Skip to main content

Enemy of the State




வில் ஸ்மித் நடித்து 1998 இல் வெளிவந்த இந்த படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Tony Scot இந்த படத்தின் டைரக்டர்.

இவர் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அவற்றில் சில: Crimson Tide (Denzel Washington & Gene Hackaman), Last Boy Scout (Bruce Willis), Days of Thunder, Top Gun (இரண்டிலும் ஹீரோ Tom Cruise), Man on Fire, Deja' Vu (இரண்டிலும் ஹீரோ Denzel Washington)

படத்தில் வரும் Jon Voight அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி எல்லோருடைய தொலைபேசிகளையும் ஒட்டு கேட்கலாம், யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வர ஆசைப்படுகிறார். இதற்கு தடையாக இருக்கும் செனட்டர் (நம் ஊர் MP போல) ஒருவரைப் போட்டு தள்ளுகிறார். இது ஒரு ஏரியின் அருகே நடக்கும் போது, அங்கு வரும் பறவைகளை கண்காணிக்கும் ஒருவரால் வைக்கப்படும் வீடியோ கேமரா அதை துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. இதை அறியும் Jon Voight இன் அடியாட்கள் அந்த வீடியோவை பறிக்க முயலும் போது அதை படம் எடுத்தவர் விபத்தில் இறந்து விடுகிறார். இறப்பதற்கு முன் ஒரு கடையில் வில் ஸ்மித் ஐ பார்க்கும் போது, அவருக்கு தெரியாமல் அவர் பையில் அந்த வீடியோ காசெட்டை போட்டுவிட, வில் ஸ்மித் ஐ சனி பிடிக்கிறது.

வில் ஸ்மித் ஏற்கனவே ஒரு இத்தாலிய தாதாவால் ஒரு கேசில் மிரட்டபடுகிறார். இந்த வீடியோ கேசட்டால் அடுத்தடுத்து அவர் கஷ்டங்களை அனுபவிக்கிறார்; வேலை போகிறது, முன்னாள் காதலி கொல்லப்பட்டு அந்த பழி இவர் மீது விழுகிறது, மனைவி அவரை வீட்டைவிட்டு விரட்டுகிறார், கிரெடிட் கார்டுகள் தீடீரென காலாவதி ஆகின்றன, இவ்வளவு போதாதா அவர் பழி வாங்க?

எதற்காக என்று தெரியாமல் இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிக்கும் அவர், Gene Hackman ஐ சந்திக்கும் போது எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்கிறார். பிறகு முக்கிய வில்லன் Jon Voight ஐ அவருடைய பாணியிலேயே சென்று பழி வாங்குகிறார்.

1998 இல் வெளி வந்த இந்த படம், அதிகபட்ச technology யால் வரும் தீமைகளை ரொம்ப அழகாக விவரிக்கிறது. அமெரிக்காவின் அத்தனை satellites ஐயும் வைத்துக்கொண்டு வில்லன் கதாநாயகனை விரட்டும் போது ஆரம்பிக்கும் வேகம் கடைசி frame வரைக்கும் தொடர்கிறது.

வில் ஸ்மித்தின் எல்லா படங்களிலும் இருக்கும் நக்கல் (black humour) இந்த படத்திலும் இருக்கிறது. உதாரணத்திற்கு சில: தன்னுடைய பல பொருட்கள் திருட்டு போனாலும், தன்னுடைய blender (நம்மூரில் மிக்சி) காணாமல் போனதற்கு புலம்பும் அவர், கடைசியில் வில்லனின் வேனில் அதை பார்த்தவுடன் தான் பட்ட அடிகளை மறந்து விட்டு "இதோ என் blender," என்கிறார், வில்லனின் ஆள் நக்கலாக, " இந்த வேலையை முடித்துவிட்டு வா, இதை gift pack செய்து வைக்கிறேன்," என்கிறான்; Gene Hackman காரில் வரும்போது, "எனக்கு டயப்டீஸ் இருப்பதால் அவ்வப்போது ஏதாவது சாப்பிடாவிட்டால் கொஞ்சம் cranky ஆகிவிடுவேன்," என்பதற்கு, "சாப்பிடவிட்டால்தானா?" என்று சொல்லி கலாய்க்கிறார்;வில் ஸ்மித்தின் மனைவி அவரிடம், "என்னைத் தவிர உன் வாழ்க்கையில் வேறு பெண்களுக்கு இடம் இல்லைதானே?" என்று கேட்பதற்கு, " ஆமாம், உன்னையும் Janet Jackson (Michael Jackson தங்கை, பிரபல பாடகி) ஐயும் தவிர வேறு யாருமில்லை," என்கிறார்.

படம் முழுக்க இருக்கும் வேகம் ஒரு அருமையான த்ரில்லரைப் பார்த்த திருப்தியைத் தருகிறது.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...