Skip to main content
SHIP OF THESEUS - தீசஸின் கப்பல் - திரைப்பட விமர்சனம் 


ஆங்கில இலக்கியத்தில் Ship of Theseus என்ற சொல்லுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த சொல்லின் விளக்கத்தை இவ்வாறாக எடுத்துக் கொள்ளலாம்; ஒரு பழுதடைந்த கப்பலின் அத்தனை பாகங்களையும் மாற்றி விட்டால், அந்தக் கப்பல் பழைய கப்பலாகவே இருக்குமா?? அதன் தன்மை மாறாதா?? இதை ஆங்கில இலக்கியத்தில் "Theseus Paradox" (தீசஸின் முரண்பாடு) என்றும் கூறுவார்கள். 

இந்தப் படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்; ஆலியா கமல் என்ற கண் பார்வை பழுதடைந்த ஒரு பெண் photographer. அறுவை சிகிச்சை செய்து கொண்டு கண் பார்வை சரியான பின் தன்னால் எடுக்கபடும் புகைப்படங்கள் தரமாக இல்லை என நினைக்கும் ஒரு கதாபாத்திரம். மைத்ரேயா என்ற ஒரு புத்திசாலித்தனமான மனிதன். பொது மக்களுக்கு நல்ல பொருள்/மருந்து  கிடைக்க வேண்டுமென மிருகங்களை ஆராய்ச்சி கூடங்களில் வதை செய்வதை எதிர்க்கும் ஒரு கதாபாத்திரம். ஒரு மனிதன் வாழ ஓர் உயிரை வருத்தலாகாது என்பது மைத்ரேயாவின் வாதம்.  பங்கு வர்த்தக தரகராக, பணம் சம்பாதிப்பது ஒன்றிலேயே குறிக்கோளாக இருக்கும் நவின். 

சில நாட்களுக்கு முன், ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஆமிர் கான், மற்றும் அவருடைய மனைவி கிரண் ராவ் இருவரும் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி எடுத்துள்ளதாக செய்தி வந்தது, இந்த படம் கிரண் ராவ் தயாரித்தது. உறுப்பு தானத்தை பற்றிய எண்ணங்களை வித்தியாசமான பார்வையில் காட்டுகிறது.

ரசிகர்கள் பக்குவப்படவில்லை அதனால் என்படம் ஓடவில்லை என   ஒப்பாரி வைக்கும் படைப்பாளிகளைக் கண்டிருக்கிறோம்!! ஆனால், எத்தனை படைப்பாளிகள் வியாபாரத்தைப் பொருட்படுத்தாத உரிய கலை அம்சத்தைக் கொண்ட படங்களை இயக்கும் தைரியம் கொண்டிருக்கிறார்கள்??  

இங்கே ஒரு இயக்குனர்  “ஆனந்த் காந்தி” இன்றைய தலைமுறையினருக்கு கலைப் படங்கள் எனப்படும் நல்ல படங்களின் முன்னோடி என உரைத்தால் அது மிகையல்ல. பொதுவாக கலைப்படம் என்றால் போரடிக்கும், உட்கார முடியாது என்ற எண்ணம் பலரிடம் உண்டு. முதல் படத்திலேயே இத்தனை நேர்த்தியா...! மெய்சிலிர்க்க வைக்கிறார் ஆனந்த் காந்தி.

சினிமாவை ஒரு பள்ளிக் கூடமாக நினைத்து அதில் பட்டதாரியாக நினைக்கும் அனைத்து மாணவர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும்.  வெறும் பொழுது போக்கிற்காக, ரிலாக்ஸ் செய்வதற்காக, சினிமாவிற்கு செல்ல நினைப்பவர்கள் விலகிக் கொள்வது நல்லது. 


ஒரு மிக நல்ல திரைப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்