Skip to main content

சிறப்புக்கட்டுரை: DTH: கமலின் விஸ்வரூபத் திட்டம் - யுவகிருஷ்ணா


 
 கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது.

சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான். 

திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி. 

லேட்டஸ்ட்டாக விஸ்வரூபம் பிரச்சினை. கிட்டத்தட்ட கோவணத்தை கூட அடகுவைத்து படம் எடுத்திருக்கிறார். இப்போதிருக்கும் வியாபார முறையை வைத்துக்கொண்டு இப்படத்தை காட்சிப்படுத்தினால், தலையில் துண்டை போட்டுக்கொண்டு காசி, இராமேஸ்வரம் என்று தயாரிப்பாளர் கமல் போயாகவேண்டும். ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ மூலமாக வெளியிடுவதின் மூலம் பெரிய லாபத்தை காணமுடியுமென்று சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி பழகிய தமிழ் திரையுலகினர் வழக்கம்போல குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இன்று குதித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இதே முறையில் பல கோடிகளை குவிக்கப் போகிறார்கள். ஏனெனில் கமலின் ராசி அப்படி. அவர் அறிமுகப்படுத்தும் விஷயங்களின் அறுவடையை மற்றவர்கள்தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உழக்குதான் மிச்சம்.

சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் திரும்பத் திரும்ப சினிமாவிலேயே முதலீடு செய்யும் கமல்ஹாசன், சினிமாவை அழிக்கும் முயற்சிகளில் இறங்கமாட்டார் என்று நம்பலாம். படமெடுக்கும் முதலாளி என்கிற அடிப்படையில் அவர் ‘லாபம்’ எதிர்ப்பார்ப்பது நியாயம்தான். கமல் வெறும் கலைஞன் மட்டுமல்ல. 

சினிமா என்பது சர்வநிச்சயமாக வணிகம்தான். இதை சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்வதில் ‘ஈகோ’ இருக்கலாம். கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை தாண்டி, சினிமாவின் குறிக்கோள் பணம் ஈட்டுவதே. ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக தொழில்நுட்பரீதியாக நாம் வளரும் அதே நேரத்தில், அவர்களது வியாபார யுக்திகளையும் கைக்கொண்டாக வேண்டும். இன்றைய தினகரன் வெள்ளிமலரில் (டிச.7, 2012) ‘தயாரிப்பாளரே இல்லாமல் சினிமா’ என்றொரு கட்டுரை வெளியாகியிருக்கிறது (சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டிய கட்டுரை). தயாரிப்பாளரே இல்லாமல் பலரும் சேர்ந்து முதலீடு செய்து படம் தயாரிப்பது என்கிற முறையை குறித்து அக்கட்டுரை ஆழமாக அலசுகிறது. சினிமாத்தொழில் இப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் கலையை அழிக்கிறார், இண்டஸ்ட்ரியை பாழாக்குகிறார் என்றெல்லாம் பேசுவது பிற்போக்குத்தனம்.
முதல் போடுபவர்கள் லாபத்தை எடுத்தாக வேண்டும். பணம் எடுக்க என்னென்ன யுக்திகள் இருக்கிறதோ, அத்தனையையும் பிரயோகித்துப் பார்த்தாக வேண்டும். சூதாட்டம் மாதிரியில்லாமல் மற்ற தொழில்களைப் போலவே பணம் போடுபவர்களுக்கு, குறைந்தபட்ச உத்தரவாதத்தை சினிமா வழங்கியாக வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.

இன்று சினிமா என்பது திரையிடுதலில் மட்டும் காசு எடுக்கும் தொழில் அல்ல. ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்பதை டி.சி.ஆர் எனப்படும் டிக்கெட் கலெக்‌ஷன் ரெக்கார்டை மட்டுமே வைத்து கணக்கிடுகிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கும் கட்டணம், எஃப் & பி எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்பதன் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தே ஒரு படத்தின் வசூலாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியா முழுக்க மல்ட்டிஃப்ளக்ஸ் கலாச்சாரம் பெருகி வருவதற்கு வெறுமனே திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே காரணமல்ல. 

சினிமாவோடு மறைமுகமாக வருமானம் கொழிக்கும் மற்ற விஷயங்களும்தான் காரணம். இதெல்லாம் சாத்தியம் ஆனதால்தான் இன்று தென்னிந்திய திரைப்படங்கள் கூட நூறு கோடியை தாண்டி வசூலிக்க முடிகிறது.

கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக வளர சினிமாக்காரர்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் கனிகளை எதிர்ப்பார்க்க முடியும்.

-யுவகிருஷ்ணா
 http://www.luckylookonline.com

நன்றி: திரு. யுவகிருஷ்ணா 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்