சமீபத்து விடுமுறையில் குடும்பத்துடன் சாலக்குடி (கேரளா) சென்ற போது அங்குள்ள ஆயுர் சௌக்கியம் ரிஸார்ட்டில் தங்கினேன். ரிஸார்ட் மிக அருமையான இடத்தில் இருக்கிறது. ரிஸார்ட்டை ஒட்டி சாலக்குடி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. இரண்டு நாட்களும் ஒரே குளியல்மயமாக, ஜாலியாக கழிந்தது. ரிஸார்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் என்றாலும் மற்ற வசதிகள் நன்றாக இருக்கின்றன. ஒரே குறை, சுற்றிலும் தப்பித் தவறி கூட செல்ல கடைகளோ, உணவகமோ, ஏன் ஒரு டீக்கடை கூட இல்லை. ஏர்டெல் சிக்னல் நன்றாக கிடைக்கிறது. சுற்றுலா செல்ல சாலக்குடி ஒரு அருமையான இடம்.
உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...




Comments