Skip to main content

வீடு வாங்கினால் மெர்சிடிஸ் பென்ஸ் இலவசம் !!



கடந்த 2008 ஆண்டு, இது வரை பகல் கொள்ளை அடித்து வந்த ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது. 300-400% வரை லாபம் பார்த்து வந்த பல பெரிய புள்ளிகள் வியாபாரம் படுத்து விட்டதால் நிலை தடுமாறினர். லட்ச லட்சமாக கொட்டி வாங்கிய நிறைய இளித்த வாயர்கள் சமீபத்தில் பெய்த பெரும் மழையில், நிறைய இடங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த மந்த நிலையிலிருந்து வெளிவர ரியல் எஸ்டேட் முதலாளிகள் புதிது புதிதாக பரிசுத் திட்டங்களை அறிவித்து மக்களை மீண்டும் கவர பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள்.

நேற்று இரவு NDTV பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விளம்பரம்; பெங்களூரில் ரூ. 69 லட்சத்துக்கு ஒரு வில்லா வாங்கினால் ஒரு புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இலவசம். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த வில்லா நிச்சயம் தும்கூரிலோ அல்லது சிக்பெல்லாபூரிலோ இருக்கும். ஏதாவது ஒரு காய்ந்த ஏரியை பிளாட் போட்டு விற்பனை செய்து அதில் வில்லாக்கள் கட்டப்பட்டிருக்கும். அடுத்த மழையின் போது வெள்ளம் உள்ளே புகுந்து, பென்ஸ் காரை படகாக மாற்றி உபயோகிக்க வேண்டியிருக்கும்; பென்ஸ் காரின் விலையையும் சேர்த்து, வில்லாவின் மதிப்பு ரூ. 40 லட்சத்துக்கு மேல் இருக்காது;

இதே மந்த கதியில் நம் பொருளாதாரம் இருந்தால் இன்னும் கொஞ்ச நாட்களில் தெருத் தெருவாக "வீடு வாங்கலையோ சாமி, வீடு, வில்லா வாங்கலையோ, வில்லா" என்று கூவி வியாபராம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்போதும் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் அல்லது ஒரு BMW நிச்சயம் இலவசமாகக் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்