Skip to main content

வனப்பு மிகு வால்பாறை - சிக்கன சுற்றுலா




தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மிக அருமையான சுற்றுலா தலமான வால்பாறை அமைந்துள்ளது. வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. 


வால்பாறைக்குச் செல்லும் வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனக் காட்சி தருவது தேயிலைத் தோட்டங்கள்தான். பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வனப்பகுதிக்குள்தான் சென்றாக வேண்டும்.

வால்பாறை துவங்கும் இடத்தில் ரம்மியமாகக் காட்சி தரும் ஆழியாறு அணை. அதற்கு அடுத்துக் குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில பல்வேறு ஆழியாறு அணையின் காட்சி முனை, தமிழ்நாட்டின் விலங்கு என கூறப்படும் வரையாடு, சிங்கவால் குரங்கு, யானை, மலை அணில், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைப் பார்க்க முடியும்.


வால்பாறையில் மிக அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அதிகமாக இவை வெளியில் தெரியவில்லை. அதனால் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. 


வால்பாறைக்கு ஏழாவது சொர்க்கம் (மிக அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இடத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) என்ற பெயரும் உண்டு. தமிழக அரசின் சார்பில் வால்பாறையைப் பிரபலப்படுத்துவதற்காக கோடை விழா நடத்தப்பட்டது. இதன் மூலம் வால்பாறையின் புகழ் வெளியில் பரவ வேண்டும் என்பதற்காக விழா நடந்தாலும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவில்லை. அதனால் தொடர்ந்து இங்கு வரப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

மேலும் அடிக்கடி தேயிலைத் தோட்டங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாகப் புகுவதும், சிறுத்தைகள் வால்பாறை நகருக்குள் சுற்றுலா வந்து செல்வதும் வாடிக்கையாக நடக்கும் சம்பவங்கள்.



சோலையாறுஅணை : ஆசியாவில் மிக ஆழமான இரண்டாவது அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை மிகவும் அழகானது. இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி உள்ளது.

சின்னக்கல்லார்அணை: இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்து மழை பெய்யும் இடம் இதுதான். வால்பாறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அணைப்பகுதியில் அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கம் உருமுவதைப் போல இருக்கும். இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையினர் அனுமதி தேவை.

நீராறுஅணை: அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்த அணை, பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகக் கட்டப்பட்டது. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அதிரப்பள்ளிநீர்வீழ்ச்சி: புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளப் பகுதியில் உள்ளது. வால்பாறையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் சென்றாக வேண்டும். பல்வேறு வனவிலங்குகளையும் பார்க்க முடியும்.

புல்மலை: ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளுக்கு சொர்க்கமாகக் காட்சி தருகிறது புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணக்கிடைக்காத, இல்லாத புல்மலையைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல்மலை - உலகின் அதிசயத்துக்கு எடுத்துக் காட்டு. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு அதிக அளவில் உள்ளன.

ஏழாவது சொர்க்கமான வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன. வால்பாறையில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படாததால் பலருடைய பார்வைகள் படாததால் சுற்றுச் சூழல் கெடவில்லை. அதனால் இயற்கைத் தாய் தொடர்ந்து பசுமை உடையை அணிந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சன உண்மை. சுற்றுலாவை மேம்படுத்தினால் வேலை வாய்ப்பும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. வாய்ப்பு கிடைத்தால் வால்பாறைக்குச் சென்று வரலாம்.

நாங்கள் வால்பாறையில் உள்ள Waterfalls டீ எஸ்டேட்டில் தங்கினோம்.

இங்கு தங்குவதற்கு முன் பதிவு அவசியம்:

Glendale Estate
Coonoor, The Nilgiris
Tamil Nadu
India
Cell: +91 94449 93176
Tel: +91 423 220 6779
Telefax: +91 423 220 6279
Email:glendale@dataone.in

மிக அமைதியான சூழலில், எந்தவிதமான சத்தமும் இல்லாமல், மிக அழகான ஒரு இடம். சாப்பாடு செலவு (கலை, மதிய மற்றும் இரவு உணவு) சேர்த்து ஒரு நபருக்கு ஒரு இரவுக்கு ரூ.1800 கட்டணம். அசைவ உணவு சற்று விலை அதிகம். இங்குள்ள சமையற்காரர் நன்றாகவே சமைத்து கொடுத்தார்.

இவர்களுடைய குன்னூரில் உள்ள Adderley Guesthouse-லும் வேறொரு சமயத்தில் தங்கினோம். 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்