Skip to main content

கடல் நடுவே அமர்க்களம்!

































என் மகளின் பள்ளி விடுமுறை ஆரம்பித்து விட்டதால் வெளியே செல்ல வேண்டுமென்ற அன்புத் தொல்லையும் ஆரம்பித்துவிட்டது.

என்ன வேலை தலைக்குமேல் இருந்தாலும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை என்றுமே நான் குறைத்துக் கொண்டது இல்லை.

ஆனால், சொந்த பிஸினசில் பணம் கொட்டவில்லை என்றாலும் தலை தின்கும் பிரச்சினைகள் ஏராளம் என்பதால் சமீபத்தில் அவ்வளவாக வெளியில் செல்ல முடியவில்லை. பெரிய relief ஆக நேற்றைய தினம் அமைந்தது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் அருகே உள்ளது ஒரு சிறிய மீனவர் குடியிருப்பு.

அங்குள்ள மீனவ நண்பர்கள் [பெரும்பாலும் இளைஞர்கள்] மிகத் துடிப்புடன், உற்சாகமாக life-jacket எல்லாம் தயார் செய்து கொண்டு, படித்த நான்கு இளைஞர்களின் துணையுடன் அங்கு வரும் மக்களை [8 பேர் ஒரு கட்டு மரத்தில்] நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கடற்கரையில் இருந்து கிட்டத் தட்ட இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடுக்கடலுக்கு சென்றவுடன் நம்மிடம் ஒரு கயிறு ஒன்றைக் கொடுத்து, அதைப் பிடித்துக் கொண்டு கடலில் குதிக்கச் சொல்கிறார்கள்.

நீச்சலே தெரியாத என்னைப் போன்ற வீரர்கள் கூட தைரியமாக இந்த விளையாட்டில் ஈடுபட முடியும்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடலில் ஊறி விட்டு வந்தோம். சில வருடங்களுக்கு முன் பாங்காக், சிங்கப்பூர் போனதைவிட இந்த ஒரு மணி நேரத்தை மிகவும் enjoy செய்ததாக என் குழந்தைகள் சொன்னபோது நான் செலக்ட் செய்த விஷயம் சரி என்றே பட்டது.

ஒரு ஆளுக்கு ரூ.300/- வசூல் செய்து, ஒரு மிக வித்தியாசமான பொழுதுபோக்கை தரும் அந்த நண்பர்களை வாழ்த்துகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்