Skip to main content

ஹானா-அதிரடி கலந்த அழகான ஆக் ஷன் படம்



 ஹாலிவுட் ஆக் ஷன் படங்கள் பொதுவாக கரம் மசாலா கலந்த சுத்தமான அடிதடி படங்களாகவே இருக்கும். எப்போதாவது ஒருமுறைதான் ஹானா போன்ற அழகான ஆக் ஷன் படங்கள் வெளிவரும்.

பனிபடர்ந்த காட்டின் நடுவே மானை வேட்டை ஆட ஹானா (Saorise Ronan) பொறுமையாக வில் மற்றும் அம்புடன் காத்திருக்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது படம். கிட்டத்தட்ட ஒரு மாடு சைசில் வரும் அந்த மானை அம்பு எய்தி கொள்கிறாள் ஹானா (. அம்புடன் சிறிது தூரம் ஓடிவிட்டு கீழே விழும் அந்த மானை நெருங்கி, "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அதைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா. யாருமே இல்லாத அந்த பனிபிரதேசத்தில் (வடக்கு பின்லாந்த்) தன்னுடைய தந்தையால் (Eric Bana) ஒரு முக்கிய குறிக்கோளுடன் வளர்க்கப்படுகிறாள். தந்தை அமெரிக்க உளவு நிறுவனமான CIA யில் பணிபுரியும்போது சில துரோகிகளால் பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு பின் தப்பிவிடுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹானாவின் தாய் கொல்லப்டுகிறாள்.

ஹானாவின் தந்தை ஹானாவுடன் ஆளரவமில்லாத பனிபிரதேசத்தில் வாழ்கிறார். ஹானா தன்னை எல்லாவிதத்திலும் தயார் செய்துகொண்டவுடன், தன்னை ஏடாகூடமாக சிக்கவைத்த அந்த CIA ஏஜெண்டுக்கு செய்தி அனுப்பச் சொல்கிறார் அவள் தந்தை. CIA  கைக்கூலிகள் அந்த இடத்தை முற்றுகை இடும்முன் ஹானாவை அங்கு தனியாக விட்டுவிட்டு அவள் தந்தை தப்பிக்க, தந்தை-மகள் இருவரும் ஏற்கனவே போட்ட திட்டப்படி, ஹானா விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகிறாள். வெள்ளை வெளேரென, குச்சி,குச்சியான கைகால்களுடன் இருக்கும் ஹானாவை ரொம்ப சாதரணமாக நினைத்தாலும், அவளைத் தப்புவிக்க அவள் தந்தை முயற்சிக்கலாம் என்று ஒரு பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கிறாள் ஹானாவின் வாழ்வை சீர்குலைத்த மரிஸா (Cate Blanchett). அந்த சிறையில் இருந்து ஹானா தப்பிக்கும் தடதடக்கும் அந்த 20 நிமிடங்கள் நம்மை ஆச்சரியப் படவைக்கும் ஹை-லைட்.

ஆள், படை, அம்பு என சகலவிதமான பாதுகாப்புடன் இருக்கும் மரிஸாவை ஹானா கடைசியில் கொல்லும் போது, படத்தின் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் படபடப்பு அடங்குகிறது. அம்பால் காட்டு விலங்கைக் கொல்வது போல, மரிஸா மேல் அம்பு எய்துவிட்டு, கீழே கிடைக்கும் அவள் அருகே வந்து, " "ஸாரி, உன் இதயத்தை மிஸ் செய்துவிட்டேன்," என்று சொல்லிவிட்டு துப்பாகியால் அவளைப் போட்டுத் தள்ளுகிறாள் ஹானா.

அட்டகாமான ஒளிப்பதிவு, அதிர வைக்கும் பின்னணி இசை (Chemical Brothers), பரபரப்பை குறைவில்லாமல் கொண்டு செல்லும் எடிட்டிங், மெய்மறக்க வைக்கும் லொகேஷன்கள், புதிய முகமாக இருந்தாலும்  ஹானாவாக அலட்டாமல் நடிக்கும் சாரிஸ் ரோனன். ஹானா ஒரு வித்தியாசமான த்ரில்லர்தான்.



Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்