Skip to main content

கருப்பு பணம் இந்தியா வந்தால் 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட்!

"இந்தியர்கள், சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போடலாம்," என ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி நேற்று தெரிவித்தார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: "இந்தியா பணக்கார நாடு. ஆனால், அதன் ஊழல் தலைவர்களால், இந்தியா ஏழையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர்கள், நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து எடுத்து, சுவிஸ் வங்கியில், 67.50 லட்சம் கோடி ரூபாய் வரை பதுக்கி வைத்துள்ளனர். அரசு இந்த பணத்தை மீண்டும் இந்தியா கொண்டு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.5 லட்சம் ரூபாய் கிடைப்பதோடு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம்.

புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி, சுவிஸ் வங்கிக் கணக்கில், 36 ஆயிரத்து 900 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து அரசு, 37 கோடி ரூபாயை வரியாக வசூலித்தது. 2002ம் ஆண்டு, அரசு வரி ஏய்ப்பு செய்து பணத்தை வெளிநாடுகளில் சேமிக்கும் செயலைத் தடுக்க சட்டத்தை உருவாக்கியது. ஆனால், அதில் உள்ள விதிமுறைகள் எதையும், 2005ம் ஆண்டு வரை அரசு செயல்படுத்தவில்லை.

வருமான வரி அதிகாரிகள், ஹசன் அலியின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை, தருமாறு சுவிஸ் வங்கியிடம் கேட்டனர். அப்போது, சுவிஸ் வங்கியினர் அளித்த பதிலில், 'பணமோசடி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாங்கள் அனைத்து தகவல்களையும் வழங்க தயார்' என்றனர்.

ஆனால், அதன் பின், 2007ம் ஆண்டு வரை, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் எவ்வித கடித தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை இந்தியா கொண்டு வர அரசுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது அதுபற்றி உண்மை தெரியாமல் இருக்க வேண்டும். சுவிஸ் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் குறித்து விசாரிக்க ஏன் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வில்லை. இந்தப் பணம் பற்றி அறிய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். ஆனால், அரசு இந்த விஷயத்தை ரகசியம் என்று கூறி தகவல் தர மறுக்கிறது. அப்படி ரகசியம் என்று கூறுவது மோசடியாகும்"

ராம் ஜெத்மலானி கூறிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இன்னொரு சுலபமான வழியும் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளின் கணக்கில் வராத சொத்துக்களை வெளியில் கொண்டுவந்தால் இன்னும் ஒரு 300 ஆண்டுகளுக்கு வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இந்தியாவையும் சிங்கப்பூர் போல ஒரு அப்பழுக்கற்ற நாடாக மாற்றிவிடலாம்.

ஆனால் அந்த நிலை வருமா???

-with inputs from Dinamalar.com

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...