பயறு வகைகளை வறுப்பதற்கு வரையோட்டுக்காக, குத்தும் உரலுக்கு வாப்பட்டிக்காக, பானையின் வாவளையத்தை பிரிமணைக்குப் பதிலாக... இப்படித் தேவைக்கு ஏற்றபடி பானைகளை உடைத்துத் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வார்கள். அதோடு புதுப்பானையில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பைப் போட்டால் பானை அப்படியே விரிந்துவிடும் அதனால் அதற்கும் பழைய பானைதான் தேவைப்பட்டது.

இப்படிப் பானைகளைக் கழித்த பின் வீட்டின் கதவுகள், ஏர் கலப்பை, மோக்கா, மோனி, பின்உருளை, முன்உருளை, குத்துக்கால் என்று அனைத்தையும் தூக்கிக் கொண்டுபோய் குளத்தில் போட்டு எல்லாவற்றையும் துப்புரவாகக் கழுவி கொண்டுவருவார்கள்.

பொங்கல் வருவதற்கு முன்னால் நெல்லைத் தவிர வெவ்வேறு தானியங்களை எடுத்து புதுச் சோறு ஆக்கிவிடவேண்டும். அப்போதுதான் பொங்கலன்று நெல்லுச் சோறு ஆக்கலாம். அப்போதெல்லாம் நெல்லுச் சோறு என்பது கிடைக்காத அரிய உணவாக இருந்தது.

இப்படி ஒரு நல்ல நாள், தீய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியும். இந்தச் சோற்றைப் பொங்கலுக்குச் சாப்பிட வேண்டுமென்பதற்காகவே சாமை, தினை, குருதாலி இந்த மூன்ற தானியத்தையும் ஒன்றாகப் போட்டு அவித்து காயவைத்துக் குத்தி, புடைத்து ஒரு நல்ல நாளில் விரதமிருந்து சோறாக்குவார்கள். வாழையிலை, தேக்கு இலை இரண்டும் கிடைக்காவிட்டால் தாமரையிலை போட்டு உற்றார், உறவினர்களை எல்லாம் கூப்பிட்டு மார்கழி மாதத்திலேயே புதுச் சோறு ஆக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள்.

பொங்கல் நெருங்க, நெருங்க ஊருக்குள் இருக்கும் எல்லாருக்குமே வேலை செய்து முடியாது. துணி வெளுப்பவர் பொங்கலுக்கு எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் துணியை வெளுத்துக் கொடுக்க வேண்டுமென்று ‘வெள்ளாவி’ வைப்பதற்கு முள்ளு, மொடலு என்று எல்லாச் செடிகளையும் வெட்டிச் சேர்ப்பார். இரண்டு கழுதைகளோடு ‘உவர்மண்’ இருக்கும் இடம் தேடி தூரமான காடுகளுக்கு, வயல்களுக்குப் போய் மண்ணை அள்ளிக்கொண்டு வருவார்கள். உவர் மண்ணில் அழுக்குத் துணிகளை முக்கி வெள்ளாவியில் வைத்து அவித்து, சூடு ஆறிய பின் அடித்துத் துவைத்துப் பிழிந்து எடுத்துவிட்டால் போதும். எந்த மாதிரி கசடு அழுக்காக இருக்கும் துணிகூடப் பளிச்சென்று இருப்பதோடு உவர்மண்ணின் வாசனையில் துணிகள் கமகமக்கும்.

பெண்களுக்குப் பொங்கலுக்கான அரிசி, பருப்பு சேகரித்து வைப்பது பெரிய வேலை. ராஜகிரீடம் சூட்டியவாறு மூடைகளில் இருக்கும் நெல்லை எடுத்து அவித்துக் காயப்போட்டுக் குத்தி, அரிசியாக்க வேண்டும். நெல்லில் தோட்டச் சம்பா, புழுதிச் சம்பா, வையக்கொண்டான், மூங்கிச் சம்பா, வெள்ளைக் கொட்டான், கரு கொட்டான், மணவாரி என்று இன்னும் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைப் பானை, பானைகளாக அவித்துத் தட்டி, காயப்போட வேண்டும். உளுத்தம் பருப்பைத் தவிர காணப் பயறு, கல்லுப் பயறு என்று எல்லா பயறுகளையும் வரையோட்டில் இட்டு வறுக்க வேண்டும். வெஞ்ஞனத்திற்கு தேவையான மசால் சாமான்களை வறுக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு இப்படி வேலையென்றால் குமரிகளுக்கு அவித்த நெல்லைக் குத்தி அரிசியாக்க வேண்டும், வறுத்த பயறுகளைத் திருவையிலிட்டு உடைத்துப் பருப்பாக்க வேண்டும். மசாலா சாமான்களை இடித்துப் பொடியாக்க வேண்டும். அப்போது சல்லடை என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் சொளகு (முறம்)தான். பித்தளை சாமான்கள், வெங்கல சாமான்கள், துட்டுச் சருவங்கள்தான் அப்போது புழகத்திலிருந்தன. முக்கியமாகச் சாப்பிடுவதற்கு வெண்கலத்தில்தான் வட்டில், கும்பா. வெஞ்ஞனம் வைக்கும் கொட்டுக்கூடை, கஞ்சியைக் கரைப்பதற்கு கட்ரா, நாக்கொண்ட சொம்பு என்று அனைத்தும் வெண்கலத்தில்தான் இருக்கும்.

--நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்