Skip to main content

பாயிண்ட் பிரேக் (Point Break) -"அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அடிக்கும் வங்கிக் கொள்ளைகள்" - ஆங்கிலப் பட விமர்சனம்


 ஜானி (கினு ரீவ்ஸ்) ஒரு இளம் FBI அதிகாரி. அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சலிஸ் (லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது தவறு) நகரில் அடிக்கடி பிரபல வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் உருவமுள்ள முகமூடிகளை அணிந்த ஒரு நால்வர் குழு இந்தக் கொள்ளைகளை மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடத்திவிட்டு தப்பிச் செல்கிறது. ஜானியின் மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸ் (கேரி புசி) இந்தக் கூட்டத்தைப் பிடிக்க வழி தெரியாமல் தவிக்கிறார். பல நாட்களாக நடக்கும் இந்தக் கொள்ளைகளின் பல வீடியோக்களை ஆராய்ந்து அவர்கள் தேர்ந்த wind surfer களாக (தண்ணீருக்கு மேல் பலகையின் மூலம் சறுக்கி விளையாடுவது) இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜானியிடம் சொல்கிறார்.

எப்போதுமே இது போன்ற தீர விளையாட்டுகளில் (adventue sports) ஆர்வமுள்ள ஜானி இது போன்ற குழுக்களை ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட குழுவில் சேர ஆர்வம் காட்டுகிறான். வங்கிகளைக் கொள்ளை அடிக்கும் நால்வர் குழுவின் எல்லாவிதமான குணாதிசயங்களும் உள்ள அதே போன்ற நான்கு பேர் கொண்ட ஒரு குழுவில் தன்னை ஒரு தேர்ந்த surfer ஆக்க அவர்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறான். அந்தக் குழுவின் தலைவனான போதி (பேட்ரிக் ஸ்வேஸி) இதற்கு ஒப்புக் கொள்கிறான். குழுவில் சேர்ந்து surfing கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் ஜானிக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்துப் போகிறது. போதியின் நண்பியான டைலருக்கும் (லோரி பெட்டி) ஜானிக்கும் காதல் உண்டாகிறது. போதி குழுவில் இருந்து கொண்டு அவ்வப்போது தன்னுடைய மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸுக்கு செய்தி அனுப்பிகிறான் ஜானி. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இதுவரை கொள்ளை அடிக்கப் படாத வங்கிகளின் அருகே கண்காணிப்பு பணியில் பாப்பாஸ் மற்றும் ஜானி இருவரும் ஈடுபடுகின்றனர்.

விரைவிலேயே அவர்கள் இருவரும் ஒரு கொள்ளை நடப்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டு போதியின் குழுவை விரட்டுகின்றனர். போதி தப்பி ஓடும் போது அவனை விரட்டும் ஜானி காலில் அடிபட்டு கீழே விழுந்து விடுகிறான். கூட்டத்தில் ஒருவனை சுடும் வாய்ப்பு இருந்தும் சுடாமல் தயங்குகிறான். பாப்பாஸ் இதைக் கண்டு கொதித்துப் போகிறார். ஜானி வேண்டுமென்றே சுடாமல் இருந்ததாக பழி சொல்கிறார். ஜானியின் நண்பி டைலருக்கு அவன் FBI ஐச் சேர்ந்தவன் என்று தெரிய வருகிறது. போதியின் குழுவிலும் ஜானியின் சுயரூபம் தெரிந்து விட, போதி டைலரைக் கடத்துகிறான். அவளை விடுவிக்க வேண்டுமென்றால், ஜானி தங்களுடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட வேண்டுமென சொல்கிறான். ஜானி வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்கிறான்.

ஜானியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை மாட்டிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடும்போது  எதிர்பாராவிதமாக அந்த வங்கியில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி சுட ஆரம்பிக்க பெரிய களேபரம் நடக்கிறது. போதியின் நண்பன் க்ரோமெட் இதில் இறக்கிறான். மற்றவர்கள் தப்பிவிட, ஜானி மட்டும் போலீசிடம் மாட்டிக் கொள்கிறான். சரியான நேரத்தில் அங்கு வரும் பாப்பாஸ் ஜானியை விடுவித்து போதியின் கூட்டத்தை விரட்ட ஆரம்பிக்கிறார். ஒரு விமானம் மூலம் இதுவரை கொள்ளை அடித்த பணத்தை எடுத்துக் கொண்டு போதி தப்பிக்க முயலும்போது பாப்பாஸும், ஜானியும் வந்துவிட அவர்களுக்குள் சண்டை நடக்கிறது. இதில் பாப்பாஸ் இறந்துவிட, ஜானியை விமானத்தில் ஏற்றிக் கொண்டு பறக்கிறான் போதி.

நடுவானத்தில் ஜானியை விமானத்தில் விட்டுவிட்டு பாராச்சூட் மூலம் போதியும், நண்பர்களும் குதிக்க, ஆத்திரம் தலைக்கேறும் ஜானி பாராச்சூட் எதுவும் இல்லாமல் குதித்துவிடுகிறான். ஆகாயத்தில் அவர்கள் மிதப்பதையும், ஒருவரை ஒருவர் விரட்டுவதையும் 1991 ம் ஆண்டிலேயே மிகச் சிறப்பாக எது special effect எது நிஜம் எனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் படமாக்கியுள்ளனர். கடைசியில் ஜானி  போதியை எப்படி பிடிக்கிறான், பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் சுவாரசியமான க்ளைமாக்ஸ்.

1991 இல் இந்தப் படம் வந்தபோது கினு ரீவ்ஸ் பெரிய நடிகராகவில்லை. பேட்ரிக் ஸ்வேஸி மட்டுமே இந்தப் படத்தில் நடித்த போது பிரபலமானவர் (இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்). Wind Surfer களின் பரபரப்பான வாழ்க்கையையும், அதில் உள்ள த்ரில் அம்சங்களையும், அட்டகாசமான கடல் அலைகளையும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார் படத்தின் ஒளிப்பதிவாளர் டொனால்ட் பீட்டர் மேன்.

அவதார்,டைட்டானிக் போன்ற பல உலக ஹிட்டுகளை இயக்கிய ஜேம்ஸ் கேமரோனின் (James Cameron) முன்னாள் மனைவி கேத்ரின் பிக்லோ (Kathryn Bigelow) இந்தப் படத்தின் இயக்குனர்.இவர்தான் சென்ற வருடத்தின் சிறந்த படம் என்று பல விருகளை அள்ளிய ஹர்ட் லாக்கரை (Hurt Locker) இயக்கியவர்.  மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தில் நடித்ததன் விளைவாக இன்று வரை surfing மீது மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் கினு ரீவ்ஸ்.

படத்தின் ட்ரைலர் இதோ:


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...