Skip to main content

2010 சுட்டெரிக்குமா சுகம் தருமா?




இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா...பதவி உயர்வு வருமா...கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் நம்மைப் போன்ற சாமானியர்கள் கணக்கு போடுவோம். புத்தாண்டு ஜோதிடத்தை பெரும்பாலும் நம்பி முடிந்தவரை கோயில், குளம் என்று செல்லுவோம், அல்லது நம் சார்பில் நம்முடைய மனைவிகள் அவரவர் இஷ்ட தெய்வங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி வேண்டுவர் [எங்க வீட்டுல அவருக்கு இப்போ ஏழரைச்சனி]

ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான்.

புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்றனரே... அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.

அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது...? "2012" என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன்.

சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி செய்து, உலக வெப்பத்தை குறைக்க எவ்வளவோ வழிகளை சொல்லி விட்டனர்; விபரீதங்களையும் பட்டியலிட்டு விட்டனர். முடிவெடுக்க வேண்டியது உலக நாடுகளின் கையில் தான் உள்ளது.

"உலக போலீஸ்காரன்' என்று அழைக் கப்படும் அமெரிக்கா தலைமையில் பணக்கார நாடுகள் ஒரு பக்கம்; இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஒரு பக்கம். இரண்டிலும் சேராத பிச்சைக்கார நாடுகள், "வாய் பேசா அடிமைகளாக' இன்னொரு பக்கம்
.
"கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறோம் இல்லே...அதனால், நீங்க தான் அதிகமாக வசதியை குறைக்கணும்; வெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்!' என்பது வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் இடும் கட்டளை. ஏழை நாடுகளை கேட்கவே வேண்டாம்; சொன்னதை கேட்டு வாய் மூடியிருக்க வேண்டியது தான். இப்படி பிரச்னை எழுந்ததால் தான், சமீபத்தில் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த, "பருவநிலை மாற்ற விபரீத தடுப்பு மாநாடு' முடிவெடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது.

இந்தாண்டு மீண்டும் கூடிப் பேச போகின்றனார். மீண்டும், "உர்ர்ர்...' என்று தான் ஆளாளுக்கு திரும்பிப் போவர். இவர்கள் காலம் தாழ்த்தலாம்; காத்திருக்கலாம். ஆனால், விபரீதங்கள் காத்திருக்குமா? உலக வெப்பமயமாதலின் பயங்கர விளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன.

*கடந்தாண்டு வெயில் எப்படி சுட்டெரித்தது என்பது தெரிந்தது தானே; மாலை ஆறு மணிக்கும் கூட, பகல் 12 மணி போல சுரீர் என்று சுட்டது. இந்தாண்டு மட்டும் குறையுமா என்ன? இதுவரை 0.8 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்து விட்டது; விஞ்ஞானிகளின் கணிப்பு, வெப்பம் 0.3 சென்டிகிரேட் அதிகரிக்கும் என்பது தான். 2012ல் தான் அதிக பட்ச சுட்டெரிப்பு ஆரம்பிக்குமாம்.

*சுட்டெரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பனிமலைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுக்கும். இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் இருந்து தான் கங்கை நதி, உற்பத்தியாகிறது. இமயமலை உருகிக் கொண்டிருக்கிறது. இல்லை, உருகவே இல்லை என்று பேச்சுக்கு சொன்னாலும், கங்கையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

* சமீபத்தில் படித்த ஒரு செய்தி: கடல் மட்டத்திலிருந்து 15000 மீட்டர் உயரத்திலிருக்கும் லடாக்கில் வெப்பமயமாதலின் விளைவாக இதுவரை கேள்வியே பட்டிராத வகையில் கொசுக்கள் முற்றுகை இடுவதால் அங்குள்ள அப்பாவிகள் முதன்முறையாக ceiling fans வாங்க ஆரம்பித்துள்ளனர். சென்ற மே மாதம் நான் என் குடும்பத்துடன் குன்னூர் சென்றபோது இதை உணர்ந்தேன். அங்கு இரவில் a/c இல்லாமல் உறங்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஒரு டீ எஸ்டேட்டின் விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் இது சமீத்தில் ஏற்பட்ட மாற்றமே என்றார்.

*உலகின் ஒரு பகுதி ஆர்க்டிக் கடலில் முடிகிறது; பனிக்கடலான அது இப்போது உருக ஆரம்பித்து விட்டது. மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகி, பென்குயின்கள் உட்பட பனி வாழ் இனங்கள் அழியும் ஆபத்து ஆரம்பமாகி விட்டது.

*இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது, 2100 ல் உலகில் கடல் மட்டம் 23 அங்குலம் உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மும்பை போன்ற இடங்களில் கடல் சூழ்ந்து விடும்; கடல் இல்லா பகுதிகளில் எல்லாம் பீச் வந்து விடும்.

*வெப்பமயமாதலின் விபரீதத்தில் நம்மை பெரிதும் அஞ்ச வைக்கப்போவது எது தெரியுமா? கொசு போன்ற சிறிய, "லொள்ளு' பூச்சிகள் தான். இந்த பூச்சிகள் எல்லாம் மெகா சைசுக்கு பெருத்து விடுமாம். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போல புதுப்புது நோய்கள் ஆட்டிப் படைக்கும்.

* கடல் நீர் அதிகமாக இருக்கும்; ஆனால், குடிநீர் பெரும் பற்றாக்குறையாகி விடும். 2025ல் இப்பிரச்னை பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்து விடும்.

* கடல் சீற்றம், நகரங்களை விழுங்குவது சிறிது, சிறிதாக பல இடங்களில் ஏற்படும். அதனால், பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும்.

* வனங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு ஆபத்து ஏற்படும். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, 10 லட்சம் வன உயிரினங்கள் அழிந்து விடும் என்கின்றனர்..

நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்