Skip to main content

Contagion - ஆங்கிலப் பட விமர்சனம்


 கண்டேஜியன் (Contagion ) என்றால் தொற்றுநோய் (Contagious disease ) பரப்பக் கூடிய தொற்றுகிருமி.

ஆங்கிலத்தில் டிஸாஸ்டர் (disaster ) வகைப் படங்கள் நிறைய உண்டு. பேரழிவைக் காட்டக் கூடிய படங்களைத் தயாரிப்பது ஹாலிவுட் ஆட்களுக்கு லட்டு சாப்பிடுவது மாதிரி. கதை கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட CG/ அனிமேஷன் மூலம் மிரட்டி விடுவார்கள். சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற 2012 ஒரு சிறந்த உதாரணம். 

உலகையே கிடுகிடுக்க வைக்கும் பயங்கரமான நோய்களை வைத்து இதற்கு முன் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. கண்டேஜியன் படத்தின் சிறப்பம்சம் அதன் மிகச் சிறந்த நடிகர்கள் பட்டாளம்; Matt Damon, Lawrence Fishburne, Jude Law, Kate Winslet, Gwyneth Paltrow என்று அட்டகாசமான நட்சத்திர வரிசை, அதன் இயக்குனர் Steven Soderbergh (Oceans 11, 12 & 13, Erin Brokovich, Traffic, Che), அட்டகாசமான ஒளிப்பதிவு, மிரட்டும் இசை, மின்னல் வேகத்தில் நகரும் திரைக்கதை என்று நிறைய சொல்லலாம்.

படத்தில் Matt Damon மனைவியாக வரும் Gwyneth Paltrow ஹாங்காங் சென்று வருகிறார். சாதாரண தும்மல், இருமல் என ஆரம்பித்து வீட்டுக்கு வந்தவுடன் வலிப்பு வந்து விழுகிறார். மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி இறக்கிறார். மனைவியை மருத்துவமனையில் இழந்த துக்கத்துடன் வீட்டுக்கு வந்தால், Matt Damon மகனும் காலி. மருத்துவர்கள் Matt Damon ஐ தனி சிகிச்சை (Isolation) பிரிவில் வைத்து கண்காணிக்கிறார்கள். அவருக்கு நோயின் அறிகுறிகள் (symptoms) எதுவும் இருப்பதில்லை.

அமெரிக்காவின் அட்லாண்டிஸில் உள்ள CDC (Centre for Disease Control) எனப்படும் அமெரிக்க அரசின் நோய் தடுப்பு மையத்தில் மருத்துவராக பணியாற்றும் Lawrence Fishburne உலகெங்கும் 32 உயிர்கள் அதற்குள் போய்விட்டன என்று தெரிந்து கொண்டு, இது ஒரு பயங்கரத்தின் ஆரம்பம் என உணர்கிறார். தன்னுடன் மருத்துவராக பணியாற்றும் Kate Winslet ஐ முதல் உயிர் (Gwyneth Paltrow) பிரிந்த மின்னியாபோலிஸ் நகருக்கு அனுப்புகிறார். ஒருவேளை இந்த தொற்றுநோய்க் கிருமி ஏதாவது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ என மருத்துவர்கள் சந்தேகப்படுகின்றனர

கைவசம் இருக்கும் மருந்துகள் பயனளிக்காத நிலையில், நோயின் தீவிரத்தைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்படுகின்றன. மக்களை பயப்பட வேண்டாம் என தொலைக் காட்சி மூலம் கேட்டுக் கொள்ளலாம் என Lawrence Fishburne நினைக்கும்போது, ஒரு அடாவடி வலைப்பதிவராக வரும் Jude Law, தன்னுடைய வலைப் பதிவில் அந்த தொற்றுநோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு புரளியை கிளப்புகிறார். அந்த மருந்தைப் பெற ஒரு பெரிய கூட்டமே முயல்கிறது. கட்டுக்கடங்காத கலவரம் வெடிக்கிறது. உலகெங்கும் தொற்று நோய் வெகுவேகமாகப் பரவுகிறது.  ஊர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. உலகெங்கும் கோடிக்கணக்கானவர்கள் அந்த பயங்கர தொற்றுநோய் மூலம் இறக்கிறார்கள்.

இதற்கிடையில், நோயின் ஆரம்பத்தைக் கண்டறிய முயலும் KatenWinslet அந்த நோய்க்கு பலி ஆகிறார். விஞ்ஞானிகளின் அயராத முயற்சியால் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார்கள். 

 நோயின் ஆரம்ப இடமான ஹாங்காங் செல்லும் மருத்துவர் (Marion Cotillard) கடத்தப்படுகிறார்...நிறையவே கதையைச் சொல்லிவிட்டேன். சுவாரசியம் குறையாமல் தட, தடவென செல்லும் இந்தப் படத்தை கண்டிப்பாக பாருங்கள். விஞ்ஞான, மருத்துவ விஷயங்கள், அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடுகள், அரசியல்வாதிகளின் மெத்தனம், என்று எல்லா விஷயங்களிலும் உண்மைக்கு  மிக, மிக அருகிலேயே பயணக்கிறது படம்.

இது போன்ற லாஜிக் மீறாத ஒரு டிசாஸ்டர் படத்தைப் பார்த்து நிறைய  நாளாகிவிட்டது.  இந்தப் படத்தின் ட்ரைலர் பார்க்க கீழே இருக்கும் link ஐ சொடுக்கவும்.

http://www.imdb.com/video/imdb/vi3924270105/




Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...