Skip to main content

INCEPTION-ஆங்கிலத் திரைப்படம் விமர்சனம்

இன்சப்ஷன் என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்பது பொருள். இங்கு அதை சற்று வேறுவிதமாக உபயோகப்படுத்தியுள்ளனர்.

Christopher Nolan ஒரு மிகத் திறமையான இயக்குனர் என்பது அவருடைய முதல் படமான "Memento" மூலம் நிரூபணமான ஒரு விஷயம். பின்னாளில் இந்தப் படத்தையே கொஞ்சம் உல்டா செய்து "கஜினி" என்ற பெயரில் வெளியிட்டு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஏகப்பட்ட பணம் பார்த்தார். நம் தமிழ் இயக்குனர்களிடம் ஒரு பழக்கம் தொன்று தொட்டு இருக்கிறது; எந்தப் படத்தை/நாவலைத்  தழுவி எடுத்தாலும் அதை சாகும் வரை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

பாரதி ராஜா "நாடோடித் தென்றல்" என்று ஒரு படம் எடுத்தார். படம் ஒன்றும் பெரிய வெற்றி இல்லை என்றாலும், இதன் கதை, சுஜாதா எழுதி குமுதத்தில் முதலில் "ரத்தம் ஒரே நிறம்" என்ற பெயரிலும், பின்னர், "கருப்பு, சிவப்பு வெளுப்பு" என்ற பெயரிலும் வந்த கதையின் அப்பட்டமான காப்பி. இந்த லட்சணத்தில், அந்தப் படத்தின் கதை இளைய ராஜா என்று டைட்டிலில் போடுவார்கள். 

இதே போல சத்யராஜ் நடித்து "ஏர்போர்ட்" என்று ஒரு படம். மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் 1993 ம் வருடம் வந்தது. இது சுஜாதா எழுதி மிகப் பிரபலமடைந்த "ஜே.கே" என்ற நாவலின் அப்பட்டமான காப்பி. பாவம் சுஜாதா இதைப் பற்றி வாசகர்கள் கேட்டபோது பெருந்தன்மையாக, "குறைந்தபட்சம், இந்தப் படம் ஜே.கே நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என டைட்டிலில் ஒரு கார்டு போட்டிருக்கலாம்," எனச் சொல்லி அதோடு அதை விட்டுவிட்டார்.

இதைப் போல ஏராளமான உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஓகே, இப்போது, இன்சப்ஷன்:

தொழில் போட்டியில் எதிராளியின் தொலைபேசியை ஒட்டு கேட்டபது, அவனுடைய அலுவலகத்தில் தன்னுடைய ஆளை வைத்து வேவு பார்ப்பது இதெல்லாம் பழைய ஸ்டைல். எதிராளியின் கனவில் புகுந்து அவன் செய்கிறான், என்ன நினைக்கிறான் என்று தகவல்களை சேர்த்து அதை அவனுக்கெதிராக உபயோகித்து வெற்றி பெற நினைக்கும் ஒருவன் (Ken Watanabe), அவனுக்கு உதவி செய்தால் தன் மீது இருக்கும் (தேவையிலாத) பழி நீங்கி, மறுபடியும் தன் குழந்தைகளுடன் ஒன்று சேரலாம் என நினைக்கும் கதாநாயகன் (Leonardo Di Capiro), அவனுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அவனுடைய நண்பர்கள் என்று ஆரம்பிக்கும் கதை எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் பயணித்து அட்டகாசமான க்ளைமாக்சில் முடிவதுதான் இன்சப்ஷன் படத்தின் மிகப் பெரிய பலம்.

இயக்குனர் Christopher Nolan மிக அருமையாக திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் பெரும்பகுதி குழப்பமில்லாமல் நகர உதவுகிறது. சத்யம் தியேட்டரில் அதிசயமாக ஆங்கில சப்-டைட்டில் போட்டு படத்தை மேலு ரசிக்கும் செய்து விட்டார்கள். அதிரடி பின்னணி இசையில் Hans Zimmer சும்மா புகுந்து விளையாடுகிறார். Wally Pfister இன் ஒளிப்பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது. கனவுக் காட்சிகளில் வித்தியாசமான லைட்டிங் கொடுத்து, மற்ற காட்சிகளில் திரைகதையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து காமிரா பயணிக்கிறது.

பெரும்பாலான கனவுக் காட்சிகளில் CG உதவி இல்லாமல் அரங்கம் (setting) அமைத்து மிகவும் மெனக்கெட்டிருக்கிரார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் இந்த படம் ஒரு technical/technological marvel என்பதில் வியப்பில்லை.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...