Skip to main content

கிரிக்கெட் எங்கள் மதம்; சச்சின் எங்கள் கடவுள்



கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார்.

முதலில் லாராவின் உலக சாதனையை முறியடித்த சச்சின் பின்னர், அதே வேகத்தில் மற்றொரு மைல்கல்லையும் எட்டினார்; 12,000 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த முதல் சாதனையையும் எட்டினார்.

உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது:


எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்துள்ளனர். இதனை தற்போது மைல்கற்களாக மாற்றி காட்டியுள்ளேன். சாதனைகள் முறியடிப்பதற்கு தான். நான் 16 வயது இளம் வீரராக கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த போது சாதனை பற்றி நினைக்கவில்லை. எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.


சாதனை பற்றி எண்ணாமல் இன்னொரு 16 வயது வீரர் கூட அறிமுகமாகலாம். சவுரவ் கங்குலியும் நானும் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் 88 ரன்களில் அவுட்டானது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு சச்சின் கூறினார்.

இந்த வலைப் பதிவின் தலைப்பு சொல்வது போல இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களுக்கு கிரிக்கெட்தான் மதம், சச்சின்தான் கடவுள். இந்த உலக சாதனை படைத்த சச்சினால் இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் மகத்தான பெருமை.

Sachin, We Salute You!

எதிர்காலத்தில் இந்த சாதனை ரிக்கி பாண்டிங் என்ற குரங்கினால் முறியடிக்கப்படலாம், ஆனால், சச்சினின் இந்த சாதனை நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

with inputs from dinamalar.com

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...