Skip to main content

உலகக் கோப்பை முதல் போட்டி-இந்திய அணியின் வெற்றி-ஒரு அலசல்



உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோலியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
மிகவும் நன்றாக விளையாடி நம் அணி வெற்றி பெற்றபோதும் எனக்கு சில விஷயங்கள் உறுத்தலாக இருந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

  1. சச்சினின் பரிதாப அவுட்: சச்சினைப் பற்றி புதிதாக புகழ எதுவும் தேவையில்லை என்றாலும் அவர் அவுட்டான விதம் மிகவும் அமெச்சூர்த்தனமாக இருந்தது. இத்தனைக்கும் அவரும் சேவாக்கும் நிறைய போட்டிகளில் சேர்ந்து விளையாடி ரன்களை குவித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது, சச்சின் ஏன் அந்த ஒற்றை ரன்னை எடுக்க அவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஏன் அப்படி பரிதாபமாக அவுட் ஆக வேண்டும்? சத்தியமாக எனக்கு புரியவில்லை.
  2. ஸ்ரீசாந்தின் கேவலமான பௌலிங்: ஸ்ரீசாந்தை முதலில் உலகக் கோப்பை அணியில் சேர்க்காத போது கங்கூலி முதல் எல்லோரும் ஸ்ரீசாந்தை ஏன் சேர்க்கவில்லை என பெரிய குரலில் கூப்பாடு போட்டார்கள். நேற்றைய போட்டியில் அவருடைய பௌலிங் எவ்வளவு மட்டமாக இருந்தது என்பது அந்த மேட்சைப் பார்த்த எல்லோருக்கும் தெரியும். ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்து எல்லோரையும் கதிகலங்க வைத்தார். இவருக்கு பதிலாக பியுஷ் சாவ்லா எவ்வளவோ பரவாயில்லை. 
  3. சகிர் கான் பௌலிங்: சகிர் கான் இன்னும் பழைய form க்கு வரவில்லை எனும் போது அவரை ஏன் வலுக்கட்டாயமாக பௌலிங் செய்ய சொல்ல வேண்டும்? அஷ்வின் என்ன ஆனார்? 
  4. சொதப்பிய பீல்டிங்:  இந்திய அணியின் பீல்டிங்கும் மிக, மிக சராசரியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.       
நல்ல வேளையாக சேவாக்கும், விராத் கோலியும் விறுவிறுவென்று ரன்களைக் குவித்ததால் நாம் தப்பித்தோம், இல்லாவிட்டால் 2007 ம் ஆண்டு வங்கதேசத்திடம் உதை வாங்கியதுபோல திரும்பவும் சொதப்பி இருப்போம். வங்கதேச அணி உண்மையிலேயே மிகச் சிறப்பாக ஆடியது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
 
வரும் போட்டிகளில், வந்கதேசத்தைவிட வலுவான அணிகளுடன் மோத வேண்டியிருப்பதால் "கேப்டன் கூல்" தோனி மேற்கூறிய குறைகளை நிவர்த்தி செய்தால் நல்லது. 

சச்சின், உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம், தயவுசெய்து பார்த்து கவனமாக விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட்! 

சேவாக், கோலி - தொடரட்டும் உங்கள் அதிரடி ஆட்டம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...