Skip to main content

வேற்று கிரக வாசிகளின் வருகையும், நம் உலகத்தின் அழிவும்?



அழிந்து விடுவோமா?
வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் 
  1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது 
  2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா?, 
  3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?, 
  4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை? 
  5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா?
  6. நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா?
ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.

(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

(Beneficial): நன்மை
  • நம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.
  • நம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.
  • நம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.
  • ஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.
(Neutral): நடுநிலை
  • அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.
  • நம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது 
  • நம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
  • இப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.
(Harmful): தீமை
  • சுயநலத்துடன் இவ்வுலகை ஆக்கிரமிக்கலாம்.
  • நம்மை சாப்பிட்டுவிடலாம்
  •  நம்மை  அடிமைப்படுத்திவிடலாம்
  •  நம்மை அழித்துவிடலாம்.
  • இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.
 இப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:

http://arxiv.org/abs/1104.4462

ஹ்ம்ம்ம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...