Skip to main content

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் ரூ.400 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள்!


திருவனந்தபுரம்: 

பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆறு அறைகளில், மூன்று அறைகளை திறந்து கணக்கெடுத்ததில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, மரகத, வெள்ளி நகைகளும், மதிப்பு மிக்க கலைப் பொருட்களும் இருப்பது தெரியவந்தது. 

கேரளா, திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், பூமிக்கடியில் ஆறு அறைகள் உள்ளன. இவற்றில், இரு அறைகளில் ஒன்றில் நித்ய பூஜைக்கான பொருட்களும், மற்றொன்றில் கோவில் உற்சவத்திற்கு பயன்படும் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, தினமும் திறக்கப்படும். உற்சவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே திறக்கப்படும். மீதமுள்ள நான்கு அறைகள், பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. அந்த அறைகளில் விலை மதிப்பற்ற பொருட்களும், புதையலும், தங்கக் கட்டிகளும் இருக்கலாம் என, பக்தர்களிடையே பேச்சு நிலவியது. 

அதனால், ஆறு அறைகளிலும் உள்ள அரிய வகை பொருட்கள் குறித்தும், விலை மதிப்பற்ற நகைகள் குறித்து கணக்கெடுக்கவும், அவற்றை ஆய்வு செய்து தரம், மதிப்பு, எடை போன்றவற்றை மதிப்பிடவும், கேரள ஐகோர்ட்டின் இரண்டு முன்னாள் நீதிபதிகள் உட்பட ஏழு பேர் அடங்கிய குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழுவினர், இரு தினங்களாக கோவிலில் மூன்று அறைகளை திறந்து ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது, 400 தங்க மாலைகள் உட்பட பல்வேறு தங்கம், மரகதம், வைர, வெள்ளி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை கணக்கிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கணக்கெடுத்தவை மட்டும் 400 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் என கூறப்படுகிறது. இதுவரை மூன்று அறைகளில் உள்ள பொருட்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மூன்று அறைகளில் உள்ள பொருட்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவற்றில் உள்ள பொருட்களையும் கணக்கெடுத்தால், மதிப்பு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினமலர் இணைய தளம்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்