Skip to main content

கோ -ஒளிப்பதிவில் ஒரு மைல்கல்

 



ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் வித்தியாசமாக தொடர்ந்து சிந்திக்கிறார் என்பதற்கு சமீபத்திய சாட்சி "கோ" திரைப்படம். கோ என்றால் மன்னன் அல்லது தலைவன் என்று பொருள் (எந்த மொழியிலா? அடப்பாவிகளா, தமிழ் மொழிலதான்).

இந்தப் படத்தில் முதலில் சிம்பன்ஸி.மன்னிக்கவும், சிம்பு எனும் எஸ்.டிஆர். நடிப்பதாக இருந்ததாம், நல்ல வேளை, நடிக்கவில்லை. நடித்திருந்தால் இந்த வெற்றிப் படம் பப்படம் ஆகியிருக்கும்.

முதலில் கோ படத்தின் கதாநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என் கடமை. இதோ அந்த நாயகன்.

கோ படத்தின் உண்மையான நாயகன் - படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் 

இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவுள்ள படத்துக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மூலம் சிறப்பு சேர்த்துள்ளார்.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் கடைசி வரை ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்ப வங்கிக் கொள்ளையில் ஆரம்பித்து, சந்து, பொந்து, சேரி எனத் தொடர்ந்து, நார்வே, சீனா என பயணித்து ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்கிறது.

கோ படத்தின் கதை மிகவும் டாப்பிகல் (topical) என்று சொல்லவேண்டும். பொருத்தமான நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

ரஸ்ஸல் க்ரோ (Russel Crowe) நடித்து 2009 இல் வெளிவந்த The State of Play என்ற படத்தின் மையக்கருவை உருவி அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் சாயம், மற்றும் தமிழ் சினிமாவின் மசாலா கலந்து பொழுதுபோக்கான படமாக கொடுத்திருக்கும் கே.வி.ஆனந்தை பாராட்டவேண்டும்.

திரும்பத் திரும்ப ஊழல், ஊழல் என்ற உளுத்துப் போன அரசியல் பின்னணியை விட்டு சற்று வெளியே வந்து படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முறையில் கதை அமைத்த எழுத்தாளர்கள் சுபா மற்றும் இயக்குனரை பாராட்டவேண்டும். 

திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலே படம் பாதி வெற்றி என்ற பார்முலாவை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். இசை சுமார் ரகம்தான். ஒரே ஒரு பாடல் (என்னமோ, ஏதோ) தவிர வேறு எந்தப் பாடலும் இனிமையாக இல்லை. பின்னணி இசையும் ரொம்ப சாதரணமாகவே இருக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை அஜ்மல்,பியா இருவரும் நன்றாக செய்துள்ளனர். ஜீவா அதிகம் அலட்டிகொள்ளாமல் வருவதே நன்றாக இருக்கிறது. பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நெடுநெடுவென்று இருக்கிறார். பொருத்தமான உடைகளை அணிந்து வருகிறார் என்பதைத் தவிர சொல்ல வேறு எதுவும் இல்லை. அடிக்கடி இடது புருவத்தை அரையடி மேலே தூக்குவதை இயக்குனர்/ஒளிப்பதிவாளர் திருத்தியிருக்க வேண்டும். 

வீணடிக்கப்பட்ட ஒரு பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். ஆந்திர அரசியலை சில வருடங்களுக்கு முன் ஆட்டிவைத்த ஒரு சம்பவத்தை (வயதான அரசியல்வாதி இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை) நன்றாக காட்டியுள்ளனர், ஆனால் இது இப்போதுள்ள எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

சண்டைக்காட்சிகளில் ஹாங்காங்கில் இருந்து வரவழைக்கப்பட்ட Phantom Flex என்ற அதி நவீன காமெராவை புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர். இந்தக் காமெராவில் ஒரு செகண்டுக்கு 2500 பிரேம்களை (frames) எடுக்க முடியும் என்பது ஒரு ஆச்சரியம் என்றால், ஒரு செகண்டில் எடுக்கப்பட்ட காட்சியை ஸ்லோ மோஷனில் 18 செகண்ட் வரை நீட்டித்து காட்ட முடியும். இந்த வகை காமெராக்கள் பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில்தான் உபயோகிப்பார்கள். 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் இதற்கு முன் அங்காடித் தெரு, பானா காத்தாடி போன்ற படங்களில் பணி புரிந்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக அவருக்கு ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஜீவாவும், கார்த்திகாவும் பாடும் "வெண் பனியே" பாட்டின் பின்னணியில் வரும் பனிச் சிற்பங்கள் அட்டகாசமாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல் சீனாவில் உள்ள ஹார்பின் (Harbin) என்ற இடத்தில் எடுக்கப்பட்டது. வருடம் ஒரு முறை நடக்கும் Ice & Snow Sculpture Festival என்ற வருடாந்திர நிகழ்வை அருமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர்.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். குறிப்பாக அந்த குண்டு நடிகை சோனா வரும் காட்சி படு தண்டம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு பாடல்கள் தேவையா?

கே.வி ஆனந்தின் விறுவிறுப்பான இயக்கம், மற்றும் மிகத் தரமான ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக ஒரு முறை திரை அரங்கில் சென்று பாருங்கள் (சென்னையாக இருந்தால் சத்யம் அரங்கத்தில் பார்ப்பது சாலச் சிறந்தது).

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்