Skip to main content

என்றும் சுஜாதா - எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள புத்தகத்தைப் பற்றி என் விமர்சனம்.



எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தை நேற்று படித்தேன். புத்தகத்தின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் உஷாராக, " இந்தப் புத்தகம் Sujatha reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக்கருதுகிறேன் என்பதற்கான தொகை நூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்து பட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கரைகளையே நான் முதன்மைப் படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புகளில் ஒரு குறுக்கு வெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு" என்று சொல்லிவிட்டார். 

எஸ்.ரா எழுதிய புத்தகம் என்பதால் எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து, அது இந்தப் புத்தகத்தை படித்தவுடன் காற்றாகிப் போனது என்பதால் மட்டும் நான் அதிருப்தி அடையவில்லை. புத்தகத்தில் எதுவுமே புதிதாக இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். சுஜாதாவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களின் கோர்வையாக இல்லாவிட்டலும், அட்லீஸ்ட், அவருடைய படைப்புகளின் ஒரு விமர்சனமாக இருந்திருக்கலாம். அல்லது, சுஜாதாவின் இன்னின்ன படைப்புகளைப் பற்றி என்னுடைய கருத்து இது என்றாவது சொல்லி இருக்கலாம். அதுவும் இல்லை. சுஜாதாவின் பல்வேறு படைப்புகளை தொகுத்து (அவருடைய பன்முகத் தன்மையை விளக்கும் வண்ணம்) அதிலிருந்து இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என உருவி ஒரு மசாலா புத்தகம் கொடுத்துள்ளார் எஸ்.ரா. இதற்கு எஸ்.ரா போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளர் தேவையா என கேட்பது அதிகபிரசங்கித்தனமாக தோன்றலாம். ஆனால், இந்த தொகுப்பை உயிர்மை வழியே வெளியிட்டதின் மூலம் எஸ்.ரா சுஜாதாவின் படைப்புகளில் தனக்கு பிடித்தவைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். 

எனக்குத் தெரிந்து சுஜாதாவின் படைப்புகளில் நான் படிக்காத ஒரு புது விஷயம் ஒன்று இந்தப் புத்தகத்தில் உள்ளது என்றால் அது அவருடைய "மெக்சிகோ தேசத்து சலவைக்காரி" ஜோக் ஒன்றுதான். எனக்குத் தெரிந்து சுஜாதா அதை எந்தப் புத்தகத்திலும் எழுதவில்லை. அவரை நேரில் சந்தித்த என் நண்பர்கள் சிலர் (எனக்கு அந்த கொடுப்பினை கடைசிவரை கிடைக்கவில்லை) அவரை நச்சரித்தபோது சுஜாதா சொன்ன அந்த ஒரிஜினல் ஜோக்கின் நீர்த்து போன வடிவம்தான் எஸ்.ரா குறிப்பிட்டுள்ளது.

எஸ்.ரா அவர்கள் மன்னிக்க வேண்டும். அவருடைய புத்தகம் ஒரு தீவிர சுஜாதா வாசகனான எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.


Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்