Skip to main content

முன்னேறும் தமிழ்நாடு! சொகுசுக் கப்பல்கள் பற்றி ஒரு பார்வை

2004 ம் ஆண்டில் சிங்கபூரிலிருந்து சூப்பர் ஸ்டார் வர்கோ (SuperStar Virgo) மூலம் மலேஷியா (லங்காவி), தாய்லாந்து (புகெட்-Phuket) ஆகிய ஊர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது நண்பர்கள் எல்லோரும் புலம்பினோம், "இது போன்ற பயண வசதிகள் நம் தமிழ்நாட்டில் எப்போது வருமோ?" என்று. 

நடுவில் ஒன்றிரண்டு க்ரூஸ் (சொகுசுக் கப்பல்) நிறுவனங்கள் இந்தியாவில் க்ரூஸ் சேவை ஆரம்பித்துவிட்டு, பின் நம் மத்திய அரசு கொடுத்த குடைச்சல் தாங்காமல் ஓடிவிட்டன.

இப்போது சென்னையில் உள்ள அமெட் (AMET) தன்னிலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெட் க்ரூஸ் என்ற நிறுவனம் முதன்முதலாக சென்னையிலிருந்து க்ரூஸ் சேவை ஆரம்பித்திருக்கிறது. மற்றொரு க்ரூஸ் நிறுவனமான ப்லமிங்கோ லைனர்ஸ் (Flemingo Liners) தூத்துக்குடியிலிருந்து இலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஸ்கோஷியா ப்ரின்ஸ் (Scotia Prince) என்ற சொகுசுக் கப்பலை இன்று முதல் இயக்குகிறது. 

ஸ்கோஷியா ப்ரின்ஸ்:

1044 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் வாரம் மும்முறை தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே பயணிக்கும். இந்த க்ரூஸில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன: நீச்சல் குளம், உணவு விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் என ஏராளமான வசதிகள். கட்டணமும் அதிகமில்லை. தூத்துக்குடியிலிருந்து கிட்டத்தட்ட 24 மணிநேரம் பயணித்து கொழும்பு அடைந்த பின், அதே மாதிரி 24 மணிநேர பயணத்தில் மறுபடியும் தூத்துக்குடி வந்தடையும். ரூ.2500/- முதல் ரூ.15000/- வரை பலவித வகுப்புகள் இருக்கின்றன. விமான நிலையங்களில் இருப்பது போல டியூட்டி ப்ரீ (duty free) ஷாப்பிங் வசதிகளும் உண்டு.

இதில் பயணம் செய்ய விரும்பினால் முன் பதிவு அவசியம். 

அமெட் மெஜஸ்டி க்ரூஸ்

 658 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த சொகுசுக் கப்பல் தற்போது சென்னை ஹை சீஸ் (Chennai High Seas) மற்றும் விசாகப்பட்டினம் (Vizag High Seas) என்று இரு கடல் வழிகளில் பயணிக்கிறது. கூடிய விரைவில் சென்னையிலிருந்து இலங்கை, மாலத் தீவுகள், அந்தமான், தாய்லாந்து (புகெட்-Phuket), லட்சத் தீவுகள் என்று பல்வேறு பயணத் திட்டங்கள் (travel itineraries) இவர்கள் வசம் இருக்கிறது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ.4500/- இந்த சொகுசுக் கப்பலிலும் ஏராளமான வசதிகள் உள்ளன. 

அதிகம் பணமோ அல்லது நேரமோ இல்லை இருந்தாலும் இந்த சொகுசுக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்றால் நீங்கள் சென்னை ஹை சீஸ் என்ற முறையில் இன்று காலை 11 மணிக்கு கப்பலில் ஏறி நாளைக் காலை 8 மணிக்கு
மறுபடியும் சென்னை வந்துவிடலாம். ஒரு இரவு முழுவதும் பயணம் செய்த அனுபவம் கிடைக்கும்.


இதில் பயணம் செய்ய விரும்பினால் முன் பதிவு அவசியம். 

என்ன நண்பர்களே, குடும்பத்துடன்/நண்பர்களுடன் சொகுசுப் பயணம் செய்யத் தயாரா? 

உங்களுக்கு மேற்கூறிய இரண்டு சொகுசுக் கப்பல்கள் பற்றி ஏதாவது பயண விளக்கம் / முன்பதிவு உதவிக்கு  044 -42145808 / 42080946 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

படங்கள் நன்றி : அந்தந்த க்ரூஸ் வலைத் தளங்கள்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...