Skip to main content

ரூ.1.86 இலட்சம் கோடி புதிய ஊழல்


புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:  

சுரங்க ஒதுக்கீடு: கடந்த 2005லிருந்து, 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல், சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 - 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, கணக்கிட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிட்டுள்ளோம்.

ரிலையன்ஸ்: மத்திய பிரதேசத்தில் உள்ள சாசன் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மின் நிலையத்துக்காக, விதிமுறைகளை மீறி, உபரியாக உள்ள நிலக்கரிகளை எடுத்துக் கொள்ள, அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக லாபம் அடைந்துள்ளது. இந்த தொகையும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடாகவே கருத வேண்டும்.

விமான நிலையம்
: டில்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதிலும், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டில்லி விமான நிலையம், தற்போது அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டில்லி விமான நிலைய ஆணையம் லிட்.,டும் (டி.ஐ.ஏ. எல்.,), ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, விமான நிலைய பொறுப்புகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக, இந்த நிறுவனங்களுக்கு, 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டு குத்தகையாக, அந்த நிறுவனங்களுக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து, 60 ஆண்டுகளுக்கு, இந்த நிலத்தின் மூலம், டி.ஐ.ஏ.எல்.,லும், ஜி.எம். ஆர்., நிறுவனமும், 1,63,557 கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆண்டுக்கு, வெறும் 100 ரூபாய் மட்டுமே, குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களும், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம், கட்டணம் வசூலித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மேம்பாட்டுப் பணிகளுக்காக, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, எந்த விஷயமும் இடம் பெறாத நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள், 3,415 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நெருக்கடி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில், அந்த துறையை, பிரதமர் மன்மோகன் சிங், கவனித்து வந்ததால், அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நன்றி:  தினமலர் இணைய  தளம் 

மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாட்டு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது: "திட்டம் போட்டு திருடற  கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது." ஒரே ஒரு வித்தியாசம்; பாட்டின் இரண்டாவது பகுதி நம் நாட்டில் நடக்கவில்லை.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்