Skip to main content
எங்க ஊரு வாசம் ---பாரத தேவி 

உண்மையான கிராமத்து வாழ்க்கை எப்படியிருந்தது, இயந்திரமயமாகி விட்ட வாழ்வில் நாம் என்னவெல்லாம் தொலைத்துவிட்டோம் என நினைத்து பெருமூச்சு விடவைக்கும் ஒரு அருமையான பதிவு.....

வாழ்வோடு கலந்த பொங்கல்




தைமாதம் பிறக்கப் போகிறது. அதனால் விவசாயிகள் எல்லோரும் ரொம்பவும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். ஏனென்றால் காடுகளிலும், வயல்களிலும் விளைந்த தானியங்களை எல்லாம் வீடு கொண்டு வந்து சேர்த்தாகிவிட்டது. அவை பெரிய, பெரிய குலுக்கைகளிலும், மூடைகளிலுமா வீடு நிறைந்து இருக்கின்றன. அதோடு இருந்த தட்டை, தாள்களை அறுத்துக்கொண்டு வந்து ஆடு, மாடு தீவனங்களுக்காக உயரமும் நீளமுமான படைப்புகளாக அடுக்கியாகிவிட்டது.

பிரிந்தும் தளர்ந்தும் இருந்த மழைக்கு ஒழுகிக்கொண்டு இருந்த கூரை வீடுகளைப் பிரித்து கம்பந்தட்டை, தரகு, பனைஓலை என்று கொண்டுவந்து கச்சிதமாக வேய்ந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு வீடு ஒழுகுமே என்ற கவலை இல்லை. புதுத் தானியமும், புதுக் கூரையும், புதுப் படப்பின் மணமுமாக மேகாற்றோடு வீசி கிராமம் எங்கும் மணம் பரப்ப, விவசாயிகளும், அவர்களின் குடும்பங்களும் நெஞ்சு நிறைய சுவாசித்து மகிழ்ந்தார்கள்.

ஆடி மாதத்திலிருந்து வெறும் கோவணமும் தலைப்பாக்கட்டுமாக வெற்று உடம்போடு அலைந்த விவசாயி எல்லோர் இடுப்பில் ‘லங்கோடும்', தோளில் துண்டுமாக மகிழ்ச்சியோடு மந்தையிலிருக்கும் ஆலமரத் திண்டில் உட்கார்ந்து பேசியவாறு பொழுதைக் கழித்தார்கள். ஆடு, புலி, ஆட்டம் ஆடினார்கள்.

‘தைபிறந்தால் வழிபிறக்கும்' என்ற பழமொழியின் சொல் புதிதாகக் கல்யாணம் முடிக்கவும், வீடு கட்டுவதற்காகவும் என்று இருந்தாலும்கூட வெள்ளாமை அறுத்த தரிசுகளில் அவரவர் இஷ்டத்திற்கு ஒற்றையடிப் பாதையாகவும், வண்டிப் பாதையாகவும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகவும் தோதாகக் கிளைபிரிந்து சென்றன.

அந்தப் பாதைகளின் வழியே தானியங்களை வாங்கிப் போக வியாபாரிகள் வந்தார்கள். பொங்கலுக்கான புதுச் சட்டிப் பானைகளைச் சுமந்துகொண்டு வியாபாரிகள் வந்தார்கள் ஊருக்குள்ளேயே ‘உலை' போட்டு அரிவாள், சொறண்டி, வம்பட்டி ‘செறப்பான்' அரிவாள்மனை இத்தனையும் தீட்டிக் கொடுப்பதற்காக அதற்கான தொழிலாளர்கள் வந்தார்கள். அந்த காலத்தில் மூன்று படி, கம்பு, சோளம் என்று பெரும் பானைகளில் சோறு ஆக்கியதால் சில சமயம் பானையில் அடியில் கஞ்சி பற்றிவிடும். அதைச் சுரண்டி எடுப்பதற்காகத்தான் இந்தச் செறப்பான்கள்.

பொங்கலும், பொங்கலின் வேலையும் ஒரு பக்கமிருந்தாலும் வியாபாரி கொடுத்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்க ஊரே கூடியது சிறு பிள்ளைகளும் அங்கே வந்து சேர்ந்தபோது ஊர்ப் பெரியவரான முத்தையா அவர்களை விரட்டினார்.

“வாங்க வாங்க பொங்க வருது உங்களுக்கெல்லாம் தலய சிரைக்க வேண்டாமா?” என்று அவர்களைப் பூவரச மரத்து நிழலில் உட்கார்ந்திருந்த முடிதிருத்துபவரிடம் கூட்டிக்கொண்டு போனார். அந்தக் காலத்தில் சிறுவர்களுகெல்லாம் வட்டக் குடுமிதான். ‘சேக்' என்றும் ‘கிராப்' என்றும் ஒன்றும் கிடையாது. பெரிய பெரிய ஆண்களுக்கும் குடுமிதான். அதாவது முன்புறம் கொஞ்சமாய் வெட்டிவிட்டு பின்புறம் முடி வளர்த்துக் கொண்டை போட்டுக்கொள்வார்கள். அது மட்டுமல்ல முடிவெட்டியதும் அப்படியே வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது. இரண்டு வயதுப் பிள்ளைகள் என்றாலும் கிணற்றுக்கோ, குளத்துக்கோதான் போக வேண்டும். பிறகு சில்லென்ற தண்ணீரில் குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் பெரியவர்களுக்கும் இதே கட்டுப்பாடுதான்.

--நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்