Skip to main content

MRP எனப்படும் ஏமாற்று வேலை

நாம் எல்லோருமே தினசரி வாழ்கையில் பல பொருட்களை வாங்குகிறோம். கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையையும் சரி பார்க்கிறோம். MRP எனப்படும் இந்த Maximum Retail Price (அதிக பட்ச சில்லறை விலை) க்கு மேல் அந்த பொருளுக்கு பணம் தர வேண்டிய நிலைமை வந்தால் வியாபாரியிடம் காரணம் கேட்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்க உத்தரவின்படி எந்தவொரு வியாபாரியும் எந்த பொருளையும் இந்த MRP க்கு மேல் விலை வைத்து விற்கக்கூடாது என்று எதாவது சட்டம் அல்லது அரசாணை இருக்கிறதா என்றால், இருக்கிறது! Standards of Weights & Measures (Enforcement) Rules, 1985 என்ற சட்டபிரிவின் கீழ் MRP க்கு மேல் எந்தவொரு பொருளும் விற்கப்படக் கூடாது என்று இருந்தும் இதை யாரும் மதிப்பதில்லை. இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு தெரியுமா என்றால்,ஆச்சரியமான உண்மை, பெரும்பாலும் இல்லை.

என்னுடைய வாரிசுகளுக்கு Pizza என்றால் மிகவும் பிடிக்கும். (பெற்றோரின் கஞ்சத்தனம் காரணமாக பல பெற்றோர் என்னுடைய குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்சா ஆகிய எதுவுமே பிடிக்காது என்று சொல்லி தயிர் சாதம், இட்லி, தோசை தவிர வேறு எதுவுமே தெரியாத கிணற்று தவளைகளாக வளரும் குழந்தைகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். மேற்கண்ட பொருட்கள் எல்லாமே உடலுக்கு தீங்கு என்பதால் நாங்கள் அவற்றை எங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதில்லை என்ற வீண் வாதம் பற்றி நாம் இங்கு பேசப் போவதில்லை).

சமீபத்தில் டொமினோஸ் பிஸ்சா ஆர்டர் செய்துவிட்டு (பெரும்பாலான பிஸ்சா தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 65% வியாபாரத்தை Home Delivery மூலமே முடித்து விடுகிறார்களாம்) அது வீட்டுக்கு வந்தபோது அதன் கூட வந்த கோகோ-கோலா (600 ml) பாட்டிலின் MRP யை பார்த்தபோது Rs.30/- என்று அச்சாகியிருந்தது. வெளியே வாங்கும் 2 லி பாட்டின் விலை ரூ.50/- இதன்படி பார்த்தால் ஒரு லிட்டரின் விலை ரூ.25/- தான். அப்படியிருக்க 600 மிலி விலை எப்படி ரூ.30/- ஆகும் என்று கேட்டால் அதற்கு பதில் பாட்டிலின் மேல் இருக்கும் லேபலில் இருக்கிறது. MRP ரூ. 30/- என்றுதான் அச்சாகியிருக்கிறது. அந்த 600 மிலி பாட்டில் டொமினோஸ் பிஸ்சாவுக்கென்று தயாரான பாட்டில். சட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு நாள் தெரியாமல் one-way இல் புகுந்துவிட்டால் சட்டத்தை மீறிய குற்றமாகி போலீசுக்கு தண்டம் அழ வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.

கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களிலும் இந்த மாதிரி பகல் கொள்ளை நடக்கிறது. பல ரெஸ்டாரன்ட்களில் நாம் சிற்றுண்டியுடன் மினரல் வாட்டர் கேட்கும்போது, அதற்கான பில் தொகையை பார்ப்பதில்லை. பார்த்தால் வெளியே சாதாரணமாக ரூ.10 க்கு விற்கப்படும் அந்த மினரல் வாட்டரின் விலை சுமாராக ரூ.20 அல்லது ரூ.25 க்கு உங்களுக்கு பில்லில் வந்திருக்கும்.

தண்ணியில் மட்டுமில்லை, எல்லா நுகர் பொருட்களிலும் (consumer goods) இந்தமாதிரி கொள்ளை நடக்கிறது. MRP என்பதை பேசாமல் Minimum Retail Price என்று மாற்றிவிடலாம். நம்முடைய பேதை மனம் அப்போதாவது சமாதானம் ஆகுமா என்று பார்க்கலாம்.

Comments

Unknown said…
தண்ணி, பீட்ஸா போன்ற மேல் தட்டு வர்க்க வஸ்துக்களுக்கு MRP என்பது Minimum Recommended price ஆக இருக்கும். துவரம் பருப்பு; உளுத்தம் பருப்பு போன்ற மத்திய தர வர்க்க சாமான்கள் எல்லாமே (underline) எல்லாமே MRP விட குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
Unknown said…
மேலும் இது போன்ற வஸ்துக்களை வாங்கும்போது அவன் கேட்கும் விலையை வாயையும் அதையும் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுவோம். ஆனால் செருப்பு தைப்பவனிடம் பேரம் பேசுவோம். நான் ஒருமுறை செருப்பு தைக்க நின்றுகொண்டிருந்தபோது எனக்கு முன் இருந்தவர் "அதே ஊசி தான் வைத்திருக்கிறாய். நூலும் விலை ஏற வில்லை. ஆனால் தைப்பதற்கு மட்டும் ஏன் பத்து ரூபாய் கேட்கிறாய்" என்றவாறே என்னை பார்க்க நான் , " ஆனால் அரிசியும் பருப்பும் விலை ஏறி விட்டது. அதே அரிசியையும் பருப்பையும் தானே அவனும் வாங்கி சாப்பிட வேண்டும் என்றேன்". சொன்னவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...