Skip to main content


செய்வாரா ஆனந்த்?

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற, விஸ்வநாதன் ஆனந்த், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார். அப்போது, ஆனந்த்திற்கு, தமிழக அரசின் சார்பில் இரண்டு கோடி ரூபாய் ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார்.

இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன், கடந்த 1992ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை, முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் உயர்ந்த சாதனை புரியும் வகையில், பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கான ஊக்கத்தொகையும் இருமடங்காக்கப்பட்டது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த மாதம் நடந்த, உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த, விஸ்வநாதன் ஆனந்த்தின் சாதனையை பாராட்டி, தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல், விஸ்வநாதன் ஆனந்த், தன் மனைவி அருணாவுடன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்த முதல்வர், 2 கோடி ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து, வெளியில் வந்த விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில்,""தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 7 வயது முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை உருவாக்கும். மேலும், ஆசிரியர்களும் செஸ் போட்டியில் பயிற்சி பெற வேண்டும். செஸ் போட்டியானது உயர்ந்த நிலைக்கு செல்ல, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்,'' என்றார்.

நன்றி: தினமலர்

என்னுடைய கருத்து:
மறுபடியும் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு வாழ்த்துக்கள். ஆனந்த் ஏற்கனவே இந்த போட்டியிலும், வேறு பல போட்டிகளிலும் வென்றதின் மூலம் பல கோடிகளை சம்பாதித்துவிட்டார். எனவே அவருக்கு இந்த "ஊக்கத் தொகை" சற்று அதிகம்தான். அவரும் இந்தப் பணத்தை தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, முதலீடு செய்யப்போவதில்லை. இரண்டாவது, ஆனந்தைப் போன்று ஏற்கனவே பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்து விட்டவர்கள், இங்கே, தமிழ்நாட்டில், வசதி இல்லாத, ஆனால் ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு ஒரு "செஸ் அகாடமி" ஆரம்பித்து இலவசமாக செஸ் கற்பிக்கலாமே; ஆனந்த் இதைச் செய்தாரென்றால் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த பெரும் பரிசு நியாயம் என்று சொல்லலாம்; செய்வாரா ஆனந்த்?

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்