Skip to main content

அரபிக்கடலுக்கு காத்திருக்கும் அபாயம்

இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் சதுப்புநிலக்காடுகள் குறைந்து வருவதால் அப்பகுதி அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது. நிலப்பரப்புக்கும், கடலுக்கும் இடையேயுள்ள வனப்பகுதியே சதுப்புநிலக்காடுகள் ஆகும். இவை உலக அளவில் வளம் மிகுந்த இயற்கை நிலைகளில் ஒன்றாகும். கடலோர வளத்தை அதிகரிக்க செய்வதோடு, வனப்பொருட்களை கொடுப்பதிலும், கடலோரத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. குறிப்பாக கடலோர மீன்வள ஆதாரத்துக்கு சதுப்புநிலக்காடுகள் அவசியமாகிறது.

இதன் உயரிய உப்புத்தன்மை, வெப்பநிலை, கடல் ஏற்றம், இறக்கம், பலத்த காற்று , சகதியான மற்றும் பிராண வாயுவற்ற மணலமைப்பு, வேறு வனப்பகுதியில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இந்தியாவில் சதுப்பு நிலக்காடுகள் 4461 ச.கி.மீ., வரை பரவியுள்ளது. இவற்றில் பெரும்பாலும் கிழக்கு கடற்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளது. கிழக்கு கடற்பகுதி (வங்காள விரிகுடா) 59சதவீதமும், மேற்கு கடற்கரை(அரபிக்கடல்) 23சதவீதமும் உள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 18 சதவீதமும் சதுப்பு நிலக்காடுகள் பரவியுள்ளன. மண் அரிப்பை தடுக்கவும், காற்றின் வேகத்தை குறைக்கவும் உதவும் சதுப்புநிலக்காடுகள் குறைவு காரணமாகவே, அந்தமான் தீவு அடிக்கடி புயல், பூகம்பத்தை சந்தித்து வருகிறது. இதற்கு அடுத்த கட்டத்தில் இருப்பது, இந்தியாவில் மேற்கு கடற்பகுதியான அரபிக்கடலாகும்.

வெறும் 23 சதவீதம் மட்டுமே சதுப்புநிலக்காடுகளை கொண்டுள்ளதால், அரபிக்கடலும் கடல்வழி அபாயத்தை எதிர்கொள்ளும் தன்மையை இழந்து வருகிறது. போதாக்குறைக்கு, அப்பகுதியில் தொடர்ந்து சதுப்புநிலக்காடுகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் அரபிக்கடல் பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கிழக்கு கடற்பகுதியில் போல, இங்கு ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் இருப்பதில்லை. இதுவும் இங்கு சதுப்பு நிலக்காடுகள் குறைய முக்கிய காரணமாகும். வங்காளவிரிகுடாவில் அரபிக்கடலை விட அதிகமான சதுப்பு நிலக்காடுகள் இருந்தாலும், இங்கு அவற்றை அபகரிக்கும் செயல் அதிகமாக நடந்து வருகிறது. இது சதுப்பு நிலக்காடுகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்திய கடற்பகுதி முழுவதும் சதுப்புநிலக்காடுகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

நன்றி: தினமலர்.காம்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்