Skip to main content

கிரிக்கெட் எங்கள் மதம்; சச்சின் எங்கள் கடவுள்



கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார்.

முதலில் லாராவின் உலக சாதனையை முறியடித்த சச்சின் பின்னர், அதே வேகத்தில் மற்றொரு மைல்கல்லையும் எட்டினார்; 12,000 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த முதல் சாதனையையும் எட்டினார்.

உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது:


எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்துள்ளனர். இதனை தற்போது மைல்கற்களாக மாற்றி காட்டியுள்ளேன். சாதனைகள் முறியடிப்பதற்கு தான். நான் 16 வயது இளம் வீரராக கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த போது சாதனை பற்றி நினைக்கவில்லை. எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.


சாதனை பற்றி எண்ணாமல் இன்னொரு 16 வயது வீரர் கூட அறிமுகமாகலாம். சவுரவ் கங்குலியும் நானும் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் 88 ரன்களில் அவுட்டானது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு சச்சின் கூறினார்.

இந்த வலைப் பதிவின் தலைப்பு சொல்வது போல இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களுக்கு கிரிக்கெட்தான் மதம், சச்சின்தான் கடவுள். இந்த உலக சாதனை படைத்த சச்சினால் இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் மகத்தான பெருமை.

Sachin, We Salute You!

எதிர்காலத்தில் இந்த சாதனை ரிக்கி பாண்டிங் என்ற குரங்கினால் முறியடிக்கப்படலாம், ஆனால், சச்சினின் இந்த சாதனை நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

with inputs from dinamalar.com

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்