Skip to main content

"ஷார்ட் டவர் (The Shard Tower)" லண்டன்

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. "ஷார்ட் டவர் (The Shard Tower)" என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கட்டடம், 1,016 அடி உயரமுள்ளது. 72 தளங்கள் இதில் உள்ளன. இதன் புறத்தோற்றம் முழுவதும், ஆறு லட்சம் சதுர அடி பரப்பிலான, கண்ணாடிகளால் மூடப்பட்டுள்ளது. இவை, எட்டு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவு.


கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து, உச்சிக்கு செல்வதற்காக, 44 லிப்ட்கள் உள்ளன. இதன் அடித்தளம், "பப்ளிக் ஏரியா' என, பெயரிடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளன. நான்காவது தளத்தில் இருந்து, 28வது தளம் வரை, அலுவலகங்கள் உள்ளன.


அடுத்து, 31வது தளத்தில் இருந்து, 33வது தளம் வரை, சர்வதேச அளவில் பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 34ல், இருந்து, 52வது தளம் வரை, அழகு நிலையங்கள், "ஸ்பா'க்கள் செயல்படுகின்றன. 53ல், இருந்து, 65வது தளம் வரை, குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 68லிருந்து, 72வது தளம் வரை, பார்வையாளர் மாடத்துக் காக ஒதுக்கப்பட்டுள்ளது.


அடித்தளத்தில் இருந்து, கோபுரத்தின் உச்சிக்கு சென்று, லண்டன் நகரின் அழகை பார்வையிடுவதற்கு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத் தினருக்கு, 85 பிரிட்டிஷ் பௌண்ட்(கிட்டத்தட்ட ரூ.7,482/- ) வசூலிக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழா, இரவு நேரத்தில் நடந்தது. லேசர் ஒளி வெள்ளத்தில், ஷார்ட் கோபுரம், சொர்க்கம் போல் காணப்பட்டது. இதைக் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு, அந்த பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டது.

இந்த அழகு அதிசயத்தை கட்டுவதற்கு, 430 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதை விட, பல நூறு கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளதாக, பிரிட்டனில் பேச்சு அடிபடுகிறது. கோபுரத்தின் சிறப்பு குறித்து, அதன் நிர்வாகிகள், "மேக மூட்டம் இல்லாத தெளிவான வானிலையின்போது, ஷார்ட் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், அருகில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளை பார்க்க முடியும்' என்கின்றனர்.

இடது பக்கம் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம், வலது பக்கம் இயற்கை எழில் கொஞ்சும் தேம்ஸ் நதி, ஆகியவற்றுக்கு நடுவில், மிக பிரமாண்டமாக, காற்றுடன் கவிதை பாடிக் கொண்டிருக்கும் ஷார்ட் கோபுரத்துக்கு, ஒரு நடை போய்விட்டு வரலாமா? 

செய்திகள் நன்றி: தினமலர் இணைய தளம் 


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்