Skip to main content

உலகநாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம்: இயக்குனர் மாற்றம்

இத்தனை நாளும் செல்வராகவன் இயக்கி கமல் நடிப்பதாக இருந்த விஸ்வரூபம் படம், திடீரென கமலே இயக்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் அனைத்துமே கமல் செய்யப்போவதாக ஒரு செய்தி. 

இசை மட்டும் போனால் போகிறது என்று ஷங்கர் மகாதேவன்-ஈஷான்-லாய் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த மூவர் இசை அமைத்த படம் ஆளவந்தான். அதில் எந்தப் பாடலுமே ஹிட் ஆகவில்லை என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்தது. முதலில் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பார் என செய்தி வந்தது. பிறகு கமலின் தலையீட்டால் இந்த மாற்றம்.

இது வரை இல்லாத அளவு இந்தப் படத்திற்கு ரூ.150 கோடி பட்ஜெட் என தகவல். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 7 தேதி (கமலின் பிறந்த நாள்) வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடைய கமலின் தீவிர ரசிகன் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அதே தீவிர ரசிகன் என்ற முறையில் சில சந்தேகங்கள்:
  1. செல்வராகவன் இயக்காவிட்டால் வேறு யாரும் இயக்கக்கூடாதா? ஏன் கமலே இயக்க வேண்டும்?
  2. நடிப்பில் கமலை வெல்ல வேறு யாருமில்லை என்பது உலகறிந்த விஷயம். ஆனால், ஏன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று டி.ஆர் பாணியில் இவர் போக வேண்டும்?
  3. பாடல் எழுதும் விஜய் போன்றவர்கள் நடிக்கும்போது கமல் பாடல் எழுதக்கூடாதா எனக் கேட்கலாம், ஆனால் இது கமலுக்கு தேவையா?
  4. விறுவிறுப்பான திரைக்கதை, வசனம் எழுத எவ்வளவோ பேர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். கமலுக்கு எல்லாமே தெரியும், அவர் ஒரு சகலகலாவல்லவர் என்று நம் எல்லோருக்கும் தெரியும், அப்படி இருக்கும் போது இதை மறுபடி, மறுபடி கமல் நிரூபிக்க வேண்டுமா என்ன?
 ஹ்ம்ம்....காலம் பதில் சொல்லும்.






Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...