Skip to main content
அணுசக்தி: சரியான பயன்பாடு நிச்சயம் நன்மை தரும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
(முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்)

ஜப்பானில் 2011ஆம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சீனாவில் அணு உலைகள் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடையை சமீபத்தில் அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டது. சீனாவில் ஏற்கெனவே 13 அணு மின்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 40 அணு மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

“அணு சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் சுத்தமானது. சுற்றுச்சூழல் மாசு அற்றது. அனல் மின் நிலையத்துக்கு டன் கணக்கில் நிலக்கரி தேவை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். ஆனால், குறைந்த அளவிலான யுரேனியம் தாதுவைக் கொண்டு அணுமின் நிலையங்களை செயல்படுத்த முடியும்.

அணுமின் நிலையங்களை அமைத்து 20000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தோரியம் தாது அதிகளவில் உள்ளது. எனினும், அதை பயன்படுத்தும் வகையிலான அணு உலைகளை அமைக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இப்போது யுரேனியம் தாதுவை பயன்படுத்தக்கூடிய அணு உலைகள்தான் அமைக்கப்படுகின்றன. “இந்தியாவில் அணு உலைகளை நிறுவும் பணிகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.’

“ஜனநாயக நாட்டில் விவாதம் நடத்தவும், வாதாடவும் மக்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தேன். அந்த அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு தொடர்பாக நானும் சில ஆலோசனைகளை அளித்துள்ளேன்.’


சுற்றுச்சூழல் மாசுபாடும், சீதோஷ்ண நிலை மாறுபாடும் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. எரிபொருள் அச்சுறுத்தலாக உறுவெடுத்துள்ளன. எரிபொருள் சுதந்திரம் (பிற நாடுகளைச் சார்ந்திருக்காத தன்மை) என்ற லட்சியத்தை அடைய பிராந்திய அளவிலான ஒத்துழைப்பு என்ற நிலையிலிருந்து எரிபொருள் சுதந்திரம் என்ற இலக்கை 2030க்குள் உலக நாடுகள் அடைய வேண்டும்.

இதற்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செலவிட வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக பொருளாதார தேக்க நிலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது இந்தியாவையும், சீனாவையும் கூட விட்டு வைக்கவில்லை. இதை எதிர்கொள்ள பிராந்திய அளவிலான நாடுகளிடையே எரிபொருள், நீர்வளம், சுகாதாரம், கட்டமைப்பு, வேலைவாயப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்காக 75 கோடி அமெரிக்க டாலர்களை அடுத்த ஆண்டுகளுக்கு செலவிட வேண்டும்.

என்னதான் நாம் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறப்பட்டாலும், உலகில் 300 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாயப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இதற்கு “புரா’ திட்டத்தை (ஊரகப் பகுதிகளில் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) செயல்படுத்த வேண்டும். இதற்கென இத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்க வேண்டும்.
இப்பணிகளில் கவனம் செலுத்தினால், உலகில் பயங்கரவாதம் ஒழியும்.’

நன்றி:  கலைமகள் இதழ் 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்