Skip to main content

"ஷார்ட் டவர் (The Shard Tower)" லண்டன்

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. "ஷார்ட் டவர் (The Shard Tower)" என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கட்டடம், 1,016 அடி உயரமுள்ளது. 72 தளங்கள் இதில் உள்ளன. இதன் புறத்தோற்றம் முழுவதும், ஆறு லட்சம் சதுர அடி பரப்பிலான, கண்ணாடிகளால் மூடப்பட்டுள்ளது. இவை, எட்டு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவு.


கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து, உச்சிக்கு செல்வதற்காக, 44 லிப்ட்கள் உள்ளன. இதன் அடித்தளம், "பப்ளிக் ஏரியா' என, பெயரிடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளன. நான்காவது தளத்தில் இருந்து, 28வது தளம் வரை, அலுவலகங்கள் உள்ளன.


அடுத்து, 31வது தளத்தில் இருந்து, 33வது தளம் வரை, சர்வதேச அளவில் பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 34ல், இருந்து, 52வது தளம் வரை, அழகு நிலையங்கள், "ஸ்பா'க்கள் செயல்படுகின்றன. 53ல், இருந்து, 65வது தளம் வரை, குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 68லிருந்து, 72வது தளம் வரை, பார்வையாளர் மாடத்துக் காக ஒதுக்கப்பட்டுள்ளது.


அடித்தளத்தில் இருந்து, கோபுரத்தின் உச்சிக்கு சென்று, லண்டன் நகரின் அழகை பார்வையிடுவதற்கு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத் தினருக்கு, 85 பிரிட்டிஷ் பௌண்ட்(கிட்டத்தட்ட ரூ.7,482/- ) வசூலிக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழா, இரவு நேரத்தில் நடந்தது. லேசர் ஒளி வெள்ளத்தில், ஷார்ட் கோபுரம், சொர்க்கம் போல் காணப்பட்டது. இதைக் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு, அந்த பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டது.

இந்த அழகு அதிசயத்தை கட்டுவதற்கு, 430 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதை விட, பல நூறு கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளதாக, பிரிட்டனில் பேச்சு அடிபடுகிறது. கோபுரத்தின் சிறப்பு குறித்து, அதன் நிர்வாகிகள், "மேக மூட்டம் இல்லாத தெளிவான வானிலையின்போது, ஷார்ட் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், அருகில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளை பார்க்க முடியும்' என்கின்றனர்.

இடது பக்கம் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம், வலது பக்கம் இயற்கை எழில் கொஞ்சும் தேம்ஸ் நதி, ஆகியவற்றுக்கு நடுவில், மிக பிரமாண்டமாக, காற்றுடன் கவிதை பாடிக் கொண்டிருக்கும் ஷார்ட் கோபுரத்துக்கு, ஒரு நடை போய்விட்டு வரலாமா? 

செய்திகள் நன்றி: தினமலர் இணைய தளம் 


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...