Skip to main content

உலகநாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம்: இயக்குனர் மாற்றம்

இத்தனை நாளும் செல்வராகவன் இயக்கி கமல் நடிப்பதாக இருந்த விஸ்வரூபம் படம், திடீரென கமலே இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் அனைத்துமே கமல் செய்யப்போவதாக ஒரு செய்தி. 

இசை மட்டும் போனால் போகிறது என்று ஷங்கர் மகாதேவன்-ஈஷான்-லாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த மூவர் இசை அமைத்த படம் ஆளவந்தான். அதில் எந்தப் பாடலுமே ஹிட் ஆகவில்லை என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது. முதலில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பார் என செய்தி வந்தது. பிறகு கமலின் தலையீட்டால் இந்த மாற்றம்.

இது வரை இல்லாத அளவு இந்தப் படத்திற்கு ரூ.150 கோடி பட்ஜெட் என தகவல். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 7 தேதி (கமலின் பிறந்த நாள்) வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைய கமலின் தீவிர ரசிகன் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதே தீவிர ரசிகன் என்ற முறையில் சில சந்தேகங்கள்:
  1. செல்வராகவன் இயக்காவிட்டால் வேறு யாரும் இயக்கக்கூடாதா? ஏன் கமலே இயக்க வேண்டும்?
  2. நடிப்பில் கமலை வெல்ல வேறு யாருமில்லை என்பது உலகறிந்த விஷயம். ஆனால், ஏன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று டி.ஆர் பாணியில் இவர் போக வேண்டும்?
  3. பாடல் எழுதும் விஜய் போன்றவர்கள் நடிக்கும்போது கமல் பாடல் எழுதக்கூடாதா எனக் கேட்கலாம், ஆனால் இது கமலுக்கு தேவையா?
  4. விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுத எவ்வளவோ பேர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். கமலுக்கு எல்லாமே தெரியும், அவர் ஒரு சகலகலாவல்லவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும், அப்படி இருக்கும் போது இதை மறுபடி, மறுபடி கமல் நிரூபிக்க வேண்டுமா என்ன?
 ஹ்ம்ம்....காலம் பதில் சொல்லும்.






Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்