Skip to main content

உலகக் கோப்பை முதல் போட்டி-இந்திய அணியின் வெற்றி-ஒரு அலசல்



உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோலியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
மிகவும் நன்றாக விளையாடி நம் அணி வெற்றி பெற்றபோதும் எனக்கு சில விஷயங்கள் உறுத்தலாக இருந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

  1. சச்சினின் பரிதாப அவுட்: சச்சினைப் பற்றி புதிதாக புகழ எதுவும் தேவையில்லை என்றாலும் அவர் அவுட்டான விதம் மிகவும் அமெச்சூர்த்தனமாக இருந்தது. இத்தனைக்கும் அவரும் சேவாக்கும் நிறைய போட்டிகளில் சேர்ந்து விளையாடி ரன்களை குவித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது, சச்சின் ஏன் அந்த ஒற்றை ரன்னை எடுக்க அவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஏன் அப்படி பரிதாபமாக அவுட் ஆக வேண்டும்? சத்தியமாக எனக்கு புரியவில்லை.
  2. ஸ்ரீசாந்தின் கேவலமான பௌலிங்: ஸ்ரீசாந்தை முதலில் உலகக் கோப்பை அணியில் சேர்க்காத போது கங்கூலி முதல் எல்லோரும் ஸ்ரீசாந்தை ஏன் சேர்க்கவில்லை என பெரிய குரலில் கூப்பாடு போட்டார்கள். நேற்றைய போட்டியில் அவருடைய பௌலிங் எவ்வளவு மட்டமாக இருந்தது என்பது அந்த மேட்சைப் பார்த்த எல்லோருக்கும் தெரியும். ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்து எல்லோரையும் கதிகலங்க வைத்தார். இவருக்கு பதிலாக பியுஷ் சாவ்லா எவ்வளவோ பரவாயில்லை. 
  3. சகிர் கான் பௌலிங்: சகிர் கான் இன்னும் பழைய form க்கு வரவில்லை எனும் போது அவரை ஏன் வலுக்கட்டாயமாக பௌலிங் செய்ய சொல்ல வேண்டும்? அஷ்வின் என்ன ஆனார்? 
  4. சொதப்பிய பீல்டிங்:  இந்திய அணியின் பீல்டிங்கும் மிக, மிக சராசரியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.       
நல்ல வேளையாக சேவாக்கும், விராத் கோலியும் விறுவிறுவென்று ரன்களைக் குவித்ததால் நாம் தப்பித்தோம், இல்லாவிட்டால் 2007 ம் ஆண்டு வங்கதேசத்திடம் உதை வாங்கியதுபோல திரும்பவும் சொதப்பி இருப்போம். வங்கதேச அணி உண்மையிலேயே மிகச் சிறப்பாக ஆடியது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 
வரும் போட்டிகளில், வந்கதேசத்தைவிட வலுவான அணிகளுடன் மோத வேண்டியிருப்பதால் "கேப்டன் கூல்" தோனி மேற்கூறிய குறைகளை நிவர்த்தி செய்தால் நல்லது. 

சச்சின், உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம், தயவுசெய்து பார்த்து கவனமாக விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட்! 

சேவாக், கோலி - தொடரட்டும் உங்கள் அதிரடி ஆட்டம்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்