Skip to main content
பொன்னியின் செல்வன்: கமல்ஹாசன் இயக்க ரசிகர்கள் விருப்பம்

பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் மறைந்த மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள் எழுதிய அழியாப் புகழ் பெற்ற காவியம். கல்கி அவர்கள் சிவகாமியின் சபதம், அலை ஓசை போன்ற புகழ்பெற்ற சரித்திர நாவல்களை எழுதியிருந்தாலும், அவருடைய பொன்னியின் செல்வன் புதினம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.

இந்த சரித்திர நாவலை திரைப் படமாக்க மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் முதல் நேற்றைய செல்வராகவன் வரை நிறைய நடிகர்கள்/இயக்குனர்கள் முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது, இந்தப் படத்தை இயக்குனர்  பாரதிராஜா கமல்ஹாசனை வைத்து இயக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அது நடக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் விஜய், விக்ரம், மகேஷ் பாபு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப்போவதாக செய்தி வந்தது. கடைசியில் அதுவும் புஸ்வாணமாக ஆனது.

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுக்கான கருத்து கணிப்பு ஒன்றை சினிமா லீட் என்ற இணைய தளம் நடத்தியது. இதில் எந்த இயக்குனர் பொன்னியின் செல்வனை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான ரசிகர்கள் கமல்ஹாசன் இயக்கினால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த கருத்துக்கணிப்பின்படி கமலுக்கு முதல் இடமும், இயக்குனர் ஷங்கருக்கு இரண்டாவது இடமும் கிடைத்துள்ளன.

கருத்துக்கணிப்பு விவரம்:
  1.  கமல்ஹாசன் - 42%
  2. ஷங்கர் - 24.4%
  3. மணி ரத்னம் - 19%
  4. செல்வராகவன் - 8%
  5. கே.எஸ்.ரவிக்குமார் -2%
  6. ஏ.ஆர். முருகதாஸ் - 3%
இதுமட்டுமல்ல, பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களையும் இந்த கருத்துக்கணிப்பு மூலம் ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். அதன் விவரம் கீழே:
  • சுந்தர சோழன் - அர்விந்த் ஸ்வாமி - கதை முழுவதும் வரும் இந்த கதாபாத்திரம் (சுந்தர சோழன்) மிக அழகானவர். கரிகாலன், அருண்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் தந்தை.
  • ஆழ்வார்கடியான் நம்பி - சந்தானம் - இவர் நகைச்சுவை நிரம்பிய ஒற்றர் பாத்திரத்தில் வருபவர்.
  • சின்ன பழுவேட்டரயர் - ராஜ்கிரண் - ஒரு கம்பீரமான கதாபாத்திரம். கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் தம்பி 
  • பெரிய பழுவேட்டரயர் - சத்யராஜ் - மற்றுமொரு கம்பீரமான, நக்கலும், நையாண்டியும் கலந்து பேசும் ஒரு பாத்திரம். 
  • பூங்குழலி - ப்ரியாமணி -கிராமத்து மீனவ பெண். மிகவும், துடுக்கான, தைரியசாலியான ஒரு கதாபாத்திரம்.
  • வானதி - சமந்தா- அருண்மொழி வர்மனின் ஜோடி. அழகான ஒரு கதாபாத்திரம். குந்தவையின் நெருங்கிய தோழியும் கூட.
  • குந்தவை தேவி - காஜல் அகர்வால் -அழகும், துடுக்குத்தனமும், தைரியமும் ஒருங்கே பெற்று, வந்தியத் தேவனின் ஜோடியான ஒரு சிறப்பான கதாபாத்திரம்.
  • நந்தினி - அனுஷ்கா -கதைப்படி பெரிய பழுவேட்டரயரின் அழகு மனைவி. கல்கியின் வர்ணனையில் ஒரு மிகப் பெரும் அழகியான இவள் மேல் வந்தியத் தேவன் ஒருவனைத் தவிர பெரும்பாலான கதாபாத்திரங்கள் மோகம் கொள்கின்றனர். வாள் வீச்சிலும், அகம்பாவத்திலும் மிகத் தேர்ந்த ஒரு கதாபாத்திரம் என்பதால் அனுஷ்கா கச்சிதமாகவே பொருந்துவார்.
  • கரிகாற் சோழன் - சீயான் விக்ரம்-முறுக்கேறிய உடல், தீர்க்கமான பார்வை, என எல்லாவற்றுக்குமே விக்ரம் மிகப் பொருத்தம்.
  • அருண்மொழி வர்மன் - தல அஜித் - ஆணழகன். பெண்களைச் சுண்டி இழுக்கும் வல்லவன். நண்பன் வந்தியத் தேவன் மேல் உயிரையே வைத்திருப்பவன்.
  • வல்லவராயன் வந்தியத் தேவன் - தளபதி விஜய்-கதைப்படி அருண்மொழி வர்மன் கதாநாயகன் என்றாலும், கதையின் நாயகன் வந்தியத் தேவன்தான். இன்றளவும் வாசர்கள் மனதில் நீங்காத ஒரு கதாபாத்திரம். வீரமும், விவேகமும், நகைச்சுவை உணர்வும் கலந்த ஒரு மிகச் சிறப்பான பாத்திரம்.
அதுசரி, உலகநாயகன் கமல் பாத்திரம் என்ன என்று கேட்கிறீர்களா?? அவர்தானே ஐயா படத்தின் இயக்குனரே !!!

ஹ்ம்ம்...இதெல்லாம் சாத்தியமா?? நடந்தால், மிக நன்றாகவே இருக்கும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...