Skip to main content

அன்நோன் (Unknown)-ஆங்கிலப் பட விமர்சனம்



லியம் நீஸன்ஒரு தேர்ந்த ஹாலிவுட் நடிகர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List) , ராப் ராய் (Rob Roy), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) போன்ற அருமையான படங்களில் நடித்துள்ளவர். சமீபத்தில் வெளிவந்த டேக்கன் (Taken) படம் ஒரு மிக விறுவிறுப்பான படம். இளம் பெண்களை கடத்தி, விபச்சாரத்திற்கும், கையாகாலாத கிழவர்களின் காம லீலைகளுக்கும் இரையாக்கும் ஒரு கும்பலை தேடிச்சென்று வேட்டையாடி அழிக்கும் இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓகே, அன்நோன் (Unknown ) படம் எப்படி என்று பார்ப்போம்: நாயகன் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் (லியம் நீஸன்)  தனது மனைவி எலிசபெத்துடன் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு ஒரு பயோ-டெக்னாலஜி மாநாட்டிற்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு வரும்போது, தன்னுடைய கைப்பெட்டி (brief case) தொலைந்து போய்விட்டது என்று உணர்ந்து, அதில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் முக்கியமான விஷயங்கள் இருப்பதால், மனைவியை ஹோட்டலில் விட்டுவிட்டு இன்னொரு டாக்சியில் மறுபடியும் விமான நிலையத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஏற்படும் ஒரு விபத்தில் அவர் பயணிக்கும் கார் தண்ணீரில் மூழ்கிவிட, மார்ட்டின் தனது சுயநினைவை இழக்கிறார்.

நான்கு நாட்கள் கழித்து கண் விழித்து (கண்களை விழித்து என்றுதானே இருக்க வேண்டும்? ஏன், எல்லோருமே கண் விழித்து என்று ஒருமையில் சொல்லுகிறோம்? குடும்ப ஆட்சி நடத்தும் தமிழ் தாத்தாவிடம்தான் கேட்க வேண்டும்) பார்க்கும்போது அவருக்கு மெதுவாக தன்னைப் பற்றிய ஞாபகங்கள், துண்டு துண்டாக, வருகின்றன. தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு விரைகிறார், டாக்டர் மார்ட்டின். அங்கு அவர் மனைவி உட்பட அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவருக்கு தன்னை நிரூபிக்க எந்த விதமான ஆவணங்களும் இல்லாததால், அவரை ஹோட்டல் நிர்வாகம் வெளியேற்ற முற்படுபோது, டாக்டர் மார்ட்டின் என்று சொல்லிக் கொண்டு வேறு ஒரு ஆள் அங்கு இருப்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் நாயகன்.

தான் யார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் மறுபடியும் தான் இருந்த மருத்துவமனைக்கே செல்கிறார் மார்ட்டின். அங்கு இருக்கும் ஒரு நர்ஸ், இவரைப் பார்த்து பரிதாப்பட்டு தன்னுடைய நண்பர் ஒருவரின் விலாசத்தைக் கொடுத்து அவரைச் சென்று பார்க்குமாறு சொல்கிறார். இடையில், கார் விபத்து நேரிட்டபோது அந்த காரை ஓட்டிய பெண் டிரைவரையும் சந்திக்கிறார் மார்ட்டின். என்ன ஆனாலும் தான் யார் என்பதைக் கண்டுபிக்கவேண்டும் என்று போராட ஆரம்பிக்கிறார் டாக்டர் மார்ட்டின். அவருடைய போராட்டங்களின் முடிவில் ஏகப்பட்ட திருப்பங்களுடன் முடிகிறது படம்.

திரைக்கதை நன்றாக இருக்கிறது, காட்சிகள் வேகமாக நகர்கின்றன, ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கும் அளவு துல்லியமாக இருக்கிறது, லியம் நீஸன் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னாலும், மாட் டாமன் (Matt Damon) நடித்த Bourne Identity , ஹாரிஸன் போர்ட் (Harrison Ford) நடித்த பிரான்டிக்   (Frantic) போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

நாயகனுக்கு உதவி செய்ய வந்து, பின் சயினைட் சாப்பிட்டு மடியும் சின்ன கதாபாத்திரத்தில், ஜெர்மன் மொழியில் வந்து மிகப் புகழ் பெற்ற Downfall  என்ற படத்தில் ஹிட்லராக பிரமாதமாக நடித்த நடிகர் வருகிறார். பெண் டிரைவராக வரும்  சிறிய வேடத்திற்கு டையேன் க்ருகர் (Diane Kruger) போன்ற தேர்ந்த நடிகை எதற்கு என்று புரியவில்லை. பல வருடங்களுக்கு முன் டிராகுலா வேடங்களில் வந்து பிரமாதப்படுத்திய பிரான்க் லாங்கெல்லா (Frank Langella) ஒரு சிறிய வில்லன் வேடத்தில் வருகிறார். பாவம், தலை வேறு சொட்டையாகிவிட்டது.

ஒன்றரை மணி நேரம் பொழுதுபோகும் அளவுக்கு படம் ஓக்கே என்று சொல்லலாம்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்