Skip to main content

எங்க ஊரு வாசம்: பாரத தேவி 


புது நெல்லு புதுச் சோறு!



பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழி இந்த மாதத்துக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. போன வருசத்திலிருந்து இதுவரை ஆக்கிக்கொண்டிருந்த பழைய பானைகளையெல்லாம் கழித்துவிடுவார்கள். அப்படிக் கழிக்கும்போது கோழிகளின் அடை ஓட்டுக்காக, பயறு வகைகளை வறுப்பதற்கு வரையோட்டுக்காக, குத்தும் உரலுக்கு வாப்பட்டிக்காக, பானையின் வாவளையத்தை பிரிமணைக்குப் பதிலாக... இப்படித் தேவைக்கு ஏற்றபடி பானைகளை உடைத்துத் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வார்கள். அதோடு புதுப்பானையில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பைப் போட்டால் பானை அப்படியே விரிந்துவிடும் அதனால் அதற்கும் பழைய பானைதான் தேவைப்பட்டது.

இப்படிப் பானைகளைக் கழித்த பின் வீட்டின் கதவுகள், ஏர் கலப்பை, மோக்கா, மோனி, பின்உருளை, முன்உருளை, குத்துக்கால் என்று அனைத்தையும் தூக்கிக் கொண்டுபோய் குளத்தில் போட்டு எல்லாவற்றையும் துப்புரவாகக் கழுவி கொண்டுவருவார்கள்.

பொங்கல் வருவதற்கு முன்னால் நெல்லைத் தவிர வெவ்வேறு தானியங்களை எடுத்து புதுச் சோறு ஆக்கிவிடவேண்டும். அப்போதுதான் பொங்கலன்று நெல்லுச் சோறு ஆக்கலாம். அப்போதெல்லாம் நெல்லுச் சோறு என்பது கிடைக்காத அரிய உணவாக இருந்தது.

இப்படி ஒரு நல்ல நாள், தீய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியும். இந்தச் சோற்றைப் பொங்கலுக்குச் சாப்பிட வேண்டுமென்பதற்காகவே சாமை, தினை, குருதாலி இந்த மூன்ற தானியத்தையும் ஒன்றாகப் போட்டு அவித்து காயவைத்துக் குத்தி, புடைத்து ஒரு நல்ல நாளில் விரதமிருந்து சோறாக்குவார்கள். வாழையிலை, தேக்கு இலை இரண்டும் கிடைக்காவிட்டால் தாமரையிலை போட்டு உற்றார், உறவினர்களை எல்லாம் கூப்பிட்டு மார்கழி மாதத்திலேயே புதுச் சோறு ஆக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள்.

பொங்கல் நெருங்க, நெருங்க ஊருக்குள் இருக்கும் எல்லாருக்குமே வேலை செய்து முடியாது. துணி வெளுப்பவர் பொங்கலுக்கு எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் துணியை வெளுத்துக் கொடுக்க வேண்டுமென்று ‘வெள்ளாவி’ வைப்பதற்கு முள்ளு, மொடலு என்று எல்லாச் செடிகளையும் வெட்டிச் சேர்ப்பார். இரண்டு கழுதைகளோடு ‘உவர்மண்’ இருக்கும் இடம் தேடி தூரமான காடுகளுக்கு, வயல்களுக்குப் போய் மண்ணை அள்ளிக்கொண்டு வருவார்கள். உவர் மண்ணில் அழுக்குத் துணிகளை முக்கி வெள்ளாவியில் வைத்து அவித்து, சூடு ஆறிய பின் அடித்துத் துவைத்துப் பிழிந்து எடுத்துவிட்டால் போதும். எந்த மாதிரி கசடு அழுக்காக இருக்கும் துணிகூடப் பளிச்சென்று இருப்பதோடு உவர்மண்ணின் வாசனையில் துணிகள் கமகமக்கும்.

பெண்களுக்குப் பொங்கலுக்கான அரிசி, பருப்பு சேகரித்து வைப்பது பெரிய வேலை. ராஜகிரீடம் சூட்டியவாறு மூடைகளில் இருக்கும் நெல்லை எடுத்து அவித்துக் காயப்போட்டுக் குத்தி, அரிசியாக்க வேண்டும். நெல்லில் தோட்டச் சம்பா, புழுதிச் சம்பா, வையக்கொண்டான், மூங்கிச் சம்பா, வெள்ளைக் கொட்டான், கரு கொட்டான், மணவாரி என்று இன்னும் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைப் பானை, பானைகளாக அவித்துத் தட்டி, காயப்போட வேண்டும். உளுத்தம் பருப்பைத் தவிர காணப் பயறு, கல்லுப் பயறு என்று எல்லா பயறுகளையும் வரையோட்டில் இட்டு வறுக்க வேண்டும். வெஞ்ஞனத்திற்கு தேவையான மசால் சாமான்களை வறுக்க வேண்டும்.

பெரியவர்களுக்கு இப்படி வேலையென்றால் குமரிகளுக்கு அவித்த நெல்லைக் குத்தி அரிசியாக்க வேண்டும், வறுத்த பயறுகளைத் திருவையிலிட்டு உடைத்துப் பருப்பாக்க வேண்டும். மசாலா சாமான்களை இடித்துப் பொடியாக்க வேண்டும். அப்போது சல்லடை என்பதே கிடையாது. எல்லாவற்றுக்கும் சொளகு (முறம்)தான். பித்தளை சாமான்கள், வெங்கல சாமான்கள், துட்டுச் சருவங்கள்தான் அப்போது புழகத்திலிருந்தன. முக்கியமாகச் சாப்பிடுவதற்கு வெண்கலத்தில்தான் வட்டில், கும்பா. வெஞ்ஞனம் வைக்கும் கொட்டுக்கூடை, கஞ்சியைக் கரைப்பதற்கு கட்ரா, நாக்கொண்ட சொம்பு என்று அனைத்தும் வெண்கலத்தில்தான் இருக்கும்.

--நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...