Skip to main content

யுவராஜ் சிங் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்



















நேற்று இரவு IPL இரண்டாவது semi-finals பார்த்தவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருக்கும். இத்தனை நாளும் அலட்டிக் கொண்டு திரிந்த யுவராஜ் சிங், தோற்ற பிறகும் அலட்டலை குறைத்து கொள்ளவில்லை. வாய் திறந்து தோனியை பாராட்டும் பண்பாடு வரவில்லை. இது இன்று நேற்று ஆரம்பித்த ego clash அல்ல. தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக அறிவித்த நாள் முதல் புகையும் ஒரு விஷயம். யுவராஜ் சிங்கின் தந்தை ஒவ்வொரு சானலாக பேட்டி கொடுத்து 'என் மகனுக்கு என்ன குறை, என் அவனை கேப்டனாக்கவில்லை?' என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

யுவராஜும் தன் பங்கிற்கு எந்த ஒரு ODI போட்டியிலும் சரியாக விளையாடாமல் சொதப்பிக் கொண்டிருந்தார். IPL இந்த சமயத்தில் சரியாக கை கொடுத்தது. ஆரம்பத்தில் சொதப்பிய அணி பிறகு வெகுவாக பிக்-அப் செய்தது.

கிங்க்ஸ்-11 அணி வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்தது. எதற்கெடுத்தாலும் தோனியை நக்கல் செய்யும் யுவராஜ் அவருடைய அணியின் வெற்றிக்கு பெரிதும் துணையாய் இருந்தது ஷேன் மார்ஷ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோரின் பேட்டிங், மற்றும் பியுஷ் சாவ்லா, இர்பான் பதான் ஆகியோரின் பௌலிங் என்பதை உணர்ந்திருந்தாரா என்பது பெரிய கேள்விகுறி.

இன்று நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் செமத்தியாக சீன் போட்டுக் கொண்டு திரியும் ஷேன் வார்னுக்கு தோனி ஆப்பு வைக்க வேண்டுமென நினைக்கிறேன். ஷேன் வாட்சன் மற்றும் யுஸுப் படான் பேட்டிங் மற்றும் ஷேன் வாட்சன், தன்விர் ஆகியோரின் பௌலிங் ஆகிய இரண்டையும் தோனி & கோ சமாளித்து விட்டால் பிறகு பிரச்சினை இல்லை. க்ரீம் ஸ்மித் இல்லாதது சென்னை அணிக்கு கூடுதல் பலம்.

பார்க்கலாம், இந்த தோனி (தோணி) சென்னை டீமை கரை சேர்க்குமா என்று.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்