Skip to main content

36-ம் சென்னை புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகக் கண்காட்சியை, வருடம் தவறாமல், கிட்டத்தட்ட 25 வருடங்களாக பார்த்து வருகிறேன். முதலில் கடலூரில் இருந்தபோது ஆரம்பித்த பழக்கம் (1988 என்று நினைக்கிறேன்), பிறகு சேலம் சென்ற போதும் தொடர்ந்தது. 1996-இல் சென்னைக்கு இடம் பெயர்ந்த பின் சுலபமாக செல்ல முடிந்தது. கன்னிமரா ஹோட்டலுக்கு எதிரே உள்ள காயிதே மில்லத் கல்லூரியில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்குவது என்பது ஒரு சம்பிரதாயமே. 

என்னுடைய புத்தகங்களில் ஒரு பகுதி
வருடம் முழுவது லாண்ட்மார்க், ஹிக்கின்போத்தம்ஸ் போன்ற கடைகளில் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த நான், தற்போது இரண்டு வருடங்களாக flipkart, amazon என ஆன்லைன் புத்தகக் கடைகளில் வாங்குகிறேன். இவ்வகை ஆன்லைன் கடைகளில் (??) வாங்குவது என்பது மிக வசதியான ஒன்று. பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
  1. பெட்ரோல் செலவு, அலைச்சல் மிச்சம் 
  2. நடுஇரவு 12 மணிக்குக்கூட ஷாப்பிங் செய்யலாம் 
  3. வருடம் முழுவதும் தள்ளுபடி கிடைக்கிறது (தள்ளுபடியை கழிவு என்று சொல்லுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த வார்த்தையை புத்தகங்களுடன் சம்பந்தப்படுத்த கஷ்டமாக இருக்கிறது).
  4. தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, உடனே வாங்க முடியாவிட்டால், wishlist -இல் சேர்த்துவிடலாம். பின் எப்போது வேண்டுமோ அப்போது வாங்கிக் கொள்ளலாம். அந்த புத்தக விவரங்கள் பத்திரமாக wishlist -இல் எவ்வளவு நாளானாலும் இருக்கும் 
  5. வீட்டுக்கு புத்தகங்கள் வந்தபின் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.
இந்த புத்தகக் கண்காட்சிகளுக்கு போவதில் எனக்கு ஒரு விதமான அவஸ்தை இருக்கிறது. தலைவர் சுஜாதா ஒருமுறை சொன்னது போல, இவ்வளவு புத்தகங்களை ஒரு சேர ஒரு இடத்தில பார்த்து விட்டால் ஒரு விதமான வெறி வந்து "வர்ஜா வர்ஜியமில்லாமல் " (சுஜாதாவின் வர்ணனை-ஒரு இலக்கே இல்லாமல் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்) புத்தகங்களை வாங்கித் தள்ளிவிடுவேன். இதில் படிக்காமல் விட்ட புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.

சமீபத்தில் கரையான் படையெடுப்பினால் சில நல்ல புத்தகங்களை இழக்க நேர்ந்தது. எனவே, இனிமேல் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கிறேன். இந்த வைராக்கியம் அடுத்த புத்தகம் வாங்கும் வரை தாங்கும் என நினைக்கிறேன்.


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்