Skip to main content

பைரஸி பூதம்!

சமீபத்தில் பார்த்த அயன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மலேசியாவிலிருந்து சூர்யா ஒரு திருட்டு மாஸ்டர் DVD யுடன் வருவார். அவரை கூட்டிப் போகவரும் பிரபு சொல்லுவார், " "நாளைக்குத் தான் இந்த படம் ரிலீஸ், அதுக்குள்ள எவ்வளவு பிரிண்ட் போடமுடியுமோ அவ்வளவு போட்டு வித்துடனும்."

அது பாடலாக இருந்தாலும் சரி, அல்லது திரைப்படமாக இருந்தாலும் சரி சுடச் சுட உடனே பைரஸியாக வெளிவந்துவிடுகின்றன.

பைரஸி dvd வாங்கக்கூடாது என்று என் நண்பி சுதாவைப் போல வெகு சிலரே பிடிவாதமாக இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை இது டெக்னாலஜியின் சாபக்கேடு. என்னதான் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு திரைத் துறையினர் கவனமாக இருந்தாலும் எல்லா மொழிப் படங்களுமே உடனடியாக சந்தைக்கு வந்து விடுகின்றன. ரூ.10 முதல் 30 கிடைக்கும் இந்த [பெரும்பாலும்] பாடாவதியான ப்ரிண்டைப் பார்த்துவிட்டு படம் சூப்பர் என்றோ சொதப்பல் என்றோ உடனடியாக அந்த படத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.

இதுவே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரனாகவோ அல்லது பீச்சில் கொண்டக்கடலை சுண்டல் விற்பவராகவோ ஆகிவிட வழிவகுக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நான் தமிழ் படங்களை பைரஸி dvd யில் பார்ப்பதில்லை. உடனே நான் ஒரு மறத்தமிழன், தன்மானத் தமிழன் என்றெல்லாம் சொல்லிகொள்ளப் போவதில்லை. ஆங்கிலப் பட dvd க்கள் பைரஸியாக இருந்தாலும் மிகத் தெளிவான ப்ரிண்டுடன் வருகின்றன. சற்று விலை அதிகம் என்றாலும் தங்கத் தகட்டில் [gold disc] மட்டும் வாங்குவது என்ற என் பிடிவாதம் மட்டுமே காரணம் இல்லை.

ஆங்கிலப் படங்களின் dvd க்கள் படம் வந்த சில நாட்களிலேயே காபிரைட்டுடன் dvd யாக வந்து விடுகின்றன. ஆனால், தமிழ் திரையுலகம் தேவையில்லாமல் படம் வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பின்தான் dvd யாக வரவேண்டுமென அனாவசியமான ஒரு கட்டுப்பாட்டினால் இந்த பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் மட்டமான பிரிண்ட் மட்டுமே பைரஸி dvd யாக கிடைக்கிறது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் காபி ரைட்டுடன் ரூ.40 க்கு MoserBaer dvd யாக வந்தாலும் அதை நாய் சீண்டுவதில்லை.

இதில் ஒரு ஆச்சரியமான/அதிர்ச்சிகரமான விஷயம் நேற்று நடந்தது; என் அருமை மகன் என்னைப் போலவே ஒரு ஆங்கிலப் பட பைத்தியம். வெகு சின்ன வயதிலிருந்தே [பெரும்பாலும்] நல்ல படங்களாகவே என்னுடன் சேர்ந்து பார்த்து வருவதால் அவனுடைய ரசனை நன்கு பண்பட்டு இருக்கிறதென்றே சொல்லவேண்டும். அவன் ஒரு பைரஸி dvd யை என்னிடம் கொடுத்து படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்லு என்று சொல்லிவிட்டு போய் விட்டான். Wolverine என்ற படம் X-Men series இல் வந்த படங்களின் prequel.

IMDB என்ற இணையதளத்தை எப்போதும் refer செய்தே படம் வாங்குவது என் பழக்கம்; நேற்றும் அப்படி இந்த Wolverine படத்தை refer செய்ய முயன்றபோது அதிர்ச்சி அடைந்தேன், காரணம், அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி 1, மே 2009 என்று இருந்தது. அடப் பாவிகளா! மறுபடியும் முதல் பாராவைப் படிக்கவும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்