Skip to main content

சொந்தமாக கார் வைத்திருக்கும் இளித்தவாயர்களே, இதோ சாபம்!


(படத்தில் இருப்பது என் அருமை மனைவிதான். ஆனால் அந்த அட்டகாசமான Ferrari கார் சத்தியமாக என்னுடையதில்லை)



நம்முடைய பொன்னான அரசாங்கம் இன்னுமொரு ஜனநாயக விரோத திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. நீங்கள் சொந்தமாக கார் வைத்திருப்பவரா? அப்படியென்றால் இனி உங்கள் பாடு திண்டாட்டம்தான்.

நம் நாட்டில் பொதுமக்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை; நல்ல போக்குவரத்து வசதிகள் இல்லை, நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர எந்த கியாரண்டியும் இல்லை. ஆனால், நமது அரசுக்கு சுற்றுச் சூழல் மேல் திடீரென பெரும் அக்கறை வந்துவிட்டது.

இந்தியாவில் நிறைய குடியிருப்புகளில் வண்டிகள் நிறுத்த சரியான பார்கிங் வசதிகள் இல்லை. பெருகிவிட்ட டாக்சிகளின் எண்ணிக்கை, அவற்றை சரியாக பார்க் செய்ய வசதிகள் இல்லாமல் அத்தனை சாலைகளையும் இவர்களே ஆக்கிரமித்து விட்டனர். இதை நம் அரசாங்கம் எப்படி சரி செய்யப் போகிறது?

பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை குறைந்த அளவில் உபயோகிக்க பெருகி விட்ட ஆட்டோக்களும் ஒரு பெரிய காரணம் இல்லையா? இந்த ஆட்டோக்கள் செய்யும் அட்டகாசங்கள் எல்லோருக்கும் தெரியும். இவற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனதற்கு முதல் காரணம் பெரும்பான்மையான ஆட்டோக்களுக்கு காவல் துறையின் பெரிய அதிகாரிகளே பினாமி உரிமையாளர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை.

நம் நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் கார்கள் பெருகிவிட்டதாலும், பொதுமக்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை உபயோக்கிப்பது பெருமளவில் குறைந்துவிட்டதாலும், அதிக எண்ணிக்கையில் தனியார் வண்டிகள் இருப்பதால் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டதாலும், இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்துவிட்டதாலும் நம் அரசின் புத்திசாலிகள் (think tank) உட்கார்ந்து ஆலோசனை செய்து சில பொன்னான முடிவுகளை எடுத்துள்ளனர். அவை வருமாறு;

1. புதிதாக கார் வாங்குபவர்கள் பார்கிங் இடம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.
2. டீசல் கார்களை கட்டுப்படுத்த வேண்டும்
3. பொது இடங்களில் பார்கிங் செய்வதை தடை செய்ய வேண்டும் மற்றும் முக்கியமான சாலைகளில் பார்கிங் கட்டணத்தை பெருமளவு (?) அதிகப் படுத்த வேண்டும்
4. வண்டிகளின் மேல் "congestion charge" விதிக்க வேண்டும்
5. பஸ் மற்றும் ரயில் கட்டங்களைக் குறைக்க வேண்டும் (ஒரே ஒரு உருப்படியான யோசனை)

நம்முடைய சென்னையைப் பற்றி இப்போது பேசலாம்; ஒரு நாளுக்கு 12 இரண்டு சக்கர வாகனங்கள் பதிவு (registration) செய்யப்படுகின்றன. மாதத்திற்கு 36 கார்கள், 42 ஆட்டோக்கள், 11 லாரிகள் ஆகியவை பதிவு செய்யப் படுகின்றன (இவையெல்லாம் மைலாபூரைச் சேர்ந்த ஒரு RTO சொன்னது).

இதை அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்? கண்டிப்பாக முடியும். சிங்கப்பூர் கிட்டத்தட்ட நம் சென்னை அளவுதான். அங்கு மக்கட் தொகையும் கிட்டத்தட்ட சென்னையைப் போலதான். அங்கு சாலை நெரிசல் இல்லையா? இருக்கிறது. கார்களின் எண்ணிக்கையும் அதிகம்தான். இத்தனைக்கும் அந்த ஊர் போல பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் வேறு எங்கும் பார்க்க முடியாது. ஆனால் பார்கிங் வசதிகள் ஏராளம். ஒவ்வொரு கட்டிடமும் திட்டமிடப்பட்டு திறமையாக தேவையான பார்கிங் வசதிகளுடன் கட்டப்படுகின்றன.

பார்கிங் நெரிசலைக் கட்டுபடுத்த சிங்கப்பூர் அரசும் பார்கிங் கட்டணத்தை அதிகமாகவே வைத்துள்ளது. கார்களின் எண்ணிக்கையை குறைக்க இறக்குமதி செய்யப்படும் கார்களின் மேல் விதிக்கப்படும் வரியும் மிக அதிகம்.

ஆனால் சாலைகள்? அதைப் போன்ற சாலைகள் எல்லாம் இங்கு கனவுதான். காரணம் நம் அருமையான அரசியல்வாதிகள் .

அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதை விட்டு விட்டு நம் அரசாங்கம் தனியார் வாகனங்களின் மேல் தேவையில்லாமல் கண்டிப்பு காட்டுவது முட்டாள்தனம். இதெல்லாம் தெரிந்தும் நம் அரசு மெத்தனமாக இருப்பதின் காரணம் சொந்தமாக கார் வைத்திருப்பதில் 90% பேர் எந்த தேர்தலிலும் ஓட்டு போடப் போவதில்லை. எனவே அதைப் பற்றி புலம்பதான் முடியும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...