Skip to main content

லான்ஸ் ஆம்ஸ்டிராங் மீது ஊக்க மருந்து புகார்



அமெரிக்காவை சேர்ந்தவர் லான்ஸ் ஆம்ஸ்டிராங்,(வயது 40). மிக நீண்ட தூர சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றார். பிரான்சில் ஆண்டுதோறும் நடக்கும் "டூர் டி பிரான்ஸ் போட்டியில் திறமை நிரூபித்தார். 21 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் சுமார் 3, 500 கி.மீ., தூரத்தை கடக்க வேண்டியிருக்கும். இதில், அசத்திய ஆம்ஸ்டிராங் 1996 முதல் 2005 வரை தொடர்ந்து 7 முறை பட்டம் வென்று சாதனை படைத்தார். 


சைக்கிள் பந்தய சாம்பியன் லான்ஸ் ஆம்ஸ்டிராங், தன் மீதான ஊக்க மருந்து பிரச்னையை எதிர்த்து போராடப் போவதில்லை என நேற்று அறிவித்தார். இதையடுத்து இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. "டூர் டி பிரான்ஸ் தொடரில் வென்ற 7 பட்டங்கள் உட்பட இவரது சாதனைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

1996ல் "டெஸ்டிக்குலர் கேன்சரால் பாதிக்கப்பட்டார். இது மூளை, நுரையீரலில் பரவியது. பின் "டெஸ்டிக்குலர் பகுதியில் " அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து "கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு, "கேன்சரில் இருந்து மீண்டார். இவரை முன்னுதாரணமாக கொண்டு தான் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டார்.

கடந்த 2011ல் ஓய்வு பெற்ற ஆம்ஸ்டிராங், கேன்சர் அறக்கட்டளை மூலம் கோடிக்கணக்கில் நிதி திரட்டி, வசதியற்ற நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
 
கேன்சரில் இருந்து மீண்ட இவரால், ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து மட்டும் மீள முடியவில்லை. 1999ல் இவரது சிறுநீர் மாதிரியில்                                      "கார்டிகோஸ்டீராய்டு" என்ற தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் 2008 முதல் 2009 வரை 24 முறை இவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்தது. இருப்பினும், அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு மையம்(யு.எஸ்.ஏ.டி.ஏ.,) இவருக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்தது. இதனை எதிர்த்து அமெரிக்க பெடரல் கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து யு.எஸ்.ஏ.டி.ஏ., தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று திடீரென தனக்கு எதிரான ஊக்க மருந்து சர்ச்சையில், போராட்டத்தை தொடரப் போவதில்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

எனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். இனிமேல் இப்பிரச்னை பற்றி எந்த சூழ்நிலையிலும் எதுவும் பேசப் போவதில்லை. "டூர் டி பிரான்ஸ் தொடரில் நான் தான் 7 முறை வென்றேன் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, எனது பெருமையை யாரும் பறிக்க முடியாது. கேன்சர் சேவை பணிக்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன். 

ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் ஒரு கட்டத்தில் "போராடியது போதும் என்று சொல்ல நேரிடும். எனக்கு இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. இந்த முட்டாள்தனமான ஊக்க மருந்து பிரச்னை காரணமாக எனது பணியிலும், குடும்பத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் போட்டிகளில் பங்கேற்றேன். ஆனால், சிலர் தனிப்பட்ட லாபத்துக்காக என் மீது தவறாக குற்றம்சுமத்துகின்றனர். இதில் நியாயமில்லை". ஒவ்வொரு போட்டியிலும் நான் பல்வேறு போதை/ஊக்க மருந்து சோதனைகளுக்கு பின்னரே பங்கு பெற்றேன். ஏழு முறையும் சாம்பியன் பட்டங்களை வென்றது நான்தான் என்பது இந்த உலகுக்கு தெரியும். எனக்கு அதுவே போதும்".
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தனக்கு எதிரான ஊக்க மருந்து பிரச்னையில் போராட மறுப்பதால், ஆம்ஸ்டிராங் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கு சமமாக கருதப்பட்டது. இதையடுத்து அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு மையம் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இவரது 7 "டூர் டி பிரான்ஸ் உட்பட அனைத்து பட்டங்களும், போட்டிகளின் போது அவர் வென்ற  பரிசுத் தொகையும் மொத்தமாக பறிக்கப்பட்டன. 

வாழ்வில் பல தடைகளை வென்று போராட வேண்டும் என்று வலியுறுத்திய இவருடைய "Its Not About the Bike" என்ற அருமையான புத்தகம் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டி. 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்