Skip to main content
அணுசக்தி: சரியான பயன்பாடு நிச்சயம் நன்மை தரும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்)

ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சீனாவில் அணு உலைகள் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை சமீபத்தில் அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. சீனாவில் ஏற்கெனவே 13 அணு மின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 40 அணு மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

“அணு சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் சுத்தமானது. சுற்றுச்சூழல் மாசு அற்றது. அனல் மின் நிலையத்துக்கு டன் கணக்கில் நிலக்கரி தேவை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், குறைந்த அளவிலான யுரேனியம் தாதுவைக் கொண்டு அணுமின் நிலையங்களை செயல்படுத்த முடியும்.

அணுமின் நிலையங்களை அமைத்து 20000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தோரியம் தாது அதிகளவில் உள்ளது. எனினும், அதை பயன்படுத்தும் வகையிலான அணு உலைகளை அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இப்போது யுரேனியம் தாதுவை பயன்படுத்தக்கூடிய அணு உலைகள்தான் அமைக்கப்படுகின்றன. “இந்தியாவில் அணு உலைகளை நிறுவும் பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.’

“ஜனநாயக நாட்டில் விவாதம் நடத்தவும், வாதாடவும் மக்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தேன். அந்த அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை அளித்துள்ளேன்.’


சுற்றுச்சூழல் மாசுபாடும், சீதோஷ்ண நிலை மாறுபாடும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. எரிபொருள் அச்சுறுத்தலாக உறுவெடுத்துள்ளன. எரிபொருள் சுதந்திரம் (பிற நாடுகளைச் சார்ந்திருக்காத தன்மை) என்ற லட்சியத்தை அடைய பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு என்ற நிலையிலிருந்து எரிபொருள் சுதந்திரம் என்ற இலக்கை 2030க்குள் உலக நாடுகள் அடைய வேண்டும்.

இதற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக பொருளாதார தேக்க நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது இந்தியாவையும், சீனாவையும் கூட விட்டு வைக்கவில்லை. இதை எதிர்கொள்ள பிராந்திய அளவிலான நாடுகளிடையே எரிபொருள், நீர்வளம், சுகாதாரம், கட்டமைப்பு, வேலைவாயப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்காக 75 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த ஆண்டுகளுக்கு செலவிட வேண்டும்.

என்னதான் நாம் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், உலகில் 300 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதற்கு “புரா’ திட்டத்தை (ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) செயல்படுத்த வேண்டும். இதற்கென இத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்க வேண்டும்.
இப்பணிகளில் கவனம் செலுத்தினால், உலகில் பயங்கரவாதம் ஒழியும்.’

நன்றி:  கலைமகள் இதழ் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...