Skip to main content

கோ -ஒளிப்பதிவில் ஒரு மைல்கல்

 



ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் வித்தியாசமாக தொடர்ந்து சிந்திக்கிறார் என்பதற்கு சமீபத்திய சாட்சி "கோ" திரைப்படம். கோ என்றால் மன்னன் அல்லது தலைவன் என்று பொருள் (எந்த மொழியிலா? அடப்பாவிகளா, தமிழ் மொழிலதான்).

இந்தப் படத்தில் முதலில் சிம்பன்ஸி.மன்னிக்கவும், சிம்பு எனும் எஸ்.டிஆர். நடிப்பதாக இருந்ததாம், நல்ல வேளை, நடிக்கவில்லை. நடித்திருந்தால் இந்த வெற்றிப் படம் பப்படம் ஆகியிருக்கும்.

முதலில் கோ படத்தின் கதாநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது என் கடமை. இதோ அந்த நாயகன்.

கோ படத்தின் உண்மையான நாயகன் - படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் 

இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர் என்பதால் ஒரு மிகச் சிறந்த ஒளிப்பதிவுள்ள படத்துக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மூலம் சிறப்பு சேர்த்துள்ளார்.

படத்தின் ஆரம்ப காட்சி முதல் கடைசி வரை ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. ஆரம்ப வங்கிக் கொள்ளையில் ஆரம்பித்து, சந்து, பொந்து, சேரி எனத் தொடர்ந்து, நார்வே, சீனா என பயணித்து ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்கிறது.

கோ படத்தின் கதை மிகவும் டாப்பிகல் (topical) என்று சொல்லவேண்டும். பொருத்தமான நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

ரஸ்ஸல் க்ரோ (Russel Crowe) நடித்து 2009 இல் வெளிவந்த The State of Play என்ற படத்தின் மையக்கருவை உருவி அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் சாயம், மற்றும் தமிழ் சினிமாவின் மசாலா கலந்து பொழுதுபோக்கான படமாக கொடுத்திருக்கும் கே.வி.ஆனந்தை பாராட்டவேண்டும்.

திரும்பத் திரும்ப ஊழல், ஊழல் என்ற உளுத்துப் போன அரசியல் பின்னணியை விட்டு சற்று வெளியே வந்து படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முறையில் கதை அமைத்த எழுத்தாளர்கள் சுபா மற்றும் இயக்குனரை பாராட்டவேண்டும். 

திரைக்கதையில் விறுவிறுப்பு இருந்தாலே படம் பாதி வெற்றி என்ற பார்முலாவை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். இசை சுமார் ரகம்தான். ஒரே ஒரு பாடல் (என்னமோ, ஏதோ) தவிர வேறு எந்தப் பாடலும் இனிமையாக இல்லை. பின்னணி இசையும் ரொம்ப சாதரணமாகவே இருக்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை அஜ்மல்,பியா இருவரும் நன்றாக செய்துள்ளனர். ஜீவா அதிகம் அலட்டிகொள்ளாமல் வருவதே நன்றாக இருக்கிறது. பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நெடுநெடுவென்று இருக்கிறார். பொருத்தமான உடைகளை அணிந்து வருகிறார் என்பதைத் தவிர சொல்ல வேறு எதுவும் இல்லை. அடிக்கடி இடது புருவத்தை அரையடி மேலே தூக்குவதை இயக்குனர்/ஒளிப்பதிவாளர் திருத்தியிருக்க வேண்டும். 

வீணடிக்கப்பட்ட ஒரு பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். ஆந்திர அரசியலை சில வருடங்களுக்கு முன் ஆட்டிவைத்த ஒரு சம்பவத்தை (வயதான அரசியல்வாதி இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை) நன்றாக காட்டியுள்ளனர், ஆனால் இது இப்போதுள்ள எத்தனை இளைஞர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

சண்டைக்காட்சிகளில் ஹாங்காங்கில் இருந்து வரவழைக்கப்பட்ட Phantom Flex என்ற அதி நவீன காமெராவை புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர். இந்தக் காமெராவில் ஒரு செகண்டுக்கு 2500 பிரேம்களை (frames) எடுக்க முடியும் என்பது ஒரு ஆச்சரியம் என்றால், ஒரு செகண்டில் எடுக்கப்பட்ட காட்சியை ஸ்லோ மோஷனில் 18 செகண்ட் வரை நீட்டித்து காட்ட முடியும். இந்த வகை காமெராக்கள் பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில்தான் உபயோகிப்பார்கள். 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் இதற்கு முன் அங்காடித் தெரு, பானா காத்தாடி போன்ற படங்களில் பணி புரிந்திருந்தாலும் இந்தப் படம் நிச்சயமாக அவருக்கு ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும்.

ஜீவாவும், கார்த்திகாவும் பாடும் "வெண் பனியே" பாட்டின் பின்னணியில் வரும் பனிச் சிற்பங்கள் அட்டகாசமாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல் சீனாவில் உள்ள ஹார்பின் (Harbin) என்ற இடத்தில் எடுக்கப்பட்டது. வருடம் ஒரு முறை நடக்கும் Ice & Snow Sculpture Festival என்ற வருடாந்திர நிகழ்வை அருமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர்.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். குறிப்பாக அந்த குண்டு நடிகை சோனா வரும் காட்சி படு தண்டம். இடைவேளைக்குப் பிறகு அவ்வளவு பாடல்கள் தேவையா?

கே.வி ஆனந்தின் விறுவிறுப்பான இயக்கம், மற்றும் மிகத் தரமான ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக ஒரு முறை திரை அரங்கில் சென்று பாருங்கள் (சென்னையாக இருந்தால் சத்யம் அரங்கத்தில் பார்ப்பது சாலச் சிறந்தது).

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.