Skip to main content

அரபிக்கடலுக்கு காத்திருக்கும் அபாயம்

இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் சதுப்புநிலக்காடுகள் குறைந்து வருவதால் அப்பகுதி அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது. நிலப்பரப்புக்கும், கடலுக்கும் இடையேயுள்ள வனப்பகுதியே சதுப்புநிலக்காடுகள் ஆகும். இவை உலக அளவில் வளம் மிகுந்த இயற்கை நிலைகளில் ஒன்றாகும். கடலோர வளத்தை அதிகரிக்க செய்வதோடு, வனப்பொருட்களை கொடுப்பதிலும், கடலோரத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. குறிப்பாக கடலோர மீன்வள ஆதாரத்துக்கு சதுப்புநிலக்காடுகள் அவசியமாகிறது.

இதன் உயரிய உப்புத்தன்மை, வெப்பநிலை, கடல் ஏற்றம், இறக்கம், பலத்த காற்று , சகதியான மற்றும் பிராண வாயுவற்ற மணலமைப்பு, வேறு வனப்பகுதியில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகள் 4461 ச.கி.மீ., வரை பரவியுள்ளது. இவற்றில் பெரும்பாலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளது. கிழக்கு கடற்பகுதி (வங்காள விரிகுடா) 59சதவீதமும், மேற்கு கடற்கரை(அரபிக்கடல்) 23சதவீதமும் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 18 சதவீதமும் சதுப்பு நிலக்காடுகள் பரவியுள்ளன. மண் அரிப்பை தடுக்கவும், காற்றின் வேகத்தை குறைக்கவும் உதவும் சதுப்புநிலக்காடுகள் குறைவு காரணமாகவே, அந்தமான் தீவு அடிக்கடி புயல், பூகம்பத்தை சந்தித்து வருகிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பது, இந்தியாவில் மேற்கு கடற்பகுதியான அரபிக்கடலாகும்.

வெறும் 23 சதவீதம் மட்டுமே சதுப்புநிலக்காடுகளை கொண்டுள்ளதால், அரபிக்கடலும் கடல்வழி அபாயத்தை எதிர்கொள்ளும் தன்மையை இழந்து வருகிறது. போதாக்குறைக்கு, அப்பகுதியில் தொடர்ந்து சதுப்புநிலக்காடுகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் அரபிக்கடல் பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கிழக்கு கடற்பகுதியில் போல, இங்கு ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் இருப்பதில்லை. இதுவும் இங்கு சதுப்பு நிலக்காடுகள் குறைய முக்கிய காரணமாகும். வங்காளவிரிகுடாவில் அரபிக்கடலை விட அதிகமான சதுப்பு நிலக்காடுகள் இருந்தாலும், இங்கு அவற்றை அபகரிக்கும் செயல் அதிகமாக நடந்து வருகிறது. இது சதுப்பு நிலக்காடுகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்திய கடற்பகுதி முழுவதும் சதுப்புநிலக்காடுகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

நன்றி: தினமலர்.காம்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...