Skip to main content

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


அமெரிக்காவை சார்ந்த செய்தி நிறுவனமான தாம்சன் ராய்ட்டர்ஸ் (Thomson Reuters) சமீபத்தில் வெளிட்டுள்ள அறிக்கை ஒன்று உலகெங்கிலும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவதாக காங்கோ, மூன்றாவதாக பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. 

இதில் என்ன அதிர்ச்சி? இந்த வரிசையில் நான்காவது இடத்தில் இருப்பது இந்தியா!!!

ஆமாம், இந்தியாவேதான். இது என்ன கூத்து என்று கேட்கலாம். அந்த அறிக்கையில் காரணங்கள் இருக்கின்றன.

எந்தெந்த விதத்தில் பாதுகாப்பின்மை இருக்கிறது என்று பார்த்தால், இந்த அறிக்கை அதை பல்வேறுவிதமான அளவீடு (parameters) மூலம் கணக்கிட்டுள்ளது.

  1. ஆப்கானிஸ்தான்: இங்கு வாழும் 11 பெண்களில் ஒருவர் மகப்பேறு காலத்தில் தகுந்த கவனிப்பு இல்லாமல் இறக்கிறார். கிட்டத்தட்ட 87 % பெண்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 % பெண்கள் விருப்பமில்லாமல் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுகிறார்கள்.
  2. காங்கோ: இங்கு வாழும் பெண்களில் கிட்டத்தட்ட 4 . 5 லட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் கற்பழிக்கப்படுகிறார்கள்-இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1200 பெண்கள் என்ற கணக்கில். 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
  3. பாகிஸ்தான்: காலாச்சார சீரழிவு, சமுதாய மூட நம்பிக்கைகள், மத சம்பந்தமான கட்டுப்பாடுகள் என்பன போன்ற பல விஷயங்களில் பெண்கள் துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.காங்கோ ஓலவே இங்கும் கிட்டத்தட்ட 90 % பெண்கள் வீடுகளில் (தந்தை, உறவினர் மற்றும் கணவர் மூலம்) கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் 
  4. இந்தியா: 1 கோடிக்கும் மேல் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். பெண் சிசுக் கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் கடந்த நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொரும் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயமில்லை இது. உடனே விழித்துக்கொண்டு செயலில் இறங்கி நம் சகோதரிகளையும், தாய்களையும் காப்பாற்ற வேண்டும். 

படம் நன்றி: trust .org வலைத்தளம்
 தகவல் நன்றி: ஹிந்து பிசினஸ்லைன் செய்தித்தாள் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...