சமீபத்து விடுமுறையில் குடும்பத்துடன் சாலக்குடி (கேரளா) சென்ற போது அங்குள்ள ஆயுர் சௌக்கியம் ரிஸார்ட்டில் தங்கினேன். ரிஸார்ட் மிக அருமையான இடத்தில் இருக்கிறது. ரிஸார்ட்டை ஒட்டி சாலக்குடி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. இரண்டு நாட்களும் ஒரே குளியல்மயமாக, ஜாலியாக கழிந்தது. ரிஸார்ட் சாப்பாடு ரொம்பவே சுமார் என்றாலும் மற்ற வசதிகள் நன்றாக இருக்கின்றன. ஒரே குறை, சுற்றிலும் தப்பித் தவறி கூட செல்ல கடைகளோ, உணவகமோ, ஏன் ஒரு டீக்கடை கூட இல்லை. ஏர்டெல் சிக்னல் நன்றாக கிடைக்கிறது. சுற்றுலா செல்ல சாலக்குடி ஒரு அருமையான இடம்.
நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...




Comments