Skip to main content

வேற்று கிரக வாசிகளின் வருகையும், நம் உலகத்தின் அழிவும்?



அழிந்து விடுவோமா?
வேற்று கிரக வாசிகளின் வருகை பற்றி ஏராளமாக சலிக்க, சலிக்க புத்தகங்களும், ஹாலிவுட் திரைப் படங்களும் வந்தவண்ணம் உள்ளன. இதில் அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் 
  1. வேற்று கிரக வாசிகள் (ETI எனப்படும் Extra Terrestrial Intelligence) இந்த பரந்த அண்டத்தில் எங்காவது இருக்கிறார்களா?, அல்லது 
  2. நாம் மட்டும்தான் இருக்கிறோமா?, 
  3. அவ்வாறு அவர்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இதுவரை நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை?, 
  4. நாம் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முயன்றும் ஏன் நம்மால் எந்தவிதமான தொடர்பும் (Contact) ஏற்படுத்த முடியவில்லை? 
  5. அவர்கள் நம்மைவிட அதி புத்திசாலிகளாக இருப்பதால் நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லையா அல்லது நம்மைப் போலவே அவர்களும் இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தில் நம்மைத் தேடுகிறார்களா?
  6. நம்முடைய தேவை நாளுக்குநாள் வளர்ந்துவரும் நேரத்தில், நம்முடைய அகோரப் பசிக்கு உலகம் அழியும் முன் காப்பதற்கு அவர்கள் முயற்சிப்பார்களா?
ஒரு வேளை அவ்வாறு அவர்கள் இவ்வுலகிற்கு வந்தால் என்னென்ன நடக்கலாம் என்று இந்த விஞ்ஞானிகள் மூன்று விதமான அனுமானங்களை வெளியிட்டுள்ளனர்.

(பெரிதாக பார்க்க படத்தின் மேல் க்ளிக் செய்யவும்)

(Beneficial): நன்மை
  • நம்முடன் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்மிடம் விஞ்ஞானம் மற்றும் கணிதத்தின் நன்மைகளை பற்றி விவாதிக்கலாம்.
  • நம்முடைய உலகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற நமக்கு வழி காட்டலாம்.
  • நம்முலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லலாம்.
  • ஒருவேளை, நம்முடன் சுமுகமாக இல்லாத பட்சத்தில் நாம் அவர்களை வெல்ல முயற்சிக்கலாம்.
(Neutral): நடுநிலை
  • அவர்கள் ஒருவேளை வேண்டுமென்றே நம்முன் வராமல் ஒளிந்து கொண்டிருக்கலாம்.
  • நம்முடன் தொடர்பு கொள்ள முடியாமல் வெகுதொலைவிலோ, அல்லது நம் அறிவுக்கெட்டாத வேறு புதிய வடிவில், உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம், அல்லது 
  • நம்முடன் தொடர்பு கொள்ள ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
  • இப்படி அவர்கள் இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாமல் இருக்கலாம் அல்லது நமக்கு சிறிய அளவில் தொந்தரவு கூட கொடுக்கலாம்.
(Harmful): தீமை
  • சுயநலத்துடன் இவ்வுலகை ஆக்கிரமிக்கலாம்.
  • நம்மை சாப்பிட்டுவிடலாம்
  •  நம்மை  அடிமைப்படுத்திவிடலாம்
  •  நம்மை அழித்துவிடலாம்.
  • இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது, அவர்களே முழு பிரபஞ்சத்தையும் ஆளவேண்டும் என்ற தீவிர நோக்கில் பலவிதமான முறைகளில் நம்மை ஒழிக்க திட்டமிடலாம்.
 இப்படி பலவிதமான சுவாரசியங்களுடன் விரிகிறது இந்த ஆராய்ச்சி கட்டுரை. முழு கட்டுரைக்கு இங்குள்ள இணைப்பை சொடுக்கலாம்:

http://arxiv.org/abs/1104.4462

ஹ்ம்ம்ம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்