Skip to main content

சுஜாதா சாரோட நாற்காலி !!



என் பிராப்பர்டி டெவலெப்மென்ட் பிஸினஸின் ஆரம்ப காலம். அப்போதுதான் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருடைய பிராப்பர்டியை டெவலெப் பண்ணிக்கொண்டிருந்தேன்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு அபார்ட்மென்டை விற்பதற்காக அவரையும் திருமதி சுஜாதா அவர்களையும் சந்திக்க நேர்ந்தது.

கம்பெனியில் இன்னார் என்று முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். அபார்ட்மென்ட் பற்றி, அதன் விலை மற்ற டீடெல்ய்ஸ் எல்லாவற்றையும் சொன்னேன்!
திருமதி சுஜாதா அவர்கள் காட்டிய கொஞ்ச நஞ்ச விருப்பத்தைக்கூட, சுஜாதா அவர்கள் தன் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

சற்று நேரத்திற்குப் பிறகு, சுஜாதா பக்கம் திரும்பி, "சார், நான் உங்களுடைய பரம விசிறி. உங்க கதையெல்லாம் செண்பகப்பூ, கணேஷ்-வஸந்த் போன்ற நாவல்களை ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன்'' என்றேன். "அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ஆங், அப்புறம் சொல்லுங்க. நான் என்ன பண்ணணும்?'' என்றார்.

ஆனால் நான், "சார், உங்களுக்கு எழுத்தாளர் ஆர்வியைத் தெரியுமா?'' என்று கேட்டேன்.

"ஆர் வியா என்னப்பா இப்படிக் கேட்டுட்டே? அவர் பெரிய எழுத்தாளர். கிவாஜ, அகிலன், சாண்டில்யன், சாவி க்ரூப்-அந்த செட். அவர்களோட காண்ட்டம்பிரரி ரைட்டர். அவரோட 'ஆதித்தன் காதல்', 'அணையாவிளக்கு', 'திரைக்குப்பின்' போன்ற பெரிய நாவல்கள் எல்லாவற்றையும் ஃபுல்லா படிச்சிருக்கேன். எதார்த்தமான எழுத்துக்கள். உயிரோட்டம், நல்ல எழுத்து நடை, பாணி. ரொம்ப விரும்பிப் படிச்சிருக்கேன். இப்போ எல்லாம் யாரப்பா அந்த மாதிரி எழுதுறாங்க? நல்ல தரமான எழுத்தாளர். அவருடைய எழுத்துலே ஓர் அழுத்தம் இருக்கும். ஸ்டோரி வேல்யு இருக்கும்....ஆமா, அவரைப்பற்றி இப்போ எதுக்கு நீங்க கேட்கிறீங்க?''

"நான் அவரோட செகண்ட் சன்...''

"ஹோ! அப்படியா? வெரிகுட்! வெரிகுட்! ரொம்ப சந்தோஷம்! இப்படி வாங்க...'' அப்படீன்னு அவர் கதை எழுதற ரூமுக்கு அழைத்துக்கொண்டு போய் அவருடைய நாற்காலியில் உட்கார வெச்சார்.

"என்ன சார் இது? உங்களோட சேர்லே என்னை உட்கார வெச்சிட்டீங்க!''

"இந்தச் சேர்லே என்னைத் தவிர்த்து வேற யாருமே உட்காரக் கூடாது. நான் யாரையுமே இதுவரை அனுமதிக்கலே. ஆனா நீங்க ஆர்வியோட ஸன்னுன்னு சொல்லிட்டீங்க...இதுதான் நான் அவருக்குக் கொடுக்கிற மரியாதை-மதிப்பு. இந்தாங்க என் செக்புக். நீங்க என்னோட பேனாவை எடுத்து உங்க கையாலே, என்னோட செக் புக்குல அட்வான்ஸ் அமெüண்டை எழுதுங்க!'' என்றார்.

பிறகு, "சுஜா, இவர் யார் தெரியுமா? இவருடைய அப்பாதான் ஆர்வி. இல்லேல்லே, ஆர்வியோட ஸன்தான் இவர்'' என்றார்.
"ஆர்வி பழம்பெரும் எழுத்தாளர். நிறைய நாவல்கள், குணச்சித்திரங்கள், சிறுகதைகள், சில்ரன்ஸþக்கெல்லாம் எழுதியிருக்கார்...!''

"ஆமா சுஜா. ஆர்விக்காக நாம் இவர்கிட்டேயிருந்து இந்த அபார்ட்மென்டை வாங்கணும்!''

எனக்கு எவ்வளவு பெருமை!

வெ.கிருஷ்ணப்பிரஸாத் எழுதிய "சாதனையாளர் ஆர்வி" நூலிலிருந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்