Skip to main content

வனப்பு மிகு வால்பாறை - சிக்கன சுற்றுலா




தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மிக அருமையான சுற்றுலா தலமான வால்பாறை அமைந்துள்ளது. வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. 


வால்பாறைக்குச் செல்லும் வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனக் காட்சி தருவது தேயிலைத் தோட்டங்கள்தான். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வனப்பகுதிக்குள்தான் சென்றாக வேண்டும்.

வால்பாறை துவங்கும் இடத்தில் ரம்மியமாகக் காட்சி தரும் ஆழியாறு அணை. அதற்கு அடுத்துக் குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில பல்வேறு ஆழியாறு அணையின் காட்சி முனை, தமிழ்நாட்டின் விலங்கு என கூறப்படும் வரையாடு, சிங்கவால் குரங்கு, யானை, மலை அணில், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைப் பார்க்க முடியும்.


வால்பாறையில் மிக அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அதிகமாக இவை வெளியில் தெரியவில்லை. அதனால் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. 


வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் (மிக அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இடத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) என்ற பெயரும் உண்டு. தமிழக அரசின் சார்பில் வால்பாறையைப் பிரபலப்படுத்துவதற்காக கோடை விழா நடத்தப்பட்டது. இதன் மூலம் வால்பாறையின் புகழ் வெளியில் பரவ வேண்டும் என்பதற்காக விழா நடந்தாலும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவில்லை. அதனால் தொடர்ந்து இங்கு வரப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

மேலும் அடிக்கடி தேயிலைத் தோட்டங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாகப் புகுவதும், சிறுத்தைகள் வால்பாறை நகருக்குள் சுற்றுலா வந்து செல்வதும் வாடிக்கையாக நடக்கும் சம்பவங்கள்.



சோலையாறுஅணை : ஆசியாவில் மிக ஆழமான இரண்டாவது அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை மிகவும் அழகானது. இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி உள்ளது.

சின்னக்கல்லார்அணை: இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்து மழை பெய்யும் இடம் இதுதான். வால்பாறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அணைப்பகுதியில் அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கம் உருமுவதைப் போல இருக்கும். இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையினர் அனுமதி தேவை.

நீராறுஅணை: அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்த அணை, பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகக் கட்டப்பட்டது. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அதிரப்பள்ளிநீர்வீழ்ச்சி: புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளப் பகுதியில் உள்ளது. வால்பாறையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் சென்றாக வேண்டும். பல்வேறு வனவிலங்குகளையும் பார்க்க முடியும்.

புல்மலை: ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளுக்கு சொர்க்கமாகக் காட்சி தருகிறது புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணக்கிடைக்காத, இல்லாத புல்மலையைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல்மலை - உலகின் அதிசயத்துக்கு எடுத்துக் காட்டு. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு அதிக அளவில் உள்ளன.

ஏழாவது சொர்க்கமான வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன. வால்பாறையில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படாததால் பலருடைய பார்வைகள் படாததால் சுற்றுச் சூழல் கெடவில்லை. அதனால் இயற்கைத் தாய் தொடர்ந்து பசுமை உடையை அணிந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சன உண்மை. சுற்றுலாவை மேம்படுத்தினால் வேலை வாய்ப்பும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. வாய்ப்பு கிடைத்தால் வால்பாறைக்குச் சென்று வரலாம்.

நாங்கள் வால்பாறையில் உள்ள Waterfalls டீ எஸ்டேட்டில் தங்கினோம்.

இங்கு தங்குவதற்கு முன் பதிவு அவசியம்:

Glendale Estate
Coonoor, The Nilgiris
Tamil Nadu
India
Cell: +91 94449 93176
Tel: +91 423 220 6779
Telefax: +91 423 220 6279
Email:glendale@dataone.in

மிக அமைதியான சூழலில், எந்தவிதமான சத்தமும் இல்லாமல், மிக அழகான ஒரு இடம். சாப்பாடு செலவு (கலை, மதிய மற்றும் இரவு உணவு) சேர்த்து ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ.1800 கட்டணம். அசைவ உணவு சற்று விலை அதிகம். இங்குள்ள சமையற்காரர் நன்றாகவே சமைத்து கொடுத்தார்.

இவர்களுடைய குன்னூரில் உள்ள Adderley Guesthouse-லும் வேறொரு சமயத்தில் தங்கினோம். 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...