Skip to main content

சச்சின் புத்தகத்தில் ரத்தம் இல்லை:

 
"டெண்டுல்கர் ஓபஸ்"  புத்தகத்தில், எனது ரத்தம் இடம் பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை,'' என, சச்சின் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் "சாதனை மன்னன்' இந்தியாவின் சச்சின். டெஸ்ட் (13, 539) மற்றும் ஒரு நாள் அரங்கில் (17, 598) அதிக ரன் குவித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய சுயசரிதை புத்தகத்தை, லண்டனை சேர்ந்த கிரேகான் மீடியா நிறுவனம் வெளியிட உள்ளது."டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் வரும் 2011ல் உலககோப்பை போட்டி (50 ஓவர்) துவங்குவதற்கு முன், பிப்ரவரி மாதம் வெளிவர உள்ளது.
37 லட்சம்:
"டெண்டுல்கர் ஓபஸ்' என்ற இப்புத்தகம் மொத்தம் 852 பக்கங்கள் கொண்டது. 37 கி.கி., எடை கொண்டது. இதன் விலை 37 லட்சம் ரூபாய். மொத்தம் 10 பிரதிகள் வெளிவர உள்ளன. இதற்கான முன்பதிவும் முடிந்து விட்டது. இது தவிர, 1. 50 லட்சம், 1 லட்சம் ரூபாயிலும், 10 ஆயிரம், 12 ஆயிரம் ரூபாயிலும் இப்புத்தகம் விற்பனை செய்யப்பட உள்ளது.
சச்சின் மறுப்பு:
இப்புத்தகத்தின் கையெழுத்துப் பக்கத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெற்றிருக்கும் என கிரேகான் மீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் தெரிவித்திருந்தார். ஆனால், இதை அதிரடியாக மறுத்துள்ளார் சச்சின்.
இது குறித்து அவர் கூறியது: டெண்டுல்கர் ஓபஸ் புத்தகம், எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புகைப்படங்களின் தொகுப்பு. இது சுயசரிதையும் அல்ல; வாழ்க்கை வரலாறும் அல்ல. இப்புத்தகத்தில் எனது ரத்தம் இடம் பெற்றிருக்கும் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. இந்தச் செய்தி வெளியான போது, நான் காலேவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தேன். போட்டியில் கவனம் செலுத்தியதால், இது பற்றி தெரியவில்லை. கடந்த வியாழக்கிழமை தான் இது பற்றி அறிந்தேன். இப்புத்தகம் அனைவரும் வாங்கும் விதத்தில் பல்வேறு விலைகளில் வெளிவரும். தவிர, இந்தியாவில் உள்ள நூலகங்களுக்கு இப்புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.
கிரேகான் மீடியா "பல்டி':
கிரேகான் மீடியாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் போவ்லர் கூறுகையில்,"" நான் கூறிய கருத்துக்கள், பத்திரிகை மற்றும் "டிவி'களில் தவறுதலாக வெளிவந்து விட்டது. "டெண்டுல்கர் ஓபஸ்' புத்தகத்தில் சச்சினின் ரத்தம் இடம் பெறவில்லை,'' என்றார். 

சரி தலைவா, நீங்க மறுப்பு சொன்னதையும் உடனே நம்ம blog இல் போட்டாச்சு.  வடிவேலு சொல்ற மாதிரி நீங்க ரொம்ப நல்லவரு, அதனால உங்களுக்கு எதுக்கு இந்த ரத்தம், ரகளை எல்லாம்? 

நன்றி: தினமலர்.காம்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...