Skip to main content

சின்ன வீடா வரட்டுமா?

சின்ன வீடு என்றாலே ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக் குறைவே. அப்படி இருந்தால் ஒன்று அவர்கள் 16 வயதுக்குக் கீழேயோ அல்லது 60 வயதுக்கு மேலேயோதான் இருப்பார்கள். இது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் பெண் வர்க்கம் குரல் கொடுத்து வந்தாலும், நிறைய பெண்கள் இதுவும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கைதான் என்கிறார்களாம்; ஓகே, இங்கு இல்லை, அமெரிக்காவில்.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரு ஆணின் வாழ்க்கையில் ஒரு பெண் "இன்னொரு பெண்ணாக" இருப்பதின் வசதிகளை பட்டியலிட்டுள்ளது ஒரு அமெரிக்க இணைய தளம்

1. ஒரு ஆணின் மற்றொரு பெண்ணாக இருப்பதால் நீங்கள் அவனுக்கு பிடித்த வெங்காய சாம்பார் செய்ய வேண்டிய அவசியமில்லை. கஷ்டப்பட்டு செய்துவிட்டு, "என்ன இருந்தாலும் எங்க அம்மா வைக்கற சாம்பார் மாதிரி வராது," என்ற வார்த்தைகளை கேட்க வேண்டியது இல்லை.

2. அவனுடைய சட்டைக்கு இஸ்திரி போடுவது, பேங்க் வேலைகளைப் பார்ப்பது, அவனுடைய மாமாவுக்கு வெந்நீர் வைப்பது போன்ற அடிமைத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டியதில்லை.

3. . அவனுக்கு பயந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான உடலைக் கவ்விக் கொள்ளும் உடைகளையோ, செக்ஸியான அலங்காரம் செய்து கொள்வதையோ தியாகம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, அவன் உங்களை மேலும் செக்ஸியாக இருக்கத் தூண்டுவானே தவிர, மறுக்க மாட்டான். இதில் இந்த "Tube Top, Lehange, Wrap Around." போன்ற ஆடைகளையும், அலங்கார சாதனங்களையும் அவனே வாங்கிக் கொடுத்து விடுவான்.

4. இங்கு நீங்கள் அவனுக்கு பணிவிடை செய்து tired ஆக மாட்டீர்கள், மாறாக, அவனுடைய கொஞ்சல்களும், முத்தங்களும்தான் உங்களை tired ஆக்கும்.

5. அவனுடைய ஆபீஸ் பார்ட்டி என்ற பெயரில் அவனுடைய முட்டாள் பாஸின் மனைவியின் கேவலமான உடை அலங்காரத்தை புகழ்ந்து பேசவோ, அங்கே கிடைக்கும் வாயில் வைக்க முடியாத சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, "oh, excellent dish," என்றெல்லாம் பொய்யாக புகழத் தேவையில்லை.

6. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தலை சொட்டையாகி, வயிறு பெருத்து, கிழவனாக மாறும் போது அவனைச் சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஓகே, இது பெண்களுக்கு என்னென்ன வசதிகள் என்ற பட்டியல். இந்த மாதிரி ஒரு செட்டப்பின் மூலம் ஆண்களுக்கு என்னென்ன வசதிகள் என்பதை இங்கு சொல்ல முடியாது, காரணம் பெரும்பாலான பெண்கள் அதை விரும்ப மாட்டார்கள்.

நன்றி: msn.com

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்