Skip to main content

வினோத கடத்தல் நாடகம்





உலகில் பல இடங்களில் நடக்கும் அக்கிரமங்களில் இது புது வகை குற்றம்: மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் சில நகரங்களில் கில்லாடித்தனமாக ஒரு கூட்டம் பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கும் இடங்களில் அவர்களை அணுகி விலையுயர்ந்த செல் போன், ஐ பாட் ஆகியவற்றை பரிசாகப் பெற வேண்டுமென்றால் ஒரு form இல் அவர்களுடைய பெயர், முகவரி, தொலைபேசி எண், படிக்கும் பள்ளி/கல்லூரியின் விவரம், பெற்றோர் பெயர், அவர்கள் வேலை விவரம், வேலை செய்யும் இடம், மாணவர்களின் பிரியமான நிறம், விளையாட்டு, பிடித்த நடிகர் என அத்தனை புள்ளி விவரங்களையும் பெற்று விடுகிறது.

பிறகு இந்த கூட்டம் மிகத் திறமையாக திட்டம் தீட்டி அந்த மாணவர் கும்பலில் பணக்கார மாணவர்களாகத் தேர்வு செய்து, நேரம் பார்த்து அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து உங்களயுடைய வாரிசை நாங்கள் கடத்தி விட்டோம், அவர்களை மீட்க வேண்டுமென்றால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு வெளியே நிற்கும் கருப்பு வேனின் பின்னால் ஒரு பெட்டியில் நகையோ அல்லது பணமோ அல்லது இரண்டுமோ வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என மிரட்டி அவர்களுடைய வாரிசுகளின் விவரங்களை வரிசையாக சொல்லும் போது பெற்றோர் மிகவும் பயந்து விடுகின்றனர்.

இந்த கடத்தல் கும்பல் பெற்றோர்க்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் செயல்பட்டு, புத்திசாலிதனமாக பணம் மற்றும் பொருளை கைப்பற்றி விடுகிறது.

இதையும் மீறி ஒன்று, இரண்டு பேர் எங்கள் மகன்/மகள் உன்னிடம் இருப்பதற்கு என்ன சாட்சி என்று கேட்டால் அவர்களை மிரட்டுவதற்கு அந்த வாரிசுகளின் தனிப்பட்ட விவரங்களை சொல்லி, மேலும் ஏதாவது தாமதம் செய்தால் வாரிசுகளின் உயிர் போய்விடும் என மிரட்ட, பயந்து போகும் பெற்றோர் உடனடியாக பணயத் தொகையை கொடுத்துவிடுகின்றனர்.

பின்னர் அந்தப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/கல்லூரியில் கேட்கும்போது அப்படி எதுவும் விபரீதம் நடக்கவில்லை எனதெரிந்து ஏமாறுகிறார்கள். இப்படிப்பட்ட கேஸ்கள் பெரும்பாலும் காவல்துறையை அணுகுவதேயில்லை. பிள்ளைகள் கடத்தப்பட்டு விட்டனர் என நினைத்து பணம் மற்றும் பொருளை இழந்தோர் ஏராளம் என்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்