Skip to main content

பீர் விற்பனை ஜோரோஜோர்

உலகில் அதிக அளவில் விற்பனையாகும் "ஸ்னோ"பீர் -ஒரு சீனா தயாரிப்பு
உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... பீர் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம்.

ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே நடத்தப்படும் நடைமுறை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், பீர் அதிகமாக விற்பனையாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், பீர் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பீர் விற்பனை, 72 சதவீதம் வரை, சரிவை சந்தித்துள்ளது. பீர் குடிப்பதால், உடல் எடை அதிகரித்து விடுகிறது என, அமெரிக்க மக்களிடையே கருத்து எழுந்துள்ளது தான், இந்த சரிவுக்கு காரணம்.

ஜப்பானிலும் பீர் விற்பனை, கணிசமாக குறைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன், எந்த அளவுக்கு விற்பனையானதோ, அந்த அளவுக்கு தான், தற்போதும் விற்பனையாகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பானின் ஏற்றுமதியை அடியோடு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாலும், வயதான மக்கள், பீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டதாலும் தான், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில், கடந்த, 2008ல் பீருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதில் இருந்தே, அதன் விற்பனை தள்ளாடத் துவங்கி விட்டது. பீரின் விலை, அளவுக்கு அதிகமாக <உயர்ந்து விட்டதால், இதை குடிப்பதற்கு பதிலாக, வெறும் தண்ணீரை குடித்து விடலாம் என கருதிய பிரிட்டன் மக்கள், பீருக்கு டாடா கூறி விட்டனர். இதனால், சமீபகாலமாக, பிரிட்டனில் ஏராளமான பார்களுக்கு மூடு விழா நடத்தி விட்டனர்.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் மொத்த பீர்களில், 20 சதவீதம், ஜெர்மனியில் தான் விற்பனையாகிறது. அங்கு பீர் விற்பனை குறையவில்லை என்றாலும், அதன் விற்பனை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என, ஜெர்மனியில் உள்ள பீர் தயாரிப்பு நிறுவனங்கள், புலம்பத் துவங்கி விட்டன.

வளர்ந்து வரும் நாடுகளில், நிலைமை தலைகீழாக உள்ளது. இந்தியாவில், கடந்தாண்டில் மட்டும் பீர் விற்பனை, 14 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில், 170 கோடி லிட்டர் பீர் விற்பனையாகியுள்ளதாக, ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த, 2004ம் ஆண்டின் விற்பனையை ஒப்பிடுகையில், தற்போது, 70 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி மற்றும் பீர் குடிப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஆகியவை தான், இந்த கிடுகிடு வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.

பீர் விற்பனையில் உலகின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது சீனா. கடந்த சில ஆண்டுகளாக, பீர் விற்பனை, இங்கு சக்கை போடு போடுகிறது. கடந்த, 2004ல், 28 ஆயிரத்து, 640 கிலோ லிட்டராக இருந்த பீர் விற்பனை, 2009ல், 42 ஆயிரத்து, 194 கிலோ லிட்டராக அதிகரித்துள்ளதால், மேற்கத்திய நாடுகளே, இதைப் பார்த்து அசந்து போய் இருக்கின்றன.

நன்றி: தினமலர் 


 
பீர் குடிப்பது தவறு என நினைக்கும் மக்களுக்காகவே சீனா ஒரு புதிய வகை பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக்க, முழுக்க அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த பீரின் பெயர் "சிங்-டோ" (Tsingtao ). தற்போது மும்பை, பூனா, டெல்லி ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்கிறது இதைத் தயாரிக்கும் சிங்-டோ ப்ருவரி நிறுவனம்.

 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்