Skip to main content

கடலூர் அழிவுக்கு காரணம் யார்?


குறிஞ்சிப்பாடிக்கு அடுத்துள்ள பூதம்பாடி கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ளம்.


வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான்.
குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது. 

அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த விழிப் புணர்வு யாருக்கும் இல்லை. 

கடந்த 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ போர்கள், வன்முறைகள், கொடூரங்கள் நடந்திருக் கின்றன. வாதாபி எரிந்தது. மதுரை எரிந்தது. உறையூர் எரிந்தது. சமணர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் தேவாலயங்களை போர்ச்சுக்கீசியர் அழித்தனர். போர்ச்சுக்கீ சியர்களின் தேவாலயங்களை ஆங்கி லேயர்கள் அழித்தனர். 

ஆனால், பெரியளவில் யாரும் நீர் நிலைகளின் மீது கையை வைக்கவில்லை. ஆனால், வரலாற்றில் யாரும் செய்யாத பாவத்தை நாம் செய்துவிட்டோம். நீங்காத கறையை அள்ளி அப்பிக்கொண்டோம். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பார்கள். ‘விதை நெல்லை விற்றவனின் இரவு விடி யாது’ என்பார்கள். நாம் தாயை பழித்து விட்டோம். விதை நெல்லை அழித்து விட்டோம். நம் பாவத்தை கழுவ எத்தனை ஏரிகளின் தண்ணீரைக் கொட்டி னாலும் போதாது. 

நாம் செய்த பாவத்துக்கு கடலூர் மக்கள் அனுபவிக்கிறார்கள். 2011-ம் ஆண்டு வெள்ளத்தில் 21 பேர் இறந்தார்கள். இப்போது 32 பேர் பலியாகிவிட்டார்கள். சொல்லப் போனால் படுகொலைகள்தான் அவை. கடந்த காலங்களில் கடலூரில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள், உயிர்ப் பலிகள் அத்தனைக்கும் காரணம், தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான். புவியியல் அமைப்பின்படி கடலூர் ஒரு வடிநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரின் கணிசமான அளவு அந்த வடிநிலம் வழியாகதான் கடலை அடைகிறது. 

மலைகளில் இருந்து கற்பனைக் கெட்டாத வேகத்தில் சமவெளியை நோக்கி வரும் காட்டாற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக நமது முன் னோர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் நூற்றுக்கணக்கான சங்கிலித் தொடர் குளங்களையும் ஏரிகளையும் அமைத் தார்கள். 

அவை காட்டாற்றின் சீற்றத்தை தணித்தன. முதல் வேகத்தடை இது. பின்பு தமிழகம் முழுவதும் இருந்த சங்கிலித் தொடர்கள் ஏரிகள், குளங்கள் எல்லாம் அடுத்தடுத்த வெள்ளத் தடுப்புச் சாதனங்களாக (Flood moderator) செயல் பட்டன. இப்படியாக மலையடிவாரம் தொடங்கி வடிநிலம் வரையில் ஏரிகள், குளங்களை நிரப்பிய தண்ணீர், கடலூரில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நல்லப் பிள்ளையாக கடலைச் சென்று அடைந்தது. 

ஆனால், நாம் அடிவாரம் தொடங்கி வடிநிலப் பகுதி வரை ஏராளமான ஏரிகளை, குளங் களை அழித்துவிட்டோம். தனது இருப் பிடங்களை எல்லாம் இழந்த வெள்ளத் துக்கு வேறுவழியில்லை, அது வேக மாக கடலூரை நோக்கிச் சீறிப் பாய் கிறது. நொந்து சாகிறார்கள் அந்த மக்கள். 

கடலூரில் இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள், வீடற்றவர்கள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள். குழந்தைகள்கூட வெள்ளத்துக்கு இரையாகி விட்டதுதான் கொடுமை. அசந்து உறங் கிக்கொண்டிருந்த அந்தக் பிஞ்சுகளை வெள்ளம் அடித்துச் சென்றபோது அவர்கள் எப்படி கதறியிருப்பார்கள். யார் மீது தவறு? 

அந்தக் குழந்தைகளின் குடும்பம் வசித்த இடம் பெரியக்காட்டுப்பாளையம் நீர் வழி புறம்போக்கு. உளுந்தூர் பேட்டை, சேந்தநாடு, திருவெண்ணை நல்லூர், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை ஆகியப் பகுதிகளின் வனங் களில் பெய்யும் மொத்த மழை நீரூம் சில்லோடை உள்ளிட்ட காட்டு ஓடைகளாக அந்த நீர் வழி புறம்போக்கு வழியாகதான் பண்ருட்டியில் இருக்கும் கெடிலம் ஆற்றுக்கு செல்லும். ஆயிர மாயிரம் ஆண்டுகளாக தண்ணீர் பயணித்த மரபு வழித்தடம் அது. ஆனால், அந்த வழித்தடம் முழுக்க ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது. அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்தக் குடும்பத் துக்கு உரிய தங்குமிடம் கொடுத்திருக்க வேண்டும். நீர் வழி புறம்போக்கின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். எத்தனை முறைதான் இயற் கையிடம் பாடம் கற்பது? 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரியளவில் சாலை வசதிகள் இல்லை. அப்போது கடலூர் துறைமுகத்துக்கு சரக்குகள் அனைத்தும் நீர்வழிப் பாதைகளில் படகுகள் மூலமாகதான் எடுத்துச் செல்லப்பட்டன. சேலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது, படகுகள் மூலம் கடலூர் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது வரலாறு. அந்தப் பெரும் படகுகள் பயணம் செய்த நீர் வழிப் பாதைகள் எல்லாம் இப்போது அழிந்துவிட்டன. 

கடலூர் துறைமுகம் முதுநகர் அருகே இரு முகத்துவாரங்கள் இருக் கின்றன. ஒன்று, உப்பனாற்று முகத்து வாரம். மற்றொன்று, கெடிலம் ஆற்று முகத்துவாரம். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 108 கடலோர கிராமங்களுக்கும் இந்த இரு முகத்துவாரங்கள்தான் வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறையாவது அவற்றை தூர் வார வேண்டும். ஆனால், இன்று அந்த முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. மக்கள் கோரிக்கை வைத்து ஓய்ந்து விட்டார்கள். 

தூர் வாரப்படாத அந்த முகத்துவாரங்களில் தண்ணீர் கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி ஊருக்குள் புகுந்துவிட்டது. இவை எல்லாம்தான் கடலூர் அழிவுக்குக் காரணம். 

இன்று தூர் வார துப்பில்லாமல் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் உயிரை தியாகம் செய்து ஏரிகளை பராமரித்தார்கள் தெரியுமா? 

--நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார் - தமிழ் இந்து

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...