Skip to main content

சொந்தமாக கார் வைத்திருக்கும் இளித்தவாயர்களே, இதோ சாபம்!


(படத்தில் இருப்பது என் அருமை மனைவிதான். ஆனால் அந்த அட்டகாசமான Ferrari கார் சத்தியமாக என்னுடையதில்லை)



நம்முடைய பொன்னான அரசாங்கம் இன்னுமொரு ஜனநாயக விரோத திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. நீங்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவரா? அப்படியென்றால் இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான்.

நம் நாட்டில் பொதுமக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை; நல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை, நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர எந்த கியாரண்டியும் இல்லை. ஆனால், நமது அரசுக்கு சுற்றுச் சூழல் மேல் திடீரென பெரும் அக்கறை வந்துவிட்டது.

இந்தியாவில் நிறைய குடியிருப்புகளில் வண்டிகள் நிறுத்த சரியான பார்கிங் வசதிகள் இல்லை. பெருகிவிட்ட டாக்சிகளின் எண்ணிக்கை, அவற்றை சரியாக பார்க் செய்ய வசதிகள் இல்லாமல் அத்தனை சாலைகளையும் இவர்களே ஆக்கிரமித்து விட்டனர். இதை நம் அரசாங்கம் எப்படி சரி செய்யப் போகிறது?

பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை குறைந்த அளவில் உபயோகிக்க பெருகி விட்ட ஆட்டோக்களும் ஒரு பெரிய காரணம் இல்லையா? இந்த ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசங்கள் எல்லோருக்கும் தெரியும். இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதற்கு முதல் காரணம் பெரும்பான்மையான ஆட்டோக்களுக்கு காவல் துறையின் பெரிய அதிகாரிகளே பினாமி உரிமையாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.

நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் கார்கள் பெருகிவிட்டதாலும், பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை உபயோக்கிப்பது பெருமளவில் குறைந்துவிட்டதாலும், அதிக எண்ணிக்கையில் தனியார் வண்டிகள் இருப்பதால் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டதாலும், இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்துவிட்டதாலும் நம் அரசின் புத்திசாலிகள் (think tank) உட்கார்ந்து ஆலோசனை செய்து சில பொன்னான முடிவுகளை எடுத்துள்ளனர். அவை வருமாறு;

1. புதிதாக கார் வாங்குபவர்கள் பார்கிங் இடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.
2. டீசல் கார்களை கட்டுப்படுத்த வேண்டும்
3. பொது இடங்களில் பார்கிங் செய்வதை தடை செய்ய வேண்டும் மற்றும் முக்கியமான சாலைகளில் பார்கிங் கட்டணத்தை பெருமளவு (?) அதிகப் படுத்த வேண்டும்
4. வண்டிகளின் மேல் "congestion charge" விதிக்க வேண்டும்
5. பஸ் மற்றும் ரயில் கட்டங்களைக் குறைக்க வேண்டும் (ஒரே ஒரு உருப்படியான யோசனை)

நம்முடைய சென்னையைப் பற்றி இப்போது பேசலாம்; ஒரு நாளுக்கு 12 இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு (registration) செய்யப்படுகின்றன. மாதத்திற்கு 36 கார்கள், 42 ஆட்டோக்கள், 11 லாரிகள் ஆகியவை பதிவு செய்யப் படுகின்றன (இவையெல்லாம் மைலாபூரைச் சேர்ந்த ஒரு RTO சொன்னது).

இதை அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்? கண்டிப்பாக முடியும். சிங்கப்பூர் கிட்டத்தட்ட நம் சென்னை அளவுதான். அங்கு மக்கட் தொகையும் கிட்டத்தட்ட சென்னையைப் போலதான். அங்கு சாலை நெரிசல் இல்லையா? இருக்கிறது. கார்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். இத்தனைக்கும் அந்த ஊர் போல பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆனால் பார்கிங் வசதிகள் ஏராளம். ஒவ்வொரு கட்டிடமும் திட்டமிடப்பட்டு திறமையாக தேவையான பார்கிங் வசதிகளுடன் கட்டப்படுகின்றன.

பார்கிங் நெரிசலைக் கட்டுபடுத்த சிங்கப்பூர் அரசும் பார்கிங் கட்டணத்தை அதிகமாகவே வைத்துள்ளது. கார்களின் எண்ணிக்கையை குறைக்க இறக்குமதி செய்யப்படும் கார்களின் மேல் விதிக்கப்படும் வரியும் மிக அதிகம்.

ஆனால் சாலைகள்? அதைப் போன்ற சாலைகள் எல்லாம் இங்கு கனவுதான். காரணம் நம் அருமையான அரசியல்வாதிகள் .

அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதை விட்டு விட்டு நம் அரசாங்கம் தனியார் வாகனங்களின் மேல் தேவையில்லாமல் கண்டிப்பு காட்டுவது முட்டாள்தனம். இதெல்லாம் தெரிந்தும் நம் அரசு மெத்தனமாக இருப்பதின் காரணம் சொந்தமாக கார் வைத்திருப்பதில் 90% பேர் எந்த தேர்தலிலும் ஓட்டு போடப் போவதில்லை. எனவே அதைப் பற்றி புலம்பதான் முடியும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்