Skip to main content

சுஜாதா சாரோட நாற்காலி !!



என் பிராப்பர்டி டெவலெப்மென்ட் பிஸினஸின் ஆரம்ப காலம். அப்போதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய பிராப்பர்டியை டெவலெப் பண்ணிக்கொண்டிருந்தேன்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு அபார்ட்மென்டை விற்பதற்காக அவரையும் திருமதி சுஜாதா அவர்களையும் சந்திக்க நேர்ந்தது.

கம்பெனியில் இன்னார் என்று முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அபார்ட்மென்ட் பற்றி, அதன் விலை மற்ற டீடெல்ய்ஸ் எல்லாவற்றையும் சொன்னேன்!
திருமதி சுஜாதா அவர்கள் காட்டிய கொஞ்ச நஞ்ச விருப்பத்தைக்கூட, சுஜாதா அவர்கள் தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

சற்று நேரத்திற்குப் பிறகு, சுஜாதா பக்கம் திரும்பி, "சார், நான் உங்களுடைய பரம விசிறி. உங்க கதையெல்லாம் செண்பகப்பூ, கணேஷ்-வஸந்த் போன்ற நாவல்களை ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன்'' என்றேன். "அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ஆங், அப்புறம் சொல்லுங்க. நான் என்ன பண்ணணும்?'' என்றார்.

ஆனால் நான், "சார், உங்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரியுமா?'' என்று கேட்டேன்.

"ஆர் வியா என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? அவர் பெரிய எழுத்தாளர். கிவாஜ, அகிலன், சாண்டில்யன், சாவி க்ரூப்-அந்த செட். அவர்களோட காண்ட்டம்பிரரி ரைட்டர். அவரோட 'ஆதித்தன் காதல்', 'அணையாவிளக்கு', 'திரைக்குப்பின்' போன்ற பெரிய நாவல்கள் எல்லாவற்றையும் ஃபுல்லா படிச்சிருக்கேன். எதார்த்தமான எழுத்துக்கள். உயிரோட்டம், நல்ல எழுத்து நடை, பாணி. ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன். இப்போ எல்லாம் யாரப்பா அந்த மாதிரி எழுதுறாங்க? நல்ல தரமான எழுத்தாளர். அவருடைய எழுத்துலே ஓர் அழுத்தம் இருக்கும். ஸ்டோரி வேல்யு இருக்கும்....ஆமா, அவரைப்பற்றி இப்போ எதுக்கு நீங்க கேட்கிறீங்க?''

"நான் அவரோட செகண்ட் சன்...''

"ஹோ! அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ரொம்ப சந்தோஷம்! இப்படி வாங்க...'' அப்படீன்னு அவர் கதை எழுதற ரூமுக்கு அழைத்துக்கொண்டு போய் அவருடைய நாற்காலியில் உட்கார வெச்சார்.

"என்ன சார் இது? உங்களோட சேர்லே என்னை உட்கார வெச்சிட்டீங்க!''

"இந்தச் சேர்லே என்னைத் தவிர்த்து வேற யாருமே உட்காரக் கூடாது. நான் யாரையுமே இதுவரை அனுமதிக்கலே. ஆனா நீங்க ஆர்வியோட ஸன்னுன்னு சொல்லிட்டீங்க...இதுதான் நான் அவருக்குக் கொடுக்கிற மரியாதை-மதிப்பு. இந்தாங்க என் செக்புக். நீங்க என்னோட பேனாவை எடுத்து உங்க கையாலே, என்னோட செக் புக்குல அட்வான்ஸ் அமெüண்டை எழுதுங்க!'' என்றார்.

பிறகு, "சுஜா, இவர் யார் தெரியுமா? இவருடைய அப்பாதான் ஆர்வி. இல்லேல்லே, ஆர்வியோட ஸன்தான் இவர்'' என்றார்.
"ஆர்வி பழம்பெரும் எழுத்தாளர். நிறைய நாவல்கள், குணச்சித்திரங்கள், சிறுகதைகள், சில்ரன்ஸþக்கெல்லாம் எழுதியிருக்கார்...!''

"ஆமா சுஜா. ஆர்விக்காக நாம் இவர்கிட்டேயிருந்து இந்த அபார்ட்மென்டை வாங்கணும்!''

எனக்கு எவ்வளவு பெருமை!

வெ.கிருஷ்ணப்பிரஸாத் எழுதிய "சாதனையாளர் ஆர்வி" நூலிலிருந்து 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...