Skip to main content

கண்கவர் சுற்றுலா தலம் கவி (Gavi)


கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கண்கவர் இடங்களில் அதிகம் அறியப்படாத இடம், கவி. பத்தனம்திட்டா மாவட்டத்தில், தேக்கடியிலிருந்து சுமார் 40 கி.மி. தொலைவில் உள்ளது இந்த அழகான இடம். 


நிறையப்பேருக்கு இன்னும் இதைப் பற்றி அதிகம் தெரியாததால் இந்த இடம் இன்னும் அதிகம் மாசுபடாமல் இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கவிக்கு செல்ல வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவு சீட்டு பெற்றே செல்லவேண்டும். 


தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். கவி இதனுள்ளே இருப்பதால் அதன் தனித்துவமான அழகு குன்றாமல் சிறப்பாக இருக்கிறது. கவிக்கு ஒரு முறை சென்றால் ஸ்விட்சர்லாந்து அல்லது குறைந்த பட்சம் காஷ்மீர் சென்ற அனுபவத்தைப் பெறலாம்.


கவி பசுமை மாறா காடுகள் (evergreen forests ) மத்தியில் உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிங்கவால் குரங்கு, சிறுத்தை, மான் ஆகிய பல வனவிலங்குகள் உள்ளன. கவிக்கு செல்லும் பாதை வளைந்து நெளிந்து தேனீர் எஸ்டேட்கள் வழியே செல்லும்போது, வழியில் சின்ன, சின்ன அருவிகள், வாய்க்கால்கள் , ஓடைகள் ஆகியவை குறிக்கிடுகின்றன.  அதிக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தால் ஒரு இடம் எவ்வளவு இயற்கை செழிப்புடன் இருக்கும் என்பதற்கு கவி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 


பம்பா தாவரவியல் பூங்கா இங்குள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3400 அடிகள் மேலே உள்ள கவியிலிருந்து சபரிமலை மிக அருகே உள்ளது.


பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையில் இங்கு செல்ல ஏற்ற சூழல் உள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை பெய்வதால் இரவு நேரத்தில் 10 டிகிரி வரை கூட செல்ல வாய்ப்புள்ளது. எனவே குளிர் அதிகமாகவே இருக்கும். நல்ல வேளை இங்கு தங்குவதற்கு இடம் இல்லை. இதை இப்படியே கேரள அரசு வைத்திருந்தால் நல்லது.

புகைப்படங்கள் நன்றி: மை கேரளா ஹோட்டல்ஸ் வலை தளம் 


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்