Skip to main content






முதலில் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு எல்லோருக்கும் நலமாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரியட்டும்.

பல்வேறு சொந்த காரணங்களால் சென்ற ஜூன் மாதத்திற்குப் பிறகு என்னால் புதிய பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் புத்தாண்டில் என்னுடைய முதல் மற்றும் முக்கிய தீர்மானம் என்னுடைய இந்த பதிவுகளை எக்காரணம் கொண்டும் இடைவெளி இல்லாமல் வெளியிடுவதுதான்.

இந்தப் பதிவுகளை நான் சற்று இடைவெளி விட்டு பதியாமல் இருந்தபோது நிறைய நண்பர்கள் என்னுடன் நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியில் உரையாடும்போதும் இதைக் குறிப்பிட்டு கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

குறிப்பாக ஒரு அமெரிக்க நண்பர் [நான் முன்பின் சந்தித்ததில்லை] எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி என்ன காரணம் என்று கேட்டுவிட்டு, இணைய தளத்தில கோடிக்கணக்கான பதிவுகள் இருந்தாலும், தமிழில் அவை மிகக் குறைவு என்றும், அதிலும் பெரும்பாலானவை வெறும் reporting ஆக மட்டுமே உள்ளன, அதிலும் முக்கியமாக பதிவாளர்கள் பெரும்பாலோருக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு என்றும் புலம்பியிருந்தார்.

நான் மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர வாசகன் என்பதால் சத்தியமாக அவருடைய எழுத்தில் விரவியிருக்கும் நகைச்சுவை உணர்வு என்னையும் தொற்றிக் கொண்டதில் வியப்பேதுமில்லை. அதே சமயம் அவரைப் போல என்னால் எந்தக் காலத்திலும் எழுத முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் இந்த மாதிரி விசாரிப்புகள் ஒரு பெரிய தெம்பைக் கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...