இன்னுமொரு ரயில் விபத்து. இதுவரை 13 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். காரணம் எப்போதும் போல இன்னும் அறியப்படவில்லை. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. கடந்த முதல்வரோ, இன்றைய முதல்வரோ போட்டி போட்டுக் கொண்டு இலவச தொலைக் காட்சி பெட்டி, இலவச கிரைண்டர், மிக்சி என்று நம் வரிப் பணத்தை பாழடிப்பதை விட்டுவிட்டு இதுபோன்ற வசதிகளை பெருக்குவதற்கு ஏன் முயற்சிப்பதில்லை? இந்த ஞானோதயம் இவர்களுக்கு வர இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோமோ தெரியவில்லை.
உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

Comments