Skip to main content

சேவல் சண்டை : தமிழ்நாட்டின் தனி அடையாளம்


முடிகள் அனைத்தும் சிலுப்பிக் கொண்டு நிற்க, வலது காலில் பதம் தீட்டப்பட்ட கத்தியை போர் வீரனைப் போல் ஏந்திக் கொண்டு, கூர்மையான அலகால் கொத்துவதற்கு தயாராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சேவல்களின் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?
இதெல்லாம், கிராமத்திலும், சினிமாவிலும் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்று நீங்கள் காரணம் சொன்னால், தயவு செசய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், கிராமங்களை விட அதிக அளவில் சேவல் சண்டை நடப்பது வடசென்னை பகுதியில் தான்.

ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை; என சில ஒற்றுமைகள் உண்டு.

தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சண்டைகள் சண்டைகளாக இருந்த போது கூட இல்லாத விமர்சனங்கள், அது சூதாட்டமாக மாறிய போது பல்வேறு காரணங்களுகாக நிராகரிக்கப்பட்டது. (?)

மறைமுக சண்டை:

ராயபுரம், சூளை, பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர், வால்டாக்ஸ் ஆகிய பகுதிகளில், தொன்று தொட்டு சேவல் சண்டைகள் நடந்து வருகிறது. இங்கு வளர்க்கப்படும் சேவல்கள், போட்டிக்கென்றே தயார் படுத்தப்பட்டு, விற்கப்படுகின்றன. சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், அடிக்கடி நடை பெறும் சண்டைகளுக்கு, இப்பகுதிகளில் தான் சூதாட்டத்திற்கு பணம் சேசகரிக்கப்படுகிறது.

சேசவல் சண்டை மறைமுகமாக, மனிதர்களின் சண்டை. தங்களால் நேரடியாக செசய்ய முடியாததை, சேவல்களால் மறைமுகமாக செசய்யும் மனிதர்களால் தான், சேவல் சண்டையின் தீவிரம், இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது. சென்னையில் கவுரவத்திற்காக சேவல்கள் வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.பணம் என்பதைத் தாண்டி, தோற்றுப்போன எரிச்சலுடன், எப்போதும் பழிவாங்கும் வன்மத்துடன் அலையும் மனிதர்களாலும் சேவல் சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

"சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கிறது. கிராமங்களில் பொழுது போக்குக்காக இருக்கிற சேவல் சண்டை, நகரங்களில் சூதாக மாறி விடுகிறது.

நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சேவல் சண்டையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சேவல் சண்டையில் ஜெயித்தவன் மட்டுமே ஆண்மை உள்ளவன் என்றும், தோற்றவன் ஆண்மையற்றவன் என்றும் கருதப்படுவார்கள் என்று, மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்' என்கிறார் சேசவல் சண்டைகள் குறித்து ஆய்வு செய்து வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சேவல் "ஜிம்'

சண்டைக்கு சேவலை தயார் படுத்துவதே தனிக்கலை. தினமும் அதற்கு பல்வேறு பயிற்சிகள் கொடுக்க வேண்டும். பயிற்சிகள் குறித்துப் பேசிய சண்டை சேவல் பயிற்சியாளர் குமரேசன், " களத்தில விடுறதுக்கு முன்னாடி 21 நாள் அதிவேக பயிற்சி கொடுப்போம். தினமும் காலையில பெரிய தொட்டியில தண்ணி ஊத்தி அதுல நீச்சல் அடிக்க வைப்போம். அதனால சேவலுக்கு நல்ல மூச்சுப்பயிற்சி வரும். எடையும் கூடாது. அப்ப தான் களத்துல நின்னு வெளயாட முடியும். அதுக்கு சத்தான பண்டத்தை தான் கொடுப்போம். ஆட்டு ஈரல், கோதுமை, வேகவைத்த கறி கொடுப்போம். அப்ப தான் சேவல் திடகாத்திரமா இருக்கும். ஒரே அடியில, எதித்து நிக்கிற சேவல் சுருண்டுறனும்ல ' என்றார்.

அவரது பேச்சில் ஒரு படை வீரனை தயார் செசய்வது போன்ற எதிர்பார்ப்பு எதிரொலிக்கிறது. ஒரு வருடம் முழுக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரே,சேவல் களத்தில் இறக்கி விடப்படுகிறது. "சேவலை சசண்டைக்கு தயார்படுத்தும் போதே, மெல்ல பயிற்றுவிப்பவனின் மூர்க்கமான குணம் சேவலுக்கும் இறங்கி விடுகிறது' என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒலிம்பிக்ஸை விட கெடுபிடி:

சேவல் சண்டைக்கென்று பொது விதிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட எடை, குறிப்பிட்ட உயரம் உள்ள சேவல்களோடு தான் எதிர் சேவலை சண்டைக்கு நிறுத்த முடியும். சேவல்களுக்கு ஊக்க மருந்தோ, மதுபானமோ கொடுக்கப்பட்டது தெரிந்தால், போட்டியிலிருந்து நீக்கப்படும்.

இதே போல் தொடர்ந்து செய்யப்படுவதாக தெரிந்தால், சேவலும், சேவலின் உரிமையாளரும் போட்டியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். சேவலின் காலில் கட்டி விடப்படுகின்ற கத்தி, இரண்டு அல்லது மூன்று இஞ்சு மட்டுமே இருக்க வேண்டும். சண்டை நடக்கும் பொழுது, சேவல்களை ஆசுவாசசப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்கிற நேரத்தை, " தண்ணிக்கு விடுவது ' என்பர்.

ஆசுவாசத்தின் பொழுது, சேசவலுக்கு தண்ணீர் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்துவர். தென்மாவட்டங்களில் ஆறு கட்டங்களாக நடைபெறும் சேவல் சண்டை, 20-20 கிரிக்கெட் போல் சென்னையில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமும், "இருபது நிமிடம்' நடைபெறும்.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிர் சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையில்லாமல் விலை போகும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.

செசன்னையின் பல்வேறு பகுதிகளில் சேவல் சண்டையை முழுநேர தொழிலாக கொண்டிருப்பவர்கள், தொடர்ந்து சேவலை தயார்படுத்துவதும், சண்டைக்கு விடுவதுமாக இருக்கிறார்கள். புழுதி பறக்கும் பூமியில், எதற்கென்றே தெரியாமல் எதிராளியுடன் தாடை முடிகளை விரித்தபடி, சேவல் சண்டை தொடரத்தான் செய்யும்.
 
தகவல் நன்றி: மெட்ராஸ் டே பகுதி - தினமலர் இணைய தளம் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...