Skip to main content

அரசியல்வாதிகளின் மூடநம்பிக்கைகளும், அதில் புரளும் கோடிகளும்!




தேர்தல் வியாபாரத்தில் குதித்துள்ள நம் வேட்பாளர்கள் ஜோசியத்துக்கும், ஹோமங்கள் பண்ணுவதற்கும் வாரியிறைத்து வருகின்றனர். தேர்தல் வந்து விட்டாலே, லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூடுதல் பணம், பொருளுடன் மூன்று மாதம் வேலை கிடைத்து விடுகிறது. "ஓட்டு போடுங்கம்மா' என்று கூவுவதற்கு ஏகப்பட்ட ஏழைப் பெண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கிடைக்கிறது; கூடவே, பிரியாணி பொட்டலங்களும்.


கடவுளுக்கு் மனு போடுகின்றனர்; கடவுளை திருப்திப்படுத்த ஹோமங்களை செய்கின்றனர். தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய சகஸ்ர ஹோமம், அதிருத்ர ஹோமம், தங்கள் கட்டுப்பாட்டில் அடுத்தவர்களை வைத்துக்கொள்ள "வாஷி கரண' ஹோமம், அடுத்தவர் கண்டிப்பாக தோல்வி அடைய "விபரீத பிரத்யங்கர' ஹோமம் என்று விசேஷ ஹோமங்கள் செய்யப்படுகின்றன. இதற்காக, வேத பண்டிதர்கள் சிலர், "போர்டு' மாட்டாத குறையாக சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களில் உள்ளனர். பெரும்பாலும், சென்னை, பெங்களூரு நகரங்களில் இருந்துதான் இப்படிப்பட்ட வேத மந்திர குழுக்களை தேசிய அரசியல் கட்சிகள், ஹோமங்களை செய்ய நியமிக்கின்றன.


சில ஹோமங்கள் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை இடைவிடாமல் செய்வதும் உண்டு. ஹோமங்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிக பட்சம் 50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. அதிகபட்ச ஹோமங்களை செய்வது, கோடீஸ்வர வேட்பாளர்கள் மட்டுமே. கட்சிகளும் இப்படிப்பட்ட ஹோமங்களை மணிக்கணக்கில் செய்ய ஆர்டர் தருகின்றன. கடந்த தேர்தலை விட, இந்த முறை ஹோமங்களுக்கான ஆர்டர் 30 சதவீதம் அதிகரித்து உள்ளதாக பெங்களூரை சேர்ந்த பிரபல வேத பண்டிதர் கூறுகிறார். டில்லி, மும்பையில் இருந்தும் கூட ஆர்டர்கள் வருகின்றனவாம். பல கட்சிகளை சேர்ந்தவர்கள் ஹோமத்துக்கு ஆர்டர் தந்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலரும் இதில் அடங்குவராம்.


லோக்சபா தேர்தல் முடியும் அடுத்த மாதம் 13 ம் தேதி வரை, முக்கிய நகரங்களில் ஹோமங் கள் தினமும் நடக்கின்றன. பல வேட்பாளர்களுக்கு ஆர்டர் தந்தும் வேத பண்டிதர்கள் கை விரித்து விட்டனர்.

ஐ.டி., நிறுவனங்களின் வேலைகளுக்கு மட்டும் தான் "அவுட்சோர்சிங்' நடக்கிறதா என்ன? ஹோமங்கள் செய்வதற்காக சென்னையில் இருந்து மும்பைக்கும், பெங்களூரு நகரில் இருந்து மும்பைக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து கோல்கட்டாவுக்கும் வேத குழுக்கள் பறப்பதுண்டு. ஹோமங்கள் தவிர, ஜோதிடம் பார்ப்பதும், அரசியல்வாதிகள், வேட்பாளர்களிடம் அதிகரித்து விட்டது. கையை பிடித்து பார்த்து சொல்ல, ஜாதகம் பார்த்து சொல்ல 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பிரபல ஜோதிடர்கள் வாங்குகின்றனர்.

இப்படி ஹோமங்கள், ஜோசியத்துக்கு மட்டும் இந்த தேர்தலில் 500 கோடி ரூபாய் வரை பிசினஸ் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்.காம்

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...