Skip to main content

தி சோஷல் நெட்வொர்க் - திரைப் பட விமரிசனம்


Social என்பதை சோஷியல் என்று உச்சரிப்பது தவறு, அதன் சரியான உச்சரிப்பு "சோஷல்" என்பதாகும். சரி, சரி, நான் இந்தப் பதிவை முன் வைக்க வந்தது உங்களுக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித்தர அல்ல.

சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ள இந்தப் படத்தை விமரிசனம் செய்யும்முன் ஒரு சிறிய அறிமுகம்; நம்மில் பல பேர் 'Facebook" பயன்படுத்துகிறோம், ஆனால், மார்க் ஜூக்கர்பெர்க் என்றால் யார் என்று தெரியுமா? அவர்தான் இந்த 'Facebook" கை உலகிற்கு அறிமுகம் செய்வித்தவர்.

இன்று உலகத்தில் மிக இளைய பில்லினர் (billionaire). Facebook 2004 ம் ஆண்டில் இவரால் தோற்றுவிக்கப்பட்டபோது இவர் வயது 20. ஆம் ஜஸ்ட் 20 வயதாகும்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் யுனிவர்சிடியில் படிக்கும் அவரருடைய தோழி எரிக்காவை வெறுப்பேற்ற செய்த ஒரு விஷயம்தான் ஆறே வருடங்களில் விஸ்வரூபம் எடுத்து இன்றைய தேதியில் Facebook-இன் மதிப்பு சுமார் 25 பில்லியன் டாலர்கள் என மதிப்படப்படுகிறது. அதாவது, ஒரு பில்லியன் டாலர் என்பது நம் இந்திய மதிப்பில் சுமார் 4700 கோடி என்று எடுத்துக்கொண்டால் அதை 25 ஆல் பெருக்கிப் பாருங்கள், அதுதான் Facebook இன் இன்றைய மதிப்பு.
 
நகலும்                                         அசலும் 

Ben Mezrich எழுதிய Accidental Billionaires என்ற புத்தகத்தை தழுவி எடுத்த படம்தான் இது. ஒரு மாணவனின் உப்புசப்பு இல்லாத கல்லூரி வாழ்க்கையில் அவனுக்கு ஏற்படும் ஒரு சிந்தனையில் உருவாகும் Facebook என்ற ஒரு நெட்வொர்கிங் வெப்ஸைட் உலகப்புகழ் பெற்று பணம் காய்க்கும் மரமாக மாறிய ஒரு சாதாரண (!) கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி சரசரவென்று நகரும் விதத்தில் திரைக்கதை அமைத்த Aaron Sorkin மிகவும் பாராட்டுக்குரியவர்.

மார்க் ஜூக்கர்பெர்க்காக நடிக்கும் ஜெஸ்சி ஐஸன்பெர்க்  (என்ன ஒரு பெயர் ஒற்றுமை!) மிக நிதானமாக அலட்டாமல் நடிக்கிறார். எந்த இடத்திலுமே அதிகமான அதிர்ச்சியோ, மகிழ்ச்சியோ காட்டாமல் வந்து நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

தோழி எரிக்காவை வெறுப்பேற்ற 'Facemash' என்ற ஒரு இணையதளத்தை போதையில் இருக்கும்போதே வெளியிட்டு, சில மணிநேரங்களிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை அல்லோலகல்லோலம் செய்கிறார். ஒரு சின்ன ஐடியாவைப் பிடித்துக் கொண்டு, Facebook நிறுவிய கையோடு பிசினஸ் பார்ட்னர்களை கவிழ்க்கிறார், உயிர் நண்பனுக்கு சர்வசாதரணமாக கல்தா கொடுக்கிறார்.

தனக்கு எதிராக நண்பனும், பார்ட்னர்களும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெறும்போது அலட்டிக்கொள்ளாமல், எதிர்க்கட்சி வழக்கறிஞரின் உதவியாளரிடம் "போஸ்னியாவில் நல்ல சாலைகளே இல்லை, ஆனால் Facebook இருக்கிறது தெரியுமா?" என்று கலாய்க்கிறார். கடைசியில், தான் உருவாக்கிய Facebook இல் தன்னுடைய தோழி எரிக்காவுக்கு "friend request" அனுப்பிவிட்டு அதை அவள் ஏற்றுக் கொண்டாளா இல்லையா என்று அடிக்கடி தன்னுடைய Facebook பக்கத்தை பொறுமையில்லாமல் refresh செய்வது வரை அலட்டிக் கொள்ளாமல் வரும் கதாநாயகன் நல்ல தேர்வு.

இந்தப் படத்தைப் பற்றி ஒரிஜினல் மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், " இது என்னுடைய வாழ்க்கைதான், ஆனால், என் வாழ்வு இவ்வளவு டிராமாடிக்காக இருக்காது," என்கிறார். கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து எடுத்த இந்தத் திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 181 மில்லியன் டாலர்களை வசூலில் அள்ளிவிட்டது.

மிகவும் விறுவிறுப்பான, வித்தியாசமான திரைப்படம்.

Comments

சிறந்த விமர்சனம் . படம் இன்னும் பார்க்கவில்லை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது . பகிர்வுக்கு நன்றி

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...